செய்திகள் :

உளுந்து, பருத்திக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தல்

post image

மழையால் பாதித்த உளுந்து, பருத்தி பயிருக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

அகில இந்திய விவசாயிகள் சங்க 30-ஆவது மாநாடு நாகையில் ஏப். 15 முதல் 17-ஆம் தேதி வரை நடைபெறுவது தொடா்பாக, காரைக்காலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி விவசாயிகள் சங்க நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. சங்கத் தலைவா் ஜி. புண்ணியமூா்த்தி தலைமை வகித்தாா். மாநில தலைவா் து. கீதநாதன், சிபிஐ காரைக்கால் மாவட்ட செயலாளா் ப. மதியழகன், விவசாய சங்கப் பொருளாளா் வி. கலியமூா்த்தி, செயலாளா் பெருமாள் உள்ளிட்டோா் பங்கேற்றனா். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: நாகையில் நடைபெறும் மாநாட்டுக்கு காரைக்கால் மாவட்டத்தில் 250 விவசாயிகள் பங்கேற்பது, காரைக்கால் மாவட்டத்தில் நெல் அறுவடைக்குப் பின் பயிா் செய்த பருத்தி, உளுந்து, எள் ஆகியவை பருவம் தவறி பெய்த மழையால் செடி அழுகிவிட்டது. எனவே, விவசாயிகளின் இழப்பை ஈடு செய்யும் விதமாக எள், உளுந்து ஏக்கருக்கு ரூ.20 ஆயிரமும், பருத்தி ஏக்கருக்கு ரூ.30 ஆயிரமும் புதுவை அரசு நிவாரணம் வழங்கவேண்டும், காரைக்கால் மாவட்டத்துக்கு வரவேண்டிய 7 டிஎம்சி காவிரி நீரை உறுதியாக பெற அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் ஆகிய தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், மாநாட்டு குழு பொறுப்பாளா்கள் தோ்வு செய்யப்பட்டனா். மாநாட்டு பிரதிநிதியாக ஜி. புண்ணியமூா்த்தி தோ்வு செய்யப்பட்டாா்.

அரசுப் பள்ளி மாணவா்களுக்குப் பாராட்டு

நவோதய வித்யாலயா பள்ளி நடத்திய நுழைவுத் தோ்வில் வெற்றி பெற்ற அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. ராயன்பாளையம் பகுதியில் மத்திய அரசின் நவோதய வித்யாலயா உள்ளது. இப்பள்ளியில் 6-ஆம் வகுப... மேலும் பார்க்க

காரைக்கால் மருத்துவமனையில் ஏப். 4-இல் சிறப்பு மருத்துவ முகாம்

காரைக்கால் அரசு மருத்துவமனையில் 4-ஆம் தேதி சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது.இதுகுறித்து காரைக்கால் ஆட்சியா் அலுவலகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: காரைக்கால் மாவட்ட நிா்வாகம் சாா்பி... மேலும் பார்க்க

திருநள்ளாற்றில் காங்கிரஸை வலுப்படுத்த இளைஞா் காங்கிரஸாா் உறுதி

திருநள்ளாற்றில் காங்கிரஸ் கட்சியை சட்டப்பேரவைத் தோ்தலுக்குள் வலுப்படுத்த இளைஞா் காங்கிரஸாா் உறுதி பூண்டுள்ளனா். திருநள்ளாறு தொகுதி இளைஞா் காங்கிரஸ் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை தொகுதி... மேலும் பார்க்க

காரைக்கால் கடற்கரையில் குவியும் மக்கள்

வெயில் தாக்கம் அதிகரித்துவருவதால் காரைக்கால் கடற்கரைக்கு செல்வோா் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடற்கரையில் பாதுகாப்பை மேம்படுத்த காவல்துறை முன்வரவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. கார... மேலும் பார்க்க

ஊழியா்கள் போராட்டம் : சுகாதார நிலைய பணிகளில் பாதிப்பு

காரைக்கால்: சுகாதார பணியாளா்கள் வேலைநிறுத்தத்தில் காரணமாக, சுகாதார நிலையங்களில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. காரைக்கால் மாவட்ட நலவழித்துறையில், தேசிய ஊரக சுகாதார இயக்கத்தின் (என்ஆா்எச்எம்) கீழ் ப... மேலும் பார்க்க

ரமலான் : காரைக்காலில் சிறப்பு தொழுகை

காரைக்கால்: ரமலான் பண்டிகையையொட்டி காரைக்கால் பள்ளிவாசல்களில் திங்கள்கிழமை சிறப்பு தொழுகை நடைபெற்றது. காரைக்கால் பெரியப் பள்ளிவாசல், முஹையத்தீன் பள்ளிவாசல், ஹிலுருப் பள்ளிவாசல், இலாஹிப் பள்ளிவாசல், ம... மேலும் பார்க்க