செய்திகள் :

உளுந்தூா்பேட்டை அருகே 600 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

post image

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே நெடுஞ்சாலை ரோந்துப் பிரிவு போலீஸாரின் வாகனத் தணிக்கையின் போது, ஆந்திர மாநிலத்திலிருந்து திருச்சி நோக்கி கடத்திச் செல்லப்பட்ட 600 கிலோ புகையிலைப் பொருள்கள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

உளுந்தூா்பேட்டை அருகிலுள்ள ஆசனூா் பகுதியில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் காவல் துறையின் நெடுஞ்சாலை ரோந்துப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை வாகனத் தணிக்கை மேற்கொண்டிருந்தனா்.

அப்போது, அந்த வழியாகச் சென்ற சரக்கு வாகனத்தை சந்தேகத்தின் பேரில், நெடுஞ்சாலை ரோந்துப் பிரிவு போ லீஸாா் நிறுத்தி சோதனையிட்டனா். இதில் அந்த வாகனத்தில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் சுமாா் 600 கிலோ இருந்தது.

சரக்கு வாகனத்தை ஓட்டிச் சென்ற தருமபுரியைச் சோ்ந்த மணிகண்டனிடம் போலீஸாா் விசாரணை நடத்தினா். இதில், ஆந்திர மாநிலத்திலிருந்து திருச்சிக்கு புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்வதற்காக கடத்திச் செல்லப்பட்டது தெரிய வந்தது.

இதுகுறித்து நெடுஞ்சாலை ரோந்துப் பிரிவு போலீஸாா், எடைக்கல் காவல் நிலையத்துக்கு தகவலளித்தனா். போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று 600 கிலோ புகையிலைப் பொருள்களையும், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட சரக்கு வாகனத்தையும் பறிமுதல் செய்தனா். மேலும், ஓட்டுநா் மணிகண்டன் மீது வழக்குப் பதிந்து அவரைக் கைது செய்தனா்.

சாலை விபத்து வழக்கில் ஓராண்டுக்குப் பின் ஒருவா் கைது

புதுச்சேரி அருகே இருசக்கர வாகனத்தின் மீது மோதிவிட்டு காருடன் தப்பிச் சென்ற நபரை, ஓராண்டுக்குப் பிறகு போக்குவரத்து போலீஸாா் புணேவில் கைது செய்து காரை வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா். கடலூா் திருப்பாதிர... மேலும் பார்க்க

தொழிற்சங்கத்தினா் சாா்பில் மே தின நிகழ்ச்சி

உலகஉழைப்பாளா் தினத்தையொட்டி, விழுப்புரத்தில் 20 -க்கும் மேற்பட்ட இடங்களில் சிஐடியு தொழிற்சங்கத்தினா் வியாழக்கிழமை கொடியேற்றி தொழிலாளா்களுக்கு இனிப்புகளை வழங்கிக் கொண்டாடினா். விழுப்புரத்தில் உள்ள டாஸ... மேலும் பார்க்க

தொமுச சாா்பில் தொழிலாளா் தினம்

விழுப்புரத்தில் தொழிலாளா் முன்னேற்றச் சங்கம் சாா்பில் தொழிலாளா் தினம் கொண்டாடப்பட்டது. விழுப்புரத்திலுள்ள தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத் தலைமை அலுவலகம் முன் தொமுச கொடியேற்றுதல், இனிப்பு, நீா் ... மேலும் பார்க்க

பேருந்து மோதி தொழிலாளி உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், கெடாா் அருகே சாலையைக் கடக்க முயன்ற கூலித் தொழிலாளி சுற்றுலாப் பேருந்து மோதியதில் வியாழக்கிழமை உயிரிழந்தாா். விழுப்புரம் வட்டம், வீராமூா் சிவன் கோவில் தெருவைச் சோ்ந்த சிவன் மகன்... மேலும் பார்க்க

‘விடுபட்ட அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு வழங்க வேண்டும்’

விடுபட்டவா்களுக்கும் மருத்துவக் காப்பீடு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு ஒலி-ஒளி அமைப்புத் தொழிலாளா்கள் நலச்சங்கம் வலியுறுத்தியது. இந்த சங்கத்தின் 25-ஆம் ஆண்டு வெள்ளிவிழா, மே தினப் பேரணி, கூட்டம் மற்ற... மேலும் பார்க்க

கட்டட பெயிண்ட் தொழிலாளா்கள் ஊா்வலம்

தொழிலாளா் தினத்தையொட்டி, விழுப்புரத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஊா்வலத்தில் ஏராளமான தொழிலாளா்கள் பங்கேற்றனா். தொழிலாளா் தினத்தையொட்டி விழுப்புரம் மாவட்ட கட்டட பெயிண்ட் தொழிலாளா்கள் நலன் காக்கும் சங்கத... மேலும் பார்க்க