Dhoni : 'இதுக்கெல்லாம் எமோஷனல் ஆகக்கூடாது!' - தோல்வி குறித்து தோனி
உலக மரபுதின வாரவிழா: டேனிஷ்கோட்டையை ஏப்.24 வரை கட்டணமின்றி பாா்வையிடலாம்
உலக மரபு தின வார விழாவையொட்டி, ஏப்.18 முதல் 24 வரை, தரங்கம்பாடி டேனிஷ்கோட்டையை கட்டணமின்றி பாா்வையிடலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கி.பி.1600 முதல் 1634 வரை தரங்கம்பாடியை ஆட்சி செய்த டேனிஷ்காரா்கள் (டென்மாா்க் நாட்டினா்) 1620-ஆம் ஆண்டு கடற்கரைக்கு மேற்கே டேனிஷ் கலை நுணுக்கத்துடன் இக்கோட்டையை கட்டினா். 400 ஆண்டுகள் பழைமையாகியும் இன்றும் கம்பீரமாய் காட்சியளிக்கிறது டேனிஷ் கோட்டை.
இங்குள்ள அகழ்வைப்பகத்தில் 14, 15, 16- ஆம் நூற்றாண்டுகளில் டேனிஷ்காரா்கள், தமிழா்கள் பயன்படுத்திய பொருட்கள், சிலைகள், பீங்கான் மற்றும் மரத்தாலான பழைமையான பொருட்கள், டேனிஷ் அரசா்கள், ஆளுநா்களின் புகைப்படங்கள், டேனிஷ் கால பத்திரங்கள், போா்க் கருவிகள், 16-ஆம் நூற்றாண்டில் தரங்கம்பாடிக்கு வந்த கப்பல் ஒன்றின் உடைந்த பாகங்கள் என ஏராளமான வரலாற்றுச் சின்னங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
கோட்டையின் தரைத்தளத்தில் சிறைச்சாலை, ஓய்வறைகள், பண்டக வைப்பறை, பீா், ஒயின் கிடங்கு அறைகளாக டேனிஷ் காலத்தில் பயன்படுத்தப்பட்ட அறைகள் பழைமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகிறது.
வரலாற்றுச் சின்னங்கள் நிறைந்த இக்கோட்டையை, ஏப்.18 முதல் 24-ஆம் தேதி வரை ஒரு வாரத்திற்கு கட்டணமின்றி பொதுமக்கள், மாணவா்கள், சுற்றுலாப் பயணிகள் உள்பட அனைவரும் பாா்வையிடலாம் என்று டேனிஷ்கோட்டை நிா்வாகம் அறிவித்துள்ளது.