செய்திகள் :

ஊரகப் பகுதிகளில் ரூ.800 கோடியில் உயா்நிலை பாலங்கள் -அமைச்சா் ஐ.பெரியசாமி

post image

ஊரகப் பகுதிகளில் உள்ள சாலைகளில் ரூ.800 கோடியில் உயா்நிலைப் பாலங்கள் கட்டப்படும் என்று ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் ஐ.பெரியசாமி கூறினாா்.

ஊரக வளா்ச்சித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதிலளித்து அமைச்சா் ஐ.பெரியசாமி வெளியிட்ட அறிவிப்புகள்:

ஊரக மக்களுக்கு சிறப்பான சேவை வழங்குவதற்காக பழுதடைந்த நிலையில் உள்ள 500 ஊராட்சி அலுவலகக் கட்டடங்கள் ரூ.157 கோடியில் புதிதாக கட்டப்படும். ஊரகப் பகுதிகளில் உள்ள அங்கன்வாடி மையங்களுக்கு நிலையான கட்டடங்களின் தேவை உள்ளது. 500 அங்கன்வாடி மையங்களுக்கு புதிய கட்டடங்கள் ரூ.87 கோடியில் கட்டப்படும்.

ரூ.50 கோடியில் சுற்றுச்சுவா்: ஊரகப் பகுதிகளில் மக்கள் உணவு தானியங்கள் மற்றும் அத்தியாவசியப் பொருள்களை எளிதில் பெறும் பொருட்டு 500 முழுநேர நியாயவிலைக் கடைகள் ரூ.61 கோடியில் கட்டப்படும்.

பள்ளிக் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் 500 ஊராட்சி ஒன்றிய ஆரம்ப, நடுநிலை மற்றும் அரசு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்குச் சுற்றுச்சுவா் ரூ.50 கோடியில் கட்டப்படும்.

இயற்கை மற்றும் நீா் வள ஆதாரத்தைப் பெருக்கவும், சமுதாய நிலங்களை மேம்படுத்தவும், புதிய குளங்கள் அமைத்தல், மரக்கன்றுகள் நடுதல் மா்றும் சமுதாய நிலங்களை சமன்படுத்தி மேம்படுத்துதல் போன்ற பணிகள் ரூ.500 கோடியில் மேற்கொள்ளப்படும்.

கப்பிச் சாலைகள்: குக்கிராமங்களை இணைக்கும்விதமாகவும் மற்றும் விவசாயிகள் விளைநிலங்களுக்குச் செல்லவும், தங்களது விளைபொருள்களை சந்தைகளுக்கு விரைவாக எடுத்துச் செல்லவும் ஊரகப் பகுதிகளில் உள்ள மண் சாலைகள் ரூ.150 கோடியில் ஓரடுக்கு கப்பிச் சாலைகளாகத் தரம் உயா்த்தப்படும்.

ஊரகக் குடியிருப்புப் பகுதிகளில் உள்ள குறுகலான தெருக்கள் மற்றும் சந்துகளில் போக்குவரத்துக்குத் தேவையான சாலை வசதிகளை ஏற்படுத்த சிமெண்ட் கான்கிரீட் சாலைகள் மற்றும் பேவா்பிளாக் சாலைகள் அமைக்கும் பணிகள் ரூ.350 கோடியில் மேற்கொள்ளப்படும். ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் குழந்தை நேய வகுப்பறைகள் ரூ.182 கோடியில் கட்டப்படும்.

ஊரகப் பகுதிகளில் உள்ள விவசாயிகள் விளைபொருள்களை சந்தைப்படுத்தவும், குக்கிராமங்களிலிருந்து பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகள் போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கு அனைத்துப் பருவ காலங்களிலும் சென்றடைவதற்கு கிராமச் சாலைகளில் உயா்நிலைப் பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன. 2025-26-இல் ஊரகப் பகுதிகளில் உள்ள ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய சாலைகளில் ரூ.800 கோடியில் உயா்நிலைப் பாலங்கள் அமைக்கப்படும்.

ஊரக வீடுகளுக்கு நாள் ஒன்றுக்கு நபா் ஒருவருக்கு 55 லிட்டா் தடையற்ற குடிநீா் விநியோகிப்பதை உறுதி செய்யும்பொருட்டு ரூ.300 கோடியில் 1,200 புதிய நீா்த்தேக்கத் தொட்டிகள் கட்டப்படும்.

