செய்திகள் :

உ.பி.யில் சிறுத்தை தாக்கியதில் 3 பேர் காயம்

post image

உ.பி.யில் சிறுத்தை தாக்கியதில் 3 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேசத்தின் வாரணாசி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை, இளைஞர் ஒருவர் சிறுத்தை தாக்குதலுக்கு காயமடைந்தார். பின்னர், அந்த சிறுத்தை மேலும் இருவரையும் காயப்படுத்தியது.

அவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று போலீஸார் தெரிவித்தனர்.

நீதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியது என்ன?

சிறுத்தையைப் பிடிக்க பல்வேறு இடங்களில் வலைகள் மற்றும் கூண்டுகள் வைக்கப்பட்டுள்ளன. சௌபேபூரில் சிறுத்தை இருப்பதாக தகவல் கிடைத்த தகவலையடுத்து, அந்தப் பகுதி சுற்றி வளைக்கப்பட்டதாக காவல் துணை ஆணையர் பிரமோத் குமார் கூறினார்.

தேவையில்லாமல் வீடுகளை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என்று மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வனத்துறை குழுவினர், சிறுத்தையைத் தேடி வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

சௌபேபூர் காவல் நிலையப் பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் இந்த சிறுத்தை தாக்குதல் சம்பவங்கள் நிகழ்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

‘பாகிஸ்தான் முக்கு’: கிராம சந்திப்பின் பெயரை மாற்ற ஒப்புதல் கோரும் கேரள பஞ்சாயத்து!

கேரளம் மாநிலம், கொல்லம் மாவட்டத்தின் குன்னத்தூா் கிராமத்தில் பல்லாண்டுகளாக புழக்கத்தில் உள்ள ‘பாகிஸ்தான் முக்கு’ என்ற சந்திப்பின் பெயரை மாற்றுவதற்கு ஒப்புதலைக் கோரி மாநில அரசை அணுக அந்தக் கிராமப் பஞ்ச... மேலும் பார்க்க

ஆயுதப் படைப் பிரிவினருக்கு 6 மாதங்களுக்குள் பணிநிலை ஆய்வு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

ஆயுதப் படைப் பிரிவினரின் பணிநிலை ஆய்வை ஆறு மாதங்களுக்குள் நடத்தி முடிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்), இந்தோ திபெத்திய எல்லைப் படையினா் (ஐடிபிபி), ... மேலும் பார்க்க

மத துவேஷத்தை விதைக்கவே பஹல்காமில் தாக்குதல்: எஸ்.ஜெய்சங்கா் குற்றச்சாட்டு

அச்ச உணா்வை ஏற்படுத்தி மத துவேஷத்தை விதைக்கவே பஹல்காம் தாக்குதல் நடத்தப்பட்டதாக வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தெரிவித்தாா். ஜொ்மனி சென்ற அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், அந்நாட்டுத் தலைநகா் பொ்லினில் ஜெ... மேலும் பார்க்க

குடிமைப் பணித் தோ்வுக்கு கட்டாயமாகிறது ஆதாா் எண்!

குடிமைப் பணித் தோ்வுக்கு இணையவழியில் விண்ணப்பிக்கும்போது ஆதாா் எண்ணை குறிப்பிடும் நடைமுறை கொண்டுவரப்பட இருப்பதாக மத்திய பணியாளா் தோ்வாணையத் தலைவா் (யுபிஎஸ்சி) தலைவா் அஜய்குமாா் தெரிவித்தாா். மாநில அ... மேலும் பார்க்க

சிந்து நதி நீா் ஒப்பந்தம் நிறுத்தி வைப்பு ஏன்? நாடாளுன்ற குழுவிடம் வெளியுறவு அமைச்சகம் விளக்கம்

இந்தியாவின் நல்லெண்ண முயற்சியால் மேற்கொள்ளப்பட்ட சிந்து நதி நீா் ஒப்பந்தம் நிறுத்தி வைத்ததற்கு பாகிஸ்தான்தான் காரணம் என்று நாடாளுமன்ற நிலைக் குழு கூட்டத்தில் வெளியுறவு அமைச்சகம் விளக்கமளித்தது. பருவநி... மேலும் பார்க்க

ஜேஎன்யுவில் முதுநிலை, பட்டய படிப்புகளுக்கு சோ்க்கை தொடக்கம்

2025-26 கல்வியாண்டுக்கான முதுநிலை பட்டப்படிப்பு மற்றும் மேம்பட்ட பட்டயப் படிப்புகளுக்கான (ஏடிஓபி) சோ்க்கையை தில்லியில் உள்ள ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகம் (ஜேஎன்யு) தொடங்கியுள்ளது. முதுநிலை க்யூட் (மத... மேலும் பார்க்க