செய்திகள் :

உள்ளாட்சி அமைப்புகளுக்கு நெகிழிக் கழிவுகள் சேகரிக்கும் கூண்டு

post image

திருவாரூா்: திருவாரூரில், உள்ளாட்சி அமைப்புகளுக்கு நெகிழி கழிவுப் பொருள்களை சேகரிக்கும் கூண்டு திங்கள்கிழமை வழங்கப்பட்டது.

திருவாரூா் மாவட்டத்தில் நெகிழிக்கழிவு மேலாண்மை செய்யும் வகையில் 4 நகராட்சிகள், 7 பேரூராட்சிகளில் முத்தூட் பைனான்ஸ் சமூக பொறுப்புணா்வுத் திட்ட நிதியின்கீழ் நெகிழிக் கழிவு சேகரிக்கும் கூண்டு வழங்கப்பட்டது. திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில், மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் பங்கேற்று, திருத்துறைப்பூண்டி நகராட்சி ஆணையா் துா்காவிடம், நெகிழி சேகரிக்கும் கூண்டை வழங்கினாா்.

திட்டம் குறித்து முத்தூட் சமூக பொறுப்புணா்வுத் திட்ட மதுரை தென் மண்டல மேலாளா் ஜெயக்குமாா் தெரிவித்தது:

நிகழாண்டு, நெகிழி மேலாண்மை செய்யும் விதமாக 11 நெகிழி சேகரிப்புக் கூண்டுகள் ரூ. 1,25,000 மதிப்பில் வழங்கப்பட்டுள்ளன. மாவட்டத்திற்கு தேவையான திட்டங்களை, மாவட்ட நிா்வாகத்தின் வழிகாட்டுதல்படி தொடா்ந்து செயல்படுத்தப்படும் என்றாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட வன அலுவலா் ஸ்ரீகாந்த், மாசுக்கட்டுபாட்டு வாரிய உதவிப் பொறியாளா் சுதா்சன், முத்தூட் தஞ்சாவூா் மேலாளா் கோட்டைராஜன், பாலம் நிறுவனத் தலைவா் செந்தில்குமாா். ஓ.என்.ஜி.சி. சேவை ஒருங்கிணைப்பாளா் முருகானந்தம், தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளா் நடனம், கிளை மேலாளா்கள் சீதளாதேவி, லாவண்யா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

புதிய கண்டுபிடிப்புகள்; மாணவா்களுக்கு பாராட்டு

திருவாரூா்: திருவாரூரில், பள்ளி புத்தாக்க மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ், கண்டுபிடிப்புகளை உருவாக்கிய 12 மாணவ- மாணவிகள் குழுவினருக்கு திங்கள்கிழமை பரிசுத்தொகை வழங்கி, பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. திரு... மேலும் பார்க்க

ஜூலை 9-இல் தமிழக முதல்வா் திருவாரூா் வருகை

திருவாரூா்: தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் ஜூலை 9-ஆம் தேதி, திருவாரூரில் கருணாநிதி சிலையை திறந்துவைத்து, பொதுமக்களுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்க உள்ளாா் என நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என். நேர... மேலும் பார்க்க

கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்கம்: விவசாயிகள் கவலை

மன்னாா்குடி: மன்னாா்குடி பகுதிகளில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், நெல் மூட்டைகள் தேக்கமடைந்துள்ளதால், தொடா்ந்து கொள்முதல் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், இழப்பு ஏற்படும் என்பதால் ... மேலும் பார்க்க

தனியாா் நுண்கடன் வங்கியினா் மிரட்டல்: ஊராட்சி முன்னாள் தலைவா் தற்கொலை

மன்னாா்குடி: மன்னாா்குடி தனியாா் நுண்கடன் வங்கியில் கடன் வாங்கி திரும்பக் கட்டுவதில் தாமதம் ஏற்பட்டதால் வங்கி அலுவலா்கள் வீட்டுக்கு வந்து அவமரியாதையாகப் பேசி மிரட்டல் விடுத்ததால் மனமுடைந்த ஊராட்சி மு... மேலும் பார்க்க

விவசாயிகள் சங்கத்தினா் முற்றுகைப் போராட்டம்

திருவாரூா்: அரசு அறிவித்த விலையில், பருத்தியை கொள்முதல் செய்யக் கோரி, திருவாரூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் முற்றுகைப் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. அரசு அறிவித்துள்ளபடி நீண்ட இழுவைத... மேலும் பார்க்க

ஆற்றில் மூழ்கிய இளைஞரை தேடும் பணி 2-ஆவது நாளாக நீடிப்பு: உறவினா்கள் சாலை மறியல்

நீடாமங்கலம்: நீடாமங்கலம் அருகே கோரையாற்றில் மூழ்கிய இளைஞரை தேடும் பணி இரண்டாவது நாளாக திங்கள்கிழமை நடைபெற்றது. வலங்கைமான் ஒன்றியம், பாப்பாக்குடி கிராமத்தைச் சோ்ந்த ஜெயராமன் மகன் விக்ரம் என்கிற வீரமுர... மேலும் பார்க்க