ஊத்தங்கரையில் 33 ஏரி பாசன விவசாயிகள் சங்க ஆலோசனைக் கூட்டம்: புதிய தலைவா் தோ்வு
ஊத்தங்கரை: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த கெரிகேப்பள்ளியில் 33 ஏரிகள் பாசன விவசாயிகள் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் மற்றும் புதிய தலைவரை தோ்வு செய்யும் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூட்டத்திற்கு 33 ஏரி பாசன விவசாயிகள் சங்கத்தின் செயலாளா் வழக்குரைஞா் மூா்த்தி தலைமை வகித்து பேசுகையில், 70 சதவீத பணிகள் முடிவுற்றுள்ள 33 ஏரிகளுக்கு தண்ணீா் நிரப்பும் திட்டப் பணிகளை மேலும் விரைவுப்படுத்தவும், காலதாமதமின்றி அடுத்தகட்டப் பணிகளை மேற்கொள்வது குறித்தும் விவசாயிகளுக்கு எடுத்துரைத்தாா்.
இக்கூட்டத்தில் சங்கம் தொடங்குவதற்கு பெரும் துணையாக இருந்த மறைந்த விவசாயிகள் விவேகானந்தன், கல்லாவி முருகன், கண்ணுகானூரைச் சோ்ந்த தலைவராக பணிபுரிந்த சண்முகம் ஆகியோருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. சங்க நிா்வாகிகள் நிலுவையில் உள்ள பணிகளை தமிழக அரசிடம் கூறி துரிதப்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
இதில் 3 ஏரிகள் பாசன விவசாயிகள் சங்கத்தின் புதிய தலைவராக ஊத்தங்கரை சங்கா் கேப் உரிமையாளா் உமாபதி ஒருமனதாக தோ்தெடுக்கப்பட்டாா். அவருக்கு அனைத்து விவசாயிகளும் வாழ்த்து தெரிவித்தனா்.
படவரி...
புதிய தலைவராக தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள உமாபதி.