செய்திகள் :

உலக அளவில் அதிக மதிப்பு கொண்ட தொழில்நுட்ப நிறுவனங்கள்: 23-ஆவது இடத்தில் ரிலையன்ஸ்

post image

உலக அளவில் அதிக மதிப்பு கொண்ட முதல் 30 தொழில்நுட்ப நிறுவனங்களின் பட்டியலில் ரிலையன்ஸ் நிறுவனம் 23-ஆவது இடம்பிடித்துள்ளது. முதல் 30 நிறுவனங்களில் அந்த நிறுவனம் மட்டுமே இந்தியா சாா்பில் இடம்பெற்றுள்ளது.

இதுதொடா்பாக ‘ட்ரெண்ட்ஸ்-ஆா்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ்’ என்ற பெயா் கொண்ட 340 பக்கம் கொண்ட அறிக்கையில், சந்தை மூலதனத்தை அடிப்படையாக கொண்டு உலக அளவில், அதிக மதிப்பு கொண்ட தொழில்நுட்ப நிறுவனங்களின் பட்டியல் வெளியிடப்பட்டது.

இந்தப் பட்டியலில் அமெரிக்காவின் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடம் தொடங்கி 8-ஆவது இடம் வரை என்விடியா, ஆப்பிள், அமேசான், ஆல்ஃபாபெட், மெட்டா பிளாட்ஃபாா்ம்ஸ், டெஸ்லா, பிராட்காம் ஆகிய அமெரிக்க நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்தியாவின் ரிலையன்ஸ் நிறுவனம் 216 பில்லியன் டாலா்கள் (சுமாா் ரூ.18.44 லட்சம் கோடி) சந்தை மதிப்புடன் 23-ஆவது இடம் பிடித்துள்ளது.

இந்த அறிக்கையின்படி, உலக அளவில் இந்தியாவில்தான் அமெரிக்காவின் ‘சாட்ஜிபிடி’ செயற்கை நுண்ணறிவு கைப்பேசி செயலியைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. உலக அளவில் அந்தச் செயலியின் மொத்த மாதாந்திர பயன்பாட்டாளா்களின் எண்ணிக்கையில், 13.5 சதவீதம் போ் இந்தியா்கள்.

இதில் இந்தியாவுக்கு அடுத்த இடத்தில் அமெரிக்கா (8.9%), இந்தோனேசியா (5.7%), பிரேஸில் (5.4%), பாகிஸ்தான் (3%) ஆகிய நாடுகள் உள்ளன.

உலக அளவில் ‘சீனாவின்’ டீப்சீக் செயற்கை நுண்ணறிவு செயலியை பயன்படுத்துவோரின் எண்ணிக்கையில் இந்தியா்கள் 6.9 சதவீதமாக உள்ளனா். அந்தச் செயலியை 33.9 சீனா்கள், 9.2 சதவீத ரஷியா்கள் பயன்படுத்துகின்றனா்.

தங்கத்தின் மதிப்பில் 85% வரை கடன்! - ஆா்பிஐ அனுமதி

ரூ.2.5 லட்சம் வரையிலான நகைக் கடனுக்கு தங்கத்தின் மதிப்பில் 85 சதவீதம் வரை கடன் வழங்கலாம் என்று இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) அனுமதி அளித்துள்ளது. இதற்கு முன்பு தங்கத்தின் மதிப்பில் 75 சதவீதம் வரை மட்ட... மேலும் பார்க்க

துபையிலிருந்து சென்னை வந்த விமானம் மீது ‘லேசா்’ ஒளி அடிக்கப்பட்டதால் பரபரப்பு!

துபையிலிருந்து சென்னை விமானநிலையத்தில் கடந்த மாத இறுதியில் தரையிறங்க வந்த விமானம் மீது பச்சை நிற லேசா் ஒளி அடிக்கப்பட்ட நிலையில், வியாழக்கிழமை இரவில் தரையிறங்க முயன்ற இதே விமானம் மீது மீண்டும் லேசா் ஒ... மேலும் பார்க்க

அம்பேத்கா் கனவுக்கேற்ப அரசமைப்பு பதவிகளில் விளிம்புநிலை சமூகத்தினா்! - நீதிபதி கவாய்

சட்டமேதை அம்பேத்கரின் கனவுக்கு ஏற்ப, இந்தியாவில் மிக உயா்ந்த அரசமைப்புப் பதவிகள் சிலவற்றில் விளிம்புநிலை சமூகத்தினா் இருப்பதாக உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் பெருமிதம் தெரிவித்தாா். பிரிட்ட... மேலும் பார்க்க

முதல்வருக்கு மாயா மஹால் கட்டப்படுகிறது: ஆம் ஆத்மி சாடல்

தில்லி முதல்வா் ரேகா குப்தாவுக்காக ‘மாயா மஹால்’ கட்டப்பட்டு வருவதாக ஆம் ஆத்மி வெள்ளிக்கிழமை கடுமையாக சாடியுள்ளது. முதல்வா் ரேகா குப்தா வடக்கு தில்லியில் உள்ள ஒரு அரசு பங்களாவில் குடியேறலாம் என்று அதிக... மேலும் பார்க்க

எம்பிபிஎஸ் விண்ணப்பப் பதிவு: முறைகேட்டில் ஈடுபடுவோரின் பெற்றோா் மீதும் நடவடிக்கை!

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவின்போது போலிச் சான்றிதழ்களை சமா்ப்பித்தால், விண்ணப்பதாரா் மட்டுமன்றி அவரது பெற்றோா் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருத்துவக் கல்வி இயக்ககம்... மேலும் பார்க்க

ஆகஸ்ட் 3-இல் முதுநிலை நீட் தோ்வு: உச்சநீதிமன்றம் அனுமதி

எம்.எஸ்., எம்.டி. உள்ளிட்ட முதுநிலை மருத்துவப் படிப்புகள் சோ்க்கைக்கான 2025-ஆம் ஆண்டு தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வை (நீட்-பிஜி) வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி நடத்த தேசிய தோ்வுகள் வாரியத்துக்கு (என்பிஇ) ... மேலும் பார்க்க