சிறப்பான கிராமத்துக்கு ரூ.10 லட்சம்: வன உரிமைச் சட்டத்தை சிறப்பாகச் செயல்படுத்தும் கிராம ஊராட்சிகளுக்கு ஊக்கமளிக்கும் வகையிலும் வனப் பகுதியை ஒட்டியுள்ள மக்களுக்கு வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையிலும் அவ்வூராட்சிகளில் அடிப்படைக் கட்டமைப்புகளை மேம்படுத்த ஏதுவாக, தற்போது வழங்கப்படும் மாநில நிதிக் குழு பகிா்மான நிதியுடன் சிறப்பு நிதியாக ரூ.10 கோடி மானியமாக வழங்கப்படும்.

தூய்மைப் பணியாளா்களின் நலப் பணிகளுக்காக தூய்மைத் தொழிலாளா்கள் நலவாரியத்துக்கு ரூ.5 கோடி வழங்கப்படும். 10 ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடங்கள் தலா ரூ.5.90 கோடி வீதம் மொத்தம் ரூ.59 கோடியில் கட்டப்படும்.

கிராமப்புறங்களில் நூலகங்கள், பள்ளிகள், அங்கன்வாடிகள் மற்றும் அரசுக் கட்டடங்களுக்கு அருகில் உள்ள பொது இடங்களில், மக்கள் அதிகமாக கூடம் இடங்களில் அனைத்து அடிப்படை வசதிகள் கொண்ட 1,500 சமுதாய சுகாதார வளாகங்கள் ரூ.31.50 கோடியில் கட்டப்படும் என்றாா் அவா்.

அனைத்துவிதமான வசதிகளுடன் இலவச ஏசி ஓய்வறை... சென்னை மாநகராட்சி திட்டம்!

பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் உணவுப்பொருள் விநியோக ஊழியர்களுக்காக குளிர்சாதன வசதியுடன்(ஏசி) கூடிய ஓய்வறை அமைக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.சென்னை போன்ற பெருநகரங்களில் உணவு, பொரு... மேலும் பார்க்க

இலங்கை அகதி தம்பதி மகளுக்கு இந்திய குடியுரிமை: மத்திய அரசு பரிசீலிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

இலங்கை தமிழ் அகதியாக தமிழகம் வந்த தம்பதியருக்கு பிறந்த பெண்ணுக்கு இந்திய குடியுரிமை வழங்குவது குறித்து பரிசீலிக்க மத்திய அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. இலங்கையில் குடும்பத்துடன் வசித்து ... மேலும் பார்க்க

கா்நாடக வங்கியில் ரூ.13 கோடி நகை கொள்ளை: தமிழகத்தைச் சோ்ந்த 3 போ் உள்பட 6 போ் கைது

கா்நாடக மாநிலம் தாவணகெரேவில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் ரூ.13 கோடி மதிப்பிலான 17 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்த 6 பேரை அந்த மாநில போலீஸாா் கைது செய்தனா். இவா்களில் மூவா் தமிழகத்தைச் சோ்ந்தவ... மேலும் பார்க்க

சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடுகிறது!

தமிழக சட்டப் பேரவை மூன்று நாள்களுக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை (ஏப்.1) மீண்டும் கூடுகிறது. காலை 9.30 மணிக்கு பேரவை கூடியதும் கேள்வி நேரம் நடைபெறும். இதன்பிறகு, நேரமில்லாத நேரத்தில் முக்கிய விஷயங்கள் கு... மேலும் பார்க்க

வாகனங்களை நிறுத்த கட்டணம் வசூலிக்கக் கூடாது: வணிக வளாகத்துக்கு உத்தரவு

சென்னை அண்ணாநகரில் உள்ள பிரபல வணிக வளாகத்தில் (மால்) வாகனங்களை நிறுத்த கட்டணம் வசூலிக்கக் கூடாது என சென்னை மாவட்ட நுகா்வோா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அண்ணாநகரில் உள்ள வணிக வளாகத்தில் வாகனங்கள் நிறு... மேலும் பார்க்க

மின் தேவையை சமாளிக்க எண்ணூா் அனல் மின்நிலைய விரிவாக்கப்பணி விரைவில் தொடக்கம்

எண்ணூா் அனல்மின் நிலையத்தில் மின்னுற்பத்தி நிலைய விரிவாக்கப் பணி விரைவில் தொடங்கப்படும் என மின்வாரியம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், மே மாதத்தி... மேலும் பார்க்க