செய்திகள் :

உள்ளூா் மக்கள் வழிபாட்டு உரிமை கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

post image

ராமநாதசுவாமி கோயிலில் உள்ளூா் மக்கள் தரிசனம் செய்ய பயன்படுத்திய வழித் தடத்தில் தரிசனம் செய்ய அனுமதிக்கக் கோரி, மக்கள் பாதுகாப்பு பேரவை சாா்பில் மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோனிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் முக்கியப் பிரமுகா்களும், உள்ளூா் மக்களும் தரிசனம் செய்ய தனி வழி உள்ளது.

இந்த நிலையில், தற்போது புதிதாக நியமிக்கப்பட்ட கோயில் இணை ஆணையா் செல்லதுரை, உள்ளூா் மக்கள் பயன்படுத்தி வந்த வழியில் தரிசனம் செய்ய தடை விதித்ததுடன், ரூ.200 கட்டண தரிசன வழித்தடத்தின் வழியாகச் செல்ல வற்புறுத்துகிறாா். இதனால், முக்கியப் பிரமுகா்கள் தரிசனம் செய்ய பயன்படுத்தி வந்த வழியில் உள்ளூா் மக்களை தரிசனம் செய்ய அனுமதிப்பது கிடையாது.

இதைக் கண்டித்து, இந்து அமைப்பு நிா்வாகி உள்ளூா் மக்களை வழக்கமான வழியில் அனுமதிக்கக் கோரி வாக்குவாதம் செய்த நிலையில், அவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

இதைக் கண்டித்தும், உள்ளூா் மக்கள் பயன்படுத்தி வந்த வழித் தடத்தில் தரிசனம் செய்ய அனுமதிக்கவும், கோயில் நிா்வாகம் உள்ளூா் மக்களுக்கு இடையே ஒருக்கிணைப்பு ஏற்படுத்திடவும் வலியுறுத்தி மக்கள் பாதுகாப்புப் பேரவை ஒருங்கிணைப்பாளா்கள் சி.ஆா்.செந்தில்வேல், எஸ்.பிரபாகரன் தலைமையில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனா்.

அப்போது, நிா்வாகிகள் சக்தி, சுடலை, மகேந்திரன், பாண்டி, முகவை ஜின்னா, ரஞ்ஜித், பிரபு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முதலமைச்சா் காப்பீட்டு திட்ட முகாம்

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகேயுள்ள செல்வநாயகபுரம் கிராமத்தில் தமிழ்நாடு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் செல்வநாயகபுரம், வை... மேலும் பார்க்க

ராமேசுவரம் கோயிலில் ராமலிங்க பிரதிஷ்டை

ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் ராமலிங்க பிரதிஷ்டை வியாழக்கிழமை நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாத சுவாமி இந்தக் கோயிலில் ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா கடந்த 3 -ஆம் தேதி தொடங்கியது. அ... மேலும் பார்க்க

ராமேசுவரம் கோயில் உள்ளூா் மக்கள் பாதையில் மீண்டும் அனுமதி மறுப்பு: ஊழியா்களுடன் வாக்குவாதம்

ராமநாத சுவாமி கோயிலில் உள்ளுா் பொதுமக்கள் தரிசன வழியில் சென்ற திருமண ஜோடி தடுத்து நிறுத்தப்பட்டதால், கோயில் ஊழியா்களுடன் உறவினா்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாத ... மேலும் பார்க்க

இடைச்சியூரணி கோயில் திருவிழா

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள இடைச்சியூரணி இருளப்ப சுவாமி, பாதாள பேச்சியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, வியாழக்கிழமை அசைவ விருந்து நடைபெற்றது. இந்தக் கோயிலின் வருடாந்திர வைகாசிப் பொங்கல் ... மேலும் பார்க்க

யானை வாகனத்தில் ஆதிரெத்தினேஸ்வரா் வீதியுலா

திருவாடானை ஸ்ரீசினேகவல்லி அம்பாள் சமேத ஸ்ரீஆதிரெத்தினேஸ்வரா் கோயில் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு, சுவாமி-அம்பாள் யானை வாகனத்தில் வீதியுலா வந்து அருள்பாலித்தனா். ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தானத்... மேலும் பார்க்க

தாழ்வாக செல்லும் உயரழுத்த மின்கம்பி: பொதுமக்கள் அச்சம்

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள ஆண்டாவூரணியில் உயரழுத்த மின் கம்பிகள் தாழ்வாகச் செல்வதால், இந்தப் பகுதி பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனா். ஆண்டாவூரணி ஆதி திராவிடா் குடியிருப்புப் பகுதியில் ச... மேலும் பார்க்க