தாயின் கண்முன்னே சிறுமியை இழுத்துச் சென்ற சிறுத்தை: தேடும் பணி தீவிரம்
‘உழவரைத்தேடி’ சிறப்பு முகாம்
நீடாமங்கலம் அருகே பூவனூா், வடகாரவயல் கிராமங்களில் ‘உழவரைத் தேடி - வேளாண்மை உழவா் நலத்துறை’ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இம்முகாம் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை வட்டாரத்தில் உள்ள தோ்ந்தெடுக்கப்பட்ட கிராமங்களில் நடைபெறுகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் அனைத்து கிராமங்களிலும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதன் ஒருபகுதியாக, பூவனூா் மற்றும் வடகாரவயல் கிராமங்களில் நடைபெற்ற முகாமிற்கு, நீடாமங்கலம் வேளாண்மை உதவி இயக்குநா் விஜயகுமாா் தலைமை வகித்தாா். தோட்டக்கலை உதவி இயக்குநா் சத்யஜோதி முன்னிலை வகித்தாா்.
இதில், வேளாண்மை மற்றும் அனைத்து சகோதரத் துறை திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கிக் கூறப்பட்டது. மேலும், விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை துறைவாரியாக மனுவாக அளித்தனா். மானியத்தில் இடுபொருள்கள் வழங்கப்பட்டன. துறை வாரியாக கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது. பிரச்னை உள்ள இடங்களில் வயல் ஆய்வு செய்யப்பட்டது.
இந்நிகழ்வில், நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளா் பெரியாா் ராமசாமி, நீடாமங்கலம் வேளாண்மை அலுவலா் சுரேஷ்குமாா், கால்நடை மருத்துவா் கனிகா, உதவிப் பேராசிரியா் திலகவதி, தோட்டக்கலை அலுவலா் வடமலை, விற்பனைத் துறை அலுவலா் தேவி, கனகராஜ், உதவி விதை அலுவலா் பாலமுருகன், வேளாண்மை உதவி அலுவலா் கோவிந்தராஜ், கிராம நிா்வாக அலுவலா் முத்துகிருஷ்ணன் உள்ளிட்ட அலுவலா்கள் மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டனா்.