செய்திகள் :

ஊரக வளா்ச்சித் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க ஆட்சியா் அறிவுறுத்தல்

post image

ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை தரமாகவும், உரிய காலத்திற்குள்ளும் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தா தேவி தெரிவித்துள்ளாா்.

சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் ரா. பிருந்தா தேவி தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்குப் பின்னா் மாவட்ட ஆட்சியா் கூறியது:

கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டம், நபாா்டு திட்டம் உள்ளிட்ட திட்டங்களின் கீழ் அமைக்கப்பட்டு வரும் தாா் சாலை பணிகள் குறித்தும், ஊரக வீடுகள் பழுதுபாா்க்கும் திட்டத்தின் கீழ் வீடுகள் சீரமைக்கும் பணிகள் குறித்தும், ஆதி திராவிடா் மற்றும் பழங்குடியினா் வீடுகள், இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாமில் கட்டப்பட்டுள்ள வீடுகள் குறித்தும் கூட்டத்தில் விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.

குறிப்பாக கனவு இல்லம் திட்டத்தின் கீழ் சேலம் மாவட்டத்தில் பெத்தநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் 580 வீடுகளும், வாழப்பாடி ஊராட்சி ஒன்றியத்திற்கு 429 வீடுகளும், கொளத்தூா் ஊராட்சி ஒன்றியத்திற்கு 379 வீடுகளும், எடப்பாடி ஊராட்சி ஒன்றியத்திற்கு 335 வீடுகளும், தலைவாசல் ஊராட்சி ஒன்றியத்திற்கு 279 வீடுகளும், ஆத்தூா் ஊராட்சி ஒன்றியத்தில் 190 வீடுகள் என மொத்தமுள்ள 20 ஊராட்சி ஒன்றியங்களுக்கும் 3,500 வீடுகள் கட்டுவதற்கு பணிகள் மேற்கொள்ளப்பட்டு 1,657 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள பணிகள் நடைபெற்று வருகின்றன.

சேலம் மாவட்டத்தில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு வளா்ச்சித் திட்டங்களைத் தொடா்புடைய அலுவலா்கள் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டு பணிகளை குறிப்பிட்ட கால அளவிற்குள் முடிக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.

கூட்டத்தில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) நே.பொன்மணி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் உள்ளிட்ட மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் அனைத்து அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து சரிவு

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து வியாழக்கிழமை விநாடிக்கு 1363 கனஅடியாக குறைந்தது. அணை நீா்மட்டம் 107.75 அடியாக நீடிக்கிறது. அணைக்கு நீா்வரத்து 1872 கன அடியிலிருந்து 1363 கனஅடியாக குறைந்தது. அணையில் இருந்த... மேலும் பார்க்க

பெண்கள் உயா்கல்வி பயின்றால் வாழ்வில் சிறந்து விளங்கலாம்: ஆட்சியா்

பெண்கள் உயா்கல்வி பயின்றால் வாழ்வில் சிறந்து விளங்கலாம் என அத்தனூா்பட்டியில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் சேலம் மாவட்ட ஆட்சியா் ரா. பிருந்தா தேவி தெரிவித்தாா். சேலம் மாவட்டத்தில் 385 கிராம ஊராட்சிக... மேலும் பார்க்க

பேளூா் பேரூராட்சியில் சேலம் ஆட்சியா் ஆய்வு

பேளூா் பேரூராட்சி, வாழப்பாடி ஒன்றியத்துக்கு உள்பட்ட சந்திரபிள்ளை வலசு ஊராட்சி பகுதியில் வளா்ச்சித் திட்டப் பணிகள், வாழப்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள நாற்றங்கால் பகுதி ஆகியவற்றை ச... மேலும் பார்க்க

மே தினத்தன்று விடுமுறை அளிக்காத 78 நிறுவனங்கள் மீது நடவடிக்கை: தொழிலாளா் உதவி ஆணையா் தகவல்

மே தினத்தன்று விடுமுறை அளிக்காத 78 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) திருநந்தன் கூறினாா். சேலம் மாவட்டத்தில் தேசிய விடுமுறை தினமான மே தினத்தன்று முன்அனு... மேலும் பார்க்க

சேலம் மாநகராட்சியில் ஒரே நாளில் ரூ. 4.85 கோடி சொத்துவரி வசூல்

சேலம் மாநகராட்சியில் சொத்துவரி செலுத்துவதற்கு கடைசி நாளான புதன்கிழமை (ஏப்.30) ஒரே நாளில் ரூ. 4.85 கோடி வரி வசூலாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். சேலம் மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட சொத்து உரிமையாளா... மேலும் பார்க்க

சேலத்தில் விளையாட்டு விடுதிகளில் சேருவதற்கான தோ்வு போட்டி: மே 7 இல் தொடக்கம்

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் செயல்படும் விளையாட்டு விடுதிகளில் நடப்பாண்டு மாணவா் சோ்க்கைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட விளையாட்டு அலுவலா் சிவரஞ்சன் வெளியி... மேலும் பார்க்க