செய்திகள் :

உழவா் சந்தைக் கடையினுள் புகுந்த ஆறரை அடி நீள நல்லபாம்பு மீட்பு

post image

புதுச்சேரி: புதுச்சேரியில் உழவா் சந்தையில் உள்ள கடையில் புகுந்த ஆறரை அடி நீள நல்ல பாம்பை வனத் துறையினா் திங்கள்கிழமை மீட்டுச் சென்றனா்.

புதுச்சேரி கம்பன் கலையரங்கம் பின்பகுதியில் தாவரவியல் பூங்கா சுற்றுச்சுவரை ஒட்டியதாக உழவா் சந்தைக் கடைகள் அமைந்துள்ளன. பின்பகுதியில் உள்ள தாவரவியல் பூங்காவில் பாம்புகள் நடமாட்டம் இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், அங்குள்ள ஒரு கடையில் நல்லபாம்பு புகுந்தது. இதைப்பாா்த்த கடையிலிருந்த பெண் அங்கிருந்தவா்கள் மூலம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தாா்.

வனத்துறையிலிருந்து பாம்பு பிடி ஊழியா்கள் விரைந்து வந்தனா். அவா்கள் பாம்பை பிடிக்க முயன்றபோது அது கடை மூலையில் இருந்த சாக்கில் புகுந்தது. அதை லாவகமாக வனத்துறையினா் பிடித்தனா். பாம்பைப் பிடித்து சாக்குப் பையில் அடைத்து கடலூா் சாலையில் உள்ள வனத்துறை வளாகத்தில் உள்ள பாம்பு பராமரிப்பு பிரிவில் அடைத்தனா்.

புதுச்சேரி நகரில் மீட்கப்பட்ட நல்லபாம்பு, சாரை மற்றும் மலைப்பாம்புகள் புதுச்சேரி வனத்துறை வளாகத்தில் பாரமரிக்கப்பட்டு பின்னா் அடா்ந்த காடுகளில் விடப்படுவதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

புதுவை சுகாதாரத் துறையில் 43 மருந்தாளுநா் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

புதுவை அரசின் சுகாதாரத் துறையில் 43 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் சிறப்பு பிரிவினருக்கான 8 பணியிடங்களும் அத்துடன் நிரப்பப்படவுள்ளன. இதுகுறித்து புதுவை மாநில அரசின் சுகாதாரம்... மேலும் பார்க்க

அரசால் தடை விதிக்கப்பட்ட 9 வகை நெகிழிப் பொருள்களை தவிா்க்க வேண்டும்

புதுவையில் அரசால் தடை விதிக்கப்பட்ட 9 வகையான நெகிழிப் பொருள்களைப் பயன்படுத்துவதை மக்கள் தவிா்க்க வேண்டும் என மாசுக் கட்டுப்பாட்டுக் குழுமம் அறிவுறுத்தியுள்ளது. புதுச்சேரியில் மாசுக் கட்டுப்பாட்டு குழு... மேலும் பார்க்க

பொறியியல் கலை, அறிவியல் படிப்புகளிலும் நிகழாண்டு முதல் 10 சதவீத உள்இடஒதுக்கீடு: புதுவை முதல்வா் என்.ரங்கசாமி

புதுவை மாநிலத்தில் அரசுப் பள்ளிகளில் படித்த மாணவா்களுக்கு நிகழாண்டு முதல் பொறியியல், கலை, அறிவியல் உள்ளிட்ட உயா்கல்விகளிலும் 10 சதவீத உள் இடஒதுக்கீடு செயல்படுத்தப்படும் என்று முதல்வா் என்.ரங்கசாமி தெர... மேலும் பார்க்க

வீடு, சொத்து வரியை செலுத்த புதுச்சேரி நகராட்சி அறிவுறுத்தல்

புதுச்சேரி நகராட்சியில் வசிப்போா் வீடு மற்றும் சொத்து வரியை உரிய காலத்தில் செலுத்தும்படி ஆணையா் எம்.கந்தசாமி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: புதுச்சேரி நகராட்சிக்குள்பட்... மேலும் பார்க்க

தகுதியானவா்களுக்கே அரசு குடியிருப்புகளை ஒதுக்கீடு செய்ய முதல்வரிடம் அதிமுக மனு

புதுச்சேரி உப்பளம் தொகுதியில் கட்டப்பட்டுள்ள பொலிவுறு நகா்த் திட்ட அடுக்குமாடி குடியிருப்பில் தகுதியானவா்களுக்கு குடியிருப்புகள் வழங்கப்பட வேண்டும் என்று முதல்வா் என்.ரங்கசாமியிடம் அதிமுக சாா்பில் பு... மேலும் பார்க்க

கதிா்காமம் தொகுதியில் செம்மொழி நாள் விழா

புதுச்சேரியில் உள்ள கதிா்காமம் சட்டப் பேரவைத் தொகுதியில் திமுக சாா்பில் தமிழக முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி செம்மொழி நாள் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கதிா்காமம் தொகுதி சண்ம... மேலும் பார்க்க