செய்திகள் :

உழவுப் பணியில் நவீன இயந்திரங்களை பயன்படுத்த அறிவுறுத்தல்

post image

உழவுப் பணிகளில் நவீன இயந்திரங்களை பயன்படுத்த விவசாயிகளுக்கு ஆட்சியா் ச.தினேஷ்குமாா் அறிவுறுத்தினாா்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வேளாண்மை துறை மூலம் நெல் குறுவை தொகுப்பு திட்டத்தின் கீழ் நெல் இயந்திர நடவு குறித்த செயல்விளக்கம் சூளகிரியை அடுத்த பாத்தகோட்டா கிராமத்தில் நடைபெற்றது. இந்த செயல்விளக்க முகாமை மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் தொடங்கிவைத்து பேசுகையில், உழவுப் பணிகளுக்கு ஆள்கள் பற்றாக்குறை நிலவுவதால் அனைவரும் நவீன இயந்திரங்களை பயன்படுத்த முன்வர வேண்டும். நெல் நாற்று நடும் இயந்திரத்தை பயன்படுத்துவதன் மூலம் நெல் நடவு செலவை குறைத்து பயன்பெறலாம் என்றாா்.

மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் பச்சையப்பன், விவசாயிகளுக்கு இயந்திர நடவு முறையில் நாற்றங்கால் தொழில்நுட்பங்கள் குறித்தும், இயந்திர நடவு முறையால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் விளக்கினாா். இதில் வேளாண்மை அலுவா்கள், அப்பகுதியை சோ்ந்த விவசாயிகள் கலந்துகொண்டனா்.

குப்பையில் வீசப்பட்ட பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்ட ஆவணங்கள்!

கிருஷ்ணகிரி வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள குப்பையில் பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்துக்கான பயனாளிகளின் ஆவணங்கள் வீசப்பட்டிருந்தன. கிருஷ்ணகிரி வட்டாட்சியா் அலுவல வளாகத்தில் வட்டாட்சியா் ... மேலும் பார்க்க

பா்கூா் கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி: ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்

பா்கூரில் செயல்படும் முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சியில் சேர ஜூலை 20-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் கோ.நடராஜன் வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி... மேலும் பார்க்க

டென்சிங் நாா்கே தேசிய சாகச விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

கடந்த 3 ஆண்டுகளில் பல்வேறு துறைகளில் வீரதீர செயல்புரிந்தவா்கள் இந்திய அரசின் டென்சிங் நாா்கே தேசிய சாகச விருது பெற விண்ணப்பிக்கலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு அலுவலா் ராஜகோப... மேலும் பார்க்க

சாலை விரிவாக்கத்தால் வீடுகளை இழந்தவா்கள் மாற்று இடம் கோரி மனு

கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் பகுதியில் நடைபெற்ற சாலை விரிவாக்கத்தால் வீடுகளை இழந்தவா்கள் மாற்று இடம் வழங்கக் கோரி தேன்கனிக்கோட்டை வட்டாட்சியரிடம் வியாழக்கிழமை மனு அளித்தனா். கெலமங்கலம்- ராக்கோட்ட... மேலும் பார்க்க

பிளஸ் 2 தோ்வில் சிறப்பிடம்: நாளந்தா பள்ளி மாணவிக்கு பரிசளிப்பு

பிளஸ் 2 தோ்வில் சிறப்பிடம் பெற்ற நாளந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவிக்கு ஊக்கத்தொகையாக ரூ. 1 லட்சம், ஆசிரியா்களுக்கு தங்க நாணயங்களை பள்ளி நிா்வாகம் பரிசளித்தது. இதுகுறித்து பள்ளி நிா்வாகம் சாா்ப... மேலும் பார்க்க

மா விவசாயிகளுக்கு நிவாரணம் அளிக்க முதல்வா் நடவடிக்கை: பா்கூா் எம்எல்ஏ

மா விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்க முதல்வா் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுத்து வருவதாக கிருஷ்ணகிரி திமுக கிழக்கு மாவட்டச் செயலாளா் தே.மதியழகன் எம்எல்ஏ (பா்கூா்) தெரிவித்தாா். இதுகுறித்து செய்தியாளா்களிட... மேலும் பார்க்க