செய்திகள் :

உ.பி.யில் விபத்தில் சிக்கிய மணமகன் கார்: 8 பேர் பலி!

post image

உத்தரப் பிரதேசத்தின் சம்பல் மாவட்டத்தில் கல்லூரி வளாக சுவரில் கார் மோதிய விபத்தில் மணமகன் உள்பட 8 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மணமகன் உள்பட அவருடன் வந்த பத்து பேர் ஹர் கோவிந்த்பூர் கிராமத்திலிருந்து புடானின் உள்ள சிர்டௌலுக்குச் செல்லும் வழியில் இந்த விபத்து நிகழ்ந்ததாகக் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

சம்பல் மாவட்டத்தின் ஜுனாவாய் பகுதியில் உள்ள ஜனதா இன்டர் கல்லூரி அருகே வாகனம் கட்டுப்பாட்டை இழந்து கல்லூரி வளாக சுவரின் மீது மோதியது. தகவல் கிடைத்ததும் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்புப் பணிகளைத் தொடங்கின.

விபத்தில் சிக்கியவர்களை ஜுனாவாய் சமூக சுகாதார மையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டனர், அங்கு அவர்கள் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.

விபத்தில் மணமகன் சூரஜ் (24), ஆஷா (26) ஐஸ்வர்யா (3), சச்சின் (22), கணேஷ் (1), கோமல் (18), மது (20) மற்றும் ஓட்டுநர் ரவி (28) ஆகியோர் உயிரிழந்ததாகக் காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார் தெரிவித்துள்ளார்.

காயமடைந்த தேவா (24) மற்றும் ஹிமான்ஷி (2) ஆகிய இருவரும் அலிகாரில் சிகிச்சை பெற்று வருகின்றனர், தேவாவின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், ஹிமான்ஷி சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் கூறினார். கார் மிக அதிக வேகத்தில் பயணித்து கட்டுப்பாட்டை இழந்ததே விபத்துக்குக் காரணமாக அமைந்தது.

இதற்கிடையில், உத்தரப் பிரதேச முதல்வர் அலுவலகம் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,

சம்பல் மாவட்டத்தில் நடந்த சாலை விபத்து குறித்து உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கவலை தெரிவித்துள்ளார். இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு அவர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

காயமடைந்தவர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்குமாறு மாவட்ட நிர்வாக அதிகாரிகளுக்கு முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.

காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய அவர் பிரார்த்திப்பதாகவும் அந்தப் பதிவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Eight people died while two others were injured after their SUV rammed into a wall in Sambhal district of Uttar Pradesh, police said on Saturday.

கைப்பேசி தொலைந்ததால் ஏற்பட்ட வாக்குவாதம்: நண்பரை 5-வது மாடியில் இருந்து தள்ளிவிட்டு கொலை செய்த நபர் கைது

கைப்பேசி காணாமல் போனது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் நண்பரை கட்டடத்தின் 5ஆவது மாடியில் இருந்து தள்ளி கொலை செய்த நபரைக் போலீஸார் கைது செய்தனர். உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஆக்ரா மாவட்டத்தைச் சேர்ந்த ஆ... மேலும் பார்க்க

இந்தியாவில் ஏழைகள் அதிகரிப்பு! உலக வங்கிக்கு எதிராக மத்திய அமைச்சர் பேச்சு!

இந்தியாவில் வருமான சமத்துவம் முன்னேறி வருவதாக உலக வங்கி அறிக்கைக்கு எதிர்மாறாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கருத்து தெரிவித்துள்ளார்.நாக்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய அமைச்சர் நிதின் ... மேலும் பார்க்க

பாஜகவில் இணைந்த முன்னாள் குடியரசு துணைத் தலைவர் பேரன்!

முன்னாள் குடியரசு துணைத் தலைவரும் மறைந்தவருமான கிருஷண்காந்தின் பேரன் விராட் காந்த் பாஜகவில் இணைந்தார்.தில்லியில் உள்ள பாஜக அலுவலகத்தில் கட்சியின் தேசிய பொதுச்செயலர் தருண் சுக், பஞ்சாப் பாஜக தலைவர் சுன... மேலும் பார்க்க

தொழிலாளர்களின் தினசரி வேலைநேரம் 10 மணி நேரமாக அதிகரிப்பு! தெலங்கானா அரசு உத்தரவு

தெலங்கானாவிலும் நாளொன்றுக்கு 10 மணி நேரம் வேலை என்கிற முறை அமலாகிறது.தெலங்கானா அரசு சனிக்கிழமை(ஜூலை 5) பிறப்பித்துள்ள உத்தரவில் வணிக நிறுவனங்களில்(கடைகளுக்குப் பொருந்தாது) தொழிலாளர்களின் வேலை நேரம் நா... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியின் ஒரு சுவரில் பெயின்ட் அடிக்க 233 தொழிலாளர்கள்; 4 கதவுகளுக்கு 425 பேர்!

மத்தியப் பிரதேசத்தில் அரசுப் பள்ளிகளில் பெயின்ட்டுக்காக செலவிடப்பட்டதாக வெளியிடப்பட்ட கட்டண விவரங்கள் சர்ச்சையை கிளப்பியுள்ளது.மத்தியப் பிரதேசம் மாநிலத்தின் ஷாஹ்தோல் மாவட்டம், சாகண்டி கிராமத்தில் ஓர் ... மேலும் பார்க்க

மகாராஷ்டிரம்: பயணி தவறவிட்ட ரூ.3.2 லட்சம் பணத்தை ஒப்படைத்த ரயில்வே போலீஸார் !

மகாராஷ்டிரத்தில் உள்ளூர் ரயிலில் பயணி தவறவிட்ட பையை மீட்டு அதன் உரிமையாளருக்கு திருப்பி அனுப்பியதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர்.மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த அபிஷேக் சுக்லா (30) சர்ச்கேட் செல்... மேலும் பார்க்க