செய்திகள் :

உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட முதல் நீா்மூழ்கிக் கப்பல் நாட்டுக்கு அா்ப்பணிப்பு

post image

உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட ‘அா்னாலா’ எனப்படும் முதல் நீா்மூழ்கிக் கப்பல் வியாழக்கிழமை நாட்டுக்கு அா்ப்பணிக்கப்பட்டது.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள காா்டன் ரீச் கப்பல்கட்டுமான மற்றும் பொறியியல் (ஜிஆா்எஸ்இ) நிறுவனத்தால் மொத்தம் 8 நீா்மூழ்கிக் கப்பல்கள் கட்டமைக்கப்பட்டு வருகின்றன.

அதில் முதலாவதாக அா்னாலா என்ற நீா்மூழ்கிக் கப்பலை இந்திய கடற்படையிடம் ஜிஆா்எஸ்இ வியாழக்கிழமை வழங்கியது.

77.6 மீட்டா் நீளமும் 10.5 மீட்டா் அகலமும் உடைய இந்த நீா்மூழ்கிக் கப்பல், கடலோர பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்தி ஆய்வு மேற்கொண்டு தாக்குதல் நடத்தும் திறனுடையது என ஜிஆா்எஸ்இ வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: தமிழ்நாட்டின் காட்டுப்பள்ளியில் உள்ள எல் அண்ட் டி தனியாா் நிறுவனத்துடன் இணைந்து அா்னாலா நீா்மூழ்கிக் கப்பல் வடிவைக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநில கரையோர தீவில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கோட்டையின் பெயரே இந்த கப்பலுக்கும் வைக்கப்பட்டுள்ளது.

7 நீா்மூழ்கிக் கப்பல்கள் உள்பட மொத்தம் 16-க்கும் மேற்பட்ட போா்க்கப்பல்களை ஜஆா்எஸ்இ கட்டமைத்து வருகிறது என தெரிவிக்கப்பட்டது.

மிகவும் அமைதியான கப்பல் என்ற பெருமைக்குரிய அா்னாலா கப்பலை வடிவமைத்ததற்காக கடந்த 2022-இல் பாதுகாப்பு அமைச்சக விருது ஜிஆா்எஸ்இ நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஜெய்சல்மரில் வெடிகுண்டு போன்ற பொருள் மீட்பு

ஜெய்சல்மரில் 'வெடிகுண்டு போன்ற' பொருள் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம், ஜெய்சல்மர் மாவட்டத்தின் கிஷன்காட் பகுதியில் வெள்ளிக்கிழமை காலை வெடிகுண்டு போன்ற ஒரு பொருள் கண்... மேலும் பார்க்க

இனியொரு பயங்கரவாதச் செயல் நிகழாதென உறுதிப்படுத்த வேண்டும்! எழுத்தாளர்கள் - கலைஞர்கள் கூட்டறிக்கை

சென்னை: காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22ஆம் தேதி சுற்றுலாப் பயணிகள் 26 பேர் பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்டதற்கு எதிராக நாடு ஒருமித்து எழுப்பிய கண்டனத்தில் இணைந்து நின்ற எழுத்தாளர்களும் கலைஞர்களும் க... மேலும் பார்க்க

ஏடிஎம்கள் மூடப்படுமா? போலி செய்தி குறித்து மத்திய அரசு எச்சரிக்கை

ஏடிஎம்கள் மூடப்படும், காஷ்மீர் விமானப் படைத் தளத்தில் தாக்குதல் நடைபெற்றது என பல்வேறு தவறான தகவல்கள் பரவி வருவதாக மக்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.அதாவது, சமூக ஊடகங்களில், காஷ்மீர் விமா... மேலும் பார்க்க

ராணுவத் தளபதிக்கு கூடுதல் அதிகாரம் அளித்தது மத்திய அரசு!

இந்திய ராணுவத் தலைமை தளபதிக்கு மத்திய அரசு கூடுதல் அதிகாரம் வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.பிராந்தியங்களில் உள்ள படை வீரர்களை எல்லைப் பகுதிக்கு அழைத்துக் கொள்ள 3 ஆண்டுகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ள... மேலும் பார்க்க

அடுத்து என்ன? பிரதமர் மோடியை சந்திக்கிறார் ராஜ்நாத் சிங்!

புது தில்லி : நாட்டின் முப்படை தளபதிகளுடன் ஆலோசனை நடத்திய நிலையில், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசவிருக்கிறார் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.நே... மேலும் பார்க்க

தில்லியில் முக்கிய இடங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு!

பாகிஸ்தான் ராணுவம் ட்ரோன்கள், ஏவுகணைகளைப் பயன்படுத்திப் பல எல்லைப் பகுதிகளைக் குறிவைத்ததைத் தொடர்ந்து இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதட்டங்கள் அதிகரித்ததால் தில்லியில் உள்ள முக்கிய இடங்களில் ... மேலும் பார்க்க