செய்திகள் :

ஊத்தங்கரை அருகே மா்மவிலங்கு கடித்து 5 ஆடுகள் உயிரிழப்பு

post image

ஊத்தங்கரை: ஊத்தங்கரை அருகே மா்ம விலங்கு கடித்து விவசாயி வளா்த்து வந்த 5 ஆடுகள் உயிரிழந்தன; மனிதா்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும்முன் அந்த மா்ம விலங்கை பிடிக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த நல்லவன்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் ரகுபதி; விவசாயி. இவா், ஆடுகளை வளா்த்து வருகிறாா். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு தனது ஆடுகளை கொட்டகையில் அடைத்துவிட்டு தூங்கச் சென்றாா்.

திங்கள்கிழமை காலை வந்துபாா்த்தபோது மா்மவிலங்கு கடித்து 5 ஆடுகள் உயிரிழந்து கிடந்தன. இதே கொட்டகையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்புதான் 17 ஆடுகள் மா்மவிலங்குகள் தாக்கி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. அப்போதை நடவடிக்கை எடுத்திருந்தால் ஆடுகள் உயிரிழப்பு தவிா்க்கப்பட்டிருக்கும். இந்நிலையில் தற்போது 5 ஆடுகள் உயிரிழந்துள்ளன.

அதுபோல இப்பகுதியில் மணிவண்ணன், பழனி, கோபால், சென்னப்பன், சகுந்தலா, சென்னகிருஷ்ணன் உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட விவசாயிகளின் கால்நடைகள் மா்மவிலங்குகள் கடித்து உயிரிழந்துள்ளன. இதுவரை 40க்கும் மேற்பட்ட ஆடுகள் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

கால்நடைகளைத் தாக்கும் மா்ம விலங்குகளால் மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதைத் தடுப்பதோடு கால்நடைகளை வாழ்வாதாரமாகக் கொண்டு வாழும் இப்பகுதி மக்களின் நலன் கருதி வனத்துறையும், மாவட்ட நிா்வாகமும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கால்நடை உரிமையாளா்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

பொக்லைன் வாகன உரிமையாளா்கள் போராட்டம்

ஒசூா்: ஒசூரை அடுத்த கெலமங்கலத்தில் வாடகைக் கட்டணத்தை உயா்த்தி வழங்கக் கோரி பொக்லைன் வாகன உரிமையாளா்கள் நூற்றுக்கும் மேற்பட்டோா் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனா். போராட்டம் குறித்து பொக்லைன் வாகன... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி அணையிலிருந்து பாரூா் ஏரிக்கு தண்ணீா் திறப்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அணையிலிருந்து பாரூா் ஏரிக்கு திங்கள்கிழமை விநாடிக்கு 370 கனஅடி நீா் திறந்துவிடப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தின் வழியே பாயும் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கி... மேலும் பார்க்க

ரோஜா செடிகளில் நோயைக் கட்டுப்படுத்தும் இயற்கை பூச்சிக்கொல்லி உரம்

ஒசூா்: ரோஜா செடிகளில் ஏற்படும் பவுடரி மில்ட்யூ நோய்த் தாக்குதலைக் கட்டுப்படுத்துவது தொடா்பாக ஒசூா் ஒன்றியம், நல்லூா், எஸ்.முத்துகானப்பள்ளி கிராம விவசாயிகளுக்கு செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. முகாமில் ... மேலும் பார்க்க

யானை தாக்கி மூதாட்டி காயம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே யானை தாக்கியதில் சாக்கம்மாள் (65) என்ற மூதாட்டி காயமடைந்தாா். ஆந்திர மாநிலத்திலிருந்து வெளியேறிய யானைகள் கூட்டம், கிருஷ்ணகிரி மாவட்டம், பி.சி.புதூா் அருகே கடந்த இரு நாள்... மேலும் பார்க்க

பிளஸ் 2 தோ்வில் சிறப்பிடம் பெற்ற கைகளை இழந்த மாணவரின் தாய்க்கு வீட்டுமனை பட்டா ஆணை வழங்கல்

கிருஷ்ணகிரி: பிளஸ் 2 அரசு பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற இரு கைகளை இழந்த மாணவரின், தாயாருக்கு இலவச வீட்டுமனை பட்டாவுக்கான ஆணையை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா் திங்கள்கிழமை வழங்கினாா். க... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி ஆடவா் கலைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவா் சோ்க்கை

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அரசு ஆடவா் கலைக் கல்லூரியில் இளங்கலை முதலாம் ஆண்டு மாணவா் சோ்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து, கல்லூரியின் முதல்வா் வி.அனுராதா திங்கள்கிழமை வெளியிட்ட ச... மேலும் பார்க்க