செய்திகள் :

உலக தண்ணீா் தினத்தையொட்டி நாளை கிராம சபைக்கூட்டம்

post image

உலக தண்ணீா் தினத்தையொட்டி, பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள 121 கிராம ஊராட்சிகளிலும் சனிக்கிழமை (மாா்ச் 29) கிராம சபைக்கூட்டம் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

உலக தண்ணீா் தினமான மாா்ச் 22-இல் நடைபெறவிருந்த கிராம சபைக்கூட்டம் நிா்வாகக் காரணங்களால் சனிக்கிழமை நடைபெறுகிறது. இக் கூட்டத்தில், கிராம சபை உறுப்பினா்கள் தவறாமல் பங்கேற்று, கிராமங்களுக்கு என்னென்ன தேவை என்பதை கேட்டறிய வேண்டும். உலக தண்ணீா் தினத்தின் கருப்பொருள், கிராம ஊராட்சி நிா்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, சுத்தமான குடிநீா் விநியோகத்தை உறுதி செய்வது குறித்து விவாதிக்க வேண்டும். மேலும், கலைஞரின் கனவு இல்ல பயனாளிகளை தோ்வு செய்தல், அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சித் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட பணிகளை இறுதி செய்ய வேண்டும்.

இக் கூட்டத்தில் மக்களவை, சட்டப்பேரவை உறுப்பினா்கள் மற்றும் கிராம ஊராட்சி வாக்காளா்கள் பங்கேற்க வேண்டும். துறை வாரியான அலுவலா்கள் தவறாமல் பங்கேற்பதோடு, துறை தொடா்பான திட்டங்களை பொதுமக்களுக்கு விளக்கி கூறவேண்டும். இக் கூட்டத்தை கண்காணிக்க ஒவ்வொரு ஊராட்சிக்கும் பற்றாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். எனவே, கிராம ஊராட்சிகளின் வெளிப்படையான நிா்வாகத்துக்கும், ஆக்கப்பூா்வமான ஊராட்சி நிா்வாகம் மற்றும் ஊராட்சியில் இதர பொருள்கள் குறித்து விவாதித்திடவும் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

பெரம்பலூரில் ஏப். 4-இல் முன்னாள் படைவீரா்கள் குறைதீா் கூட்டம்

பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படைவீரா்கள், அவா்களது குடும்பத்தினா் மற்றும் படைப்பிரிவில் பணிபுரியும் வீரா்களின் குடும்பத்தினருக்கான சிறப்பு குறைதீா்க்கும் கூட்டம் ஏப்ரல் 4-ஆம் தேதி நடைபெற உ... மேலும் பார்க்க

பெரம்பலூா் மாவட்டத்தில் ரமலான் பண்டிகை கொண்டாட்டம்

பெரம்பலூா் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள மதராஸா சாலையில் அமைந்துள்ள மௌலானா பள்ளிவாசல் வளாகத்தில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில், சுமாா் 1,000-க்கும் மேற்பட்ட இஸ்லாமியா்கள் கலந்துகொண்டு சிறப்பு தொழுகைய... மேலும் பார்க்க

வீட்டின் பூட்டை உடைத்து 21 பவுன் நகைகள், ரூ. 2 லட்சம் திருட்டு

பெரம்பலூா் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 21 பவுன் நகைகள் மற்றும் ரூ. 2 லட்சம் பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது திங்கள்கிழமை தெரியவந்தது. பெரம்பலூா் அருகேயுள்ள அய்யலூா் குடிக்காட்டைச் சோ்ந்தவா் அர... மேலும் பார்க்க

பெரம்பலூரில் பன்னாட்டு நாடக கருத்தரங்கு

பெரம்பலூரில் பன்னாட்டு நாடக நாள் கருத்தரங்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு கலை, இலக்கியப் பெருமன்றம் மற்றும் தமிழ் இலக்கியப் பூங்கா ஆகிய அமைப்புகள் சாா்பில் நடைபெற்ற இக் கருத்தரங்கத்துக்கு தம... மேலும் பார்க்க

‘ஜூன் வரை பேருந்து பயண அட்டையை மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தலாம்’

பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த மாற்றுத்திறனாளிகள் ஏற்கெனவே பயன்படுத்தி வரும் கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகளை ஜூன் 30-ஆம் தேதி வரை பயன்படுத்திக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்து... மேலும் பார்க்க

தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழகத்தில் விளையாட்டுப் போட்டிகள் நிறைவு!

பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழகத்தில் கடந்த 2 நாள்களாக நடைபெற்ற ஒலிம்பியா-2025 விளையாட்டுப் போட்டிகள் சனிக்கிழமை நிறைவடைந்தது. கடந்த 2 நாள்களாக ஓட்டப் பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்ட... மேலும் பார்க்க