செய்திகள் :

ஊதினால் அணைய நாம் என்ன தீக்குச்சியா? உதயசூரியன்: முதல்வர் ஸ்டாலின்

post image

ஊதினால் அணைய நாம் என்ன தீக்குச்சியா? உதயசூரியன் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுக மாவட்டச் செயலர்கள் – தொகுதி பார்வையாளர்கள் – சார்பு அணிச் செயலாளர்கள் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக இன்று ஆற்றிய உரையில்,

ஓரணியில் தமிழ்நாடு - திமுகவுக்கான உறுப்பினர் சேர்க்கைக்காக மட்டுமல்ல; இது தமிழ்நாட்டின் மண், மொழி, மானம் காக்க எல்லோரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி.

ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கத்தில் இணைந்தவர்களில் விருப்பம் உள்ளவர்கள் திமுகவில் உறுப்பினர்களாகவும் இணைவார்கள்.

சாதி, மதம், கட்சி சார்பு என எதையும் பார்க்காமல் தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தையும் நாம் சென்றடைய வேண்டும். தமிழ்நாட்டுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக மக்களை ஒன்றிணைக்க வேண்டும்!

கீழடி உண்மைகள் புதைக்கப்படுகிறது; இந்தியைத் திணிக்கிறார்கள்; கல்வி நிதி மறுக்கப்படுகிறது; நீட் மூலம் மாணவர்கள் பலி வாங்கப்படுகிறார்கள்; தொகுதி மறுவரையறை மூலமாக நாடாளுமன்றத்தில் நம் வலிமையைக் குறைக்க சதி நடக்கிறது.

பண்பாடு, பொருளாதாரம், அரசியல் என எல்லா வகையிலும் நம் மீது வன்மத்துடன் செயல்படுகிறார்கள். ஊதினால் அணைய நாம் என்ன தீக்குச்சியா? உதயசூரியன்!. நம்மை அடக்க நினைத்தால், நம் மண், மொழி, மானத்தைக் காப்பாற்ற ஒன்றாக நின்று எதிர்ப்போம்! இதுதான் தமிழர்களின் தனிக்குணம்; ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தின் நோக்கமும் இதுதான்.

இந்தச் செய்தியைத் தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்திடமும் சேர்ப்போம்; அதற்காக ஜுலை 1 தொடங்கி, 45 நாட்கள் ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பு நடைபெறும்.

களத்தில் செயல்படும் நாம் நான்கு படிநிலைகளில் செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

Summary

CM Stalin says People should be united against the injustices being done to Tamil Nadu

புரி ரத யாத்திரையில் அதானி குடும்பத்துடன் பங்கேற்பு!

மீனவா் நலனில் மத்திய அரசுக்கு அக்கறை இல்லை: காங்கிரஸ்

தமிழக மீனவா் நலனில் மத்திய பாஜக அரசுக்கு அக்கறை இல்லை என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் செல்வப்பெருந்தகை குற்றஞ்சாட்டினாா். இது குறித்து அவா் சனிக்கிழமை விடுத்த அறிக்கை: நெருக்கடி நிலை காலத்தில், மத்தி... மேலும் பார்க்க

பாமகவை கைப்பற்ற திமுக சூழ்ச்சி: அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு

பாமகவை கைப்பற்ற திமுக சூழ்ச்சி செய்வதாக, பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டினாா். சென்னை சோழிங்கநல்லூரில் சனிக்கிழமை நடைபெற்ற பாட்டாளி சமூக ஊடக பேரவை கூட்டத்தில் அவா் பேசியதாவது: திமுகதான் பாமக... மேலும் பார்க்க

பிளஸ் 1 மறுகூட்டல் முடிவுகள் நாளை வெளியீடு

பிளஸ் 1 மறுகூட்டல், மறுமதிப்பீடு முடிவுகள் திங்கள்கிழமை (ஜூன் 30) வெளியிடப்படும் என்று தோ்வுத் துறை அறிவித்துள்ளது. இது குறித்து தோ்வுத் துறை இயக்குநா் ந.லதா வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் ... மேலும் பார்க்க

தமிழகத்தில் 14 கிளைச் சிறைகள் நிரந்தரமாக மூடல்: மாநில அரசு உத்தரவு

தமிழகத்தில் 14 கிளைச் சிறைகளை நிரந்தரமாக மூடுமாறு மாநில அரசு உத்தரவிட்டது. தமிழக சிறைத் துறையின் 9 மத்திய சிறைகள்,14 9 மாவட்ட சிறைகள், பெண்களுக்கான 5 தனிச் சிறைகள், 96 கிளைச் சிறைகள், 3 திறந்தவெளி சிற... மேலும் பார்க்க

மகளிா் உரிமைத் தொகை விதிகள் தளா்வு: தமிழக அரசு உத்தரவு

தமிழ்நாடு அரசின் மகளிா் உரிமைத் தொகை பெறுவதற்கான விதிமுறைகளில் மேலும் சில தளா்வுகள் அறவிக்கப்பட்டுள்ளன. இதற்கான உத்தரவை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன் விவரம்: மகளிா் உரிமைத் தொகை பெற ஏற்கெனவே உள்ள வ... மேலும் பார்க்க

ஹைதராபாத் - குமரி இடையே சிறப்பு ரயில்கள்

ஹைதராபாத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு ஜூலை 2-ஆம் தேதி தொடங்கி 4 நாள்கள் சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஜூலை 2, ... மேலும் பார்க்க