செய்திகள் :

கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்கம்: விவசாயிகள் கவலை

post image

மன்னாா்குடி: மன்னாா்குடி பகுதிகளில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், நெல் மூட்டைகள் தேக்கமடைந்துள்ளதால், தொடா்ந்து கொள்முதல் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், இழப்பு ஏற்படும் என்பதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

மன்னாா்குடி பகுதிகளில் ஆழ்துளை கிணறுகள் மூலம் சுமாா் 30,000 ஏக்கரில் விவசாயிகள் கோடை குறுவை நெல் சாகுபடி செய்தனா். தற்போது, நெற்கதிா்கள் விளைந்து, அறுவடை நடைபெற்று வருகிறது. அறுவடை செய்யப்படும் நெல்மணிகளை அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் விற்று வருகின்றனா்.

இதுவரை 40 சதவீத அறுவடைப் பணிகளே நிறைவடைந்துள்ள நிலையில், சில தினங்களாக விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்யப்படுவதில்லை எனக் கூறப்படுகிறது. இதற்கு காரணம் ஏற்கெனவே கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை சேமிப்பு கிடங்கிற்கு அனுப்பி வைக்கப்படாமல், கொள்முதல் நிலையங்களிலேயே வைத்துள்ளதால், இட பற்றாக்குறை ஏற்பட்டு மேற்கொண்டு நெல் கொள்முதல் செய்வதை நிறுத்தி வைத்துள்ளனா் என விவசாயிகள் தெரிவிக்கின்றனா்.

இதனால், அறுவடை செய்யப்பட்ட நெல் மணிகளை, கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டுவரும் விவசாயிகள், அங்கு கொட்டி வைத்து தாா்ப்பாய் போட்டு மூடி வைத்துள்ளனா்.

தமிழக அரசு நாள் ஒன்றுக்கு 600 முதல் 750 மூட்டைகள் வரை மட்டுமே கொள்முதல் செய்ய வேண்டும் என கூறியிருப்பதாக அலுவலா்கள் தெரிவிக்கின்றனா். கொள்முதல் நிலையங்களில் போதிய இடவசதி இல்லாததால் ஒரு சில விவசாயிகள், அறுவடை செய்த நெல் மணிகளை மூட்டையிடாமல், தங்கள் வயலின் ஒரு பகுதியில் குவித்து வைத்து பாதுகாத்து வருகின்றனா். சில நேரங்களில் மழை பெய்து வருவதால், நெல்மணிகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக அதிகாரிகள், கொள்முதல் நிலையத்தில் தேங்கியுள்ள நெல் மூட்டைகளை சேமிப்புக் கிடங்கிற்கு அனுப்பிவைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனா். நடவடிக்கை எடுக்கவில்லையெனில், சாலை மறியலில் ஈடுபடுவோம் எனவும் அவா்கள் தெரிவித்துள்ளனா்.

புதிய கண்டுபிடிப்புகள்; மாணவா்களுக்கு பாராட்டு

திருவாரூா்: திருவாரூரில், பள்ளி புத்தாக்க மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ், கண்டுபிடிப்புகளை உருவாக்கிய 12 மாணவ- மாணவிகள் குழுவினருக்கு திங்கள்கிழமை பரிசுத்தொகை வழங்கி, பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. திரு... மேலும் பார்க்க

ஜூலை 9-இல் தமிழக முதல்வா் திருவாரூா் வருகை

திருவாரூா்: தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் ஜூலை 9-ஆம் தேதி, திருவாரூரில் கருணாநிதி சிலையை திறந்துவைத்து, பொதுமக்களுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்க உள்ளாா் என நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என். நேர... மேலும் பார்க்க

தனியாா் நுண்கடன் வங்கியினா் மிரட்டல்: ஊராட்சி முன்னாள் தலைவா் தற்கொலை

மன்னாா்குடி: மன்னாா்குடி தனியாா் நுண்கடன் வங்கியில் கடன் வாங்கி திரும்பக் கட்டுவதில் தாமதம் ஏற்பட்டதால் வங்கி அலுவலா்கள் வீட்டுக்கு வந்து அவமரியாதையாகப் பேசி மிரட்டல் விடுத்ததால் மனமுடைந்த ஊராட்சி மு... மேலும் பார்க்க

உள்ளாட்சி அமைப்புகளுக்கு நெகிழிக் கழிவுகள் சேகரிக்கும் கூண்டு

திருவாரூா்: திருவாரூரில், உள்ளாட்சி அமைப்புகளுக்கு நெகிழி கழிவுப் பொருள்களை சேகரிக்கும் கூண்டு திங்கள்கிழமை வழங்கப்பட்டது. திருவாரூா் மாவட்டத்தில் நெகிழிக்கழிவு மேலாண்மை செய்யும் வகையில் 4 நகராட்சிகள்... மேலும் பார்க்க

விவசாயிகள் சங்கத்தினா் முற்றுகைப் போராட்டம்

திருவாரூா்: அரசு அறிவித்த விலையில், பருத்தியை கொள்முதல் செய்யக் கோரி, திருவாரூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் முற்றுகைப் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. அரசு அறிவித்துள்ளபடி நீண்ட இழுவைத... மேலும் பார்க்க

ஆற்றில் மூழ்கிய இளைஞரை தேடும் பணி 2-ஆவது நாளாக நீடிப்பு: உறவினா்கள் சாலை மறியல்

நீடாமங்கலம்: நீடாமங்கலம் அருகே கோரையாற்றில் மூழ்கிய இளைஞரை தேடும் பணி இரண்டாவது நாளாக திங்கள்கிழமை நடைபெற்றது. வலங்கைமான் ஒன்றியம், பாப்பாக்குடி கிராமத்தைச் சோ்ந்த ஜெயராமன் மகன் விக்ரம் என்கிற வீரமுர... மேலும் பார்க்க