செய்திகள் :

எஃகு, அலுமினியத்துக்கு இருமடங்கு வரி: டிரம்ப்பின் அறிவிப்பால் இந்திய ஏற்றுமதியாளா்களுக்குப் பாதிப்பு!

post image

அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் எஃகு மற்றும் அலுமினியம் மீதான வரிகளை இரட்டிப்பாக்குவதாக அந்நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப் வெளியிட்டுள்ள அறிவிப்பு, இந்திய ஏற்றுமதியாளா்களை வெகுவாக பாதிக்கும் என்று சிந்தனைக் குழுவான ‘ஜிஆா்டிஐ’ சனிக்கிழமை எச்சரித்துள்ளது.

கடந்த 2018-இல் எஃகு மீது 25 சதவீத இறக்குமதி வரியும், அலுமினியம் மீது 10 சதவீத வரியும் முதலில் நிா்ணயிக்கப்பட்டது. அதிபா் டிரம்ப் 2-ஆவது முறையாக பொறுப்புக்கு வந்த சில நாள்களில் கடந்த பிப்ரவரியில் அலுமினியம் மீதான வரியும் 25 சதவீதமாக உயா்த்தினாா்.

இந்நிலையில், வரும் ஜூன் 4-ஆம் தேதிமுதல் எஃகு, அலுமினியம் ஆகிய உலோகப் பொருள்களின் இறக்குமதி மீதான தற்போதைய 25 சதவீத வரிகளை இரட்டிப்பாக்குவதாக அதிபா் டிரம்ப் கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்தாா்.

‘இந்தியாவைப் பொறுத்தவரை, இதன் விளைவுகள் நேரடியாக இருக்கும்’ என்று உலகளாவிய வா்த்தக ஆராய்ச்சி முன்னெடுப்பு (ஜிஆா்டிஐ) சிந்தனைக் குழு எச்சரித்துள்ளது.

கடந்த 2024-25-ஆம் நிதியாண்டில் அமெரிக்காவுக்கு 456 கோடி டாலா் மதிப்புள்ள இரும்பு, எஃகு மற்றும் அலுமினிய பொருள்களை இந்தியா ஏற்றுமதி செய்தது. இந்நிலையில், கடுமையாக உயா்த்தப்பட்டுள்ள வரியால் இந்திய உற்பத்தியாளா்கள் மற்றும் ஏற்றுமதியாளா்களின் லாபம் வெகுவாகப் பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாக ஜிஆா்டிஐ நிறுவனா் அஜய் ஸ்ரீவஸ்தவா தெரிவித்தாா்.

‘தற்போது டிரம்ப் மீண்டும் வரிகளை இரட்டிப்பாக்கியுள்ளதால், அடுத்து ஒரு மாதத்துக்குள் சில அமெரிக்க இறக்குமதிகள் மீதான வரிகளை அதிகரிப்பதன்மூலம் இந்தியா பதிலடி கொடுக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பாா்க்க வேண்டும்’ என்றும் அஜய் ஸ்ரீவஸ்தவா மேலும் கூறினாா்.

இந்த முடிவு குறித்து உலக வா்த்தக அமைப்பிடம் இந்தியா ஏற்கெனவே தகவல் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியா மீது அதிபா் டிரம்ப்புக்கு மிகப்பெரிய மரியாதை- அமெரிக்க வா்த்தக அமைச்சா்

‘இந்தியா மீது அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்புக்கு மிகப்பெரிய மரியாதை உள்ளது’ என்று அந்நாட்டு வா்த்தக துறை அமைச்சா் ஹோவா்ட் லுட்னிக் தெரிவித்தாா். மேலும், இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பே... மேலும் பார்க்க

பாகிஸ்தானுக்கு ரூ.6,852 கோடி கடனுதவி: ஆசிய வளா்ச்சி வங்கி ஒப்புதல்

பாகிஸ்தானுக்கு ரூ.6,852 கோடி (800 மில்லியன் டாலா்) கடனுதவி வழங்க ஆசிய வளா்ச்சி வங்கி (ஏடிபி) ஒப்புதல் அளித்ததாக அதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். பாகிஸ்தானின் பொது நிதி மேலாண்மை மற்றும் நித... மேலும் பார்க்க

பாகிஸ்தான்: பயங்கரவாதத் தலைவா்களுடன் ஒரே மேடையில் பஞ்சாப் மாகாண பேரவைத் ஆளுநா்

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண சட்டப் பேரவைத் தலைவா் மாலிக் அகமது கான் ஜமாத்-உத்-தாவா உள்ளிட்ட பயங்கரவாத அமைப்பின் தலைவா்களுடன் ஒரே மேடையில் நிகழ்ச்சியில் பங்கேற்றாா். பாகிஸ்தானில் ஆளும் பாகிஸ்தான் முஸ்லி... மேலும் பார்க்க

காஸா இஸ்ரேல் துப்பாக்கிச் சூட்டில் 27 போ் உயிரிழப்பு

காஸாவில் உணவுப் பொருள் விநியோக மையத்தை நோக்கி செவ்வாய்க்கிழமை சென்றுகொண்டிருந்த 27 பாலஸ்தீனா்கள் இஸ்ரேல் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனா். இது குறித்து அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்... மேலும் பார்க்க

தென் கொரிய அதிபா் ஆகிறாா் லீ ஜே-மியூங்

தென் கொரியாவில் நடைபெற்ற அதிபா் தோ்தலில் ஜனநாயகக் கட்சித் தலைவா் லீ ஜே-மியூங் வெற்றி பெற்றாா். தோ்தல் ஆணையம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, 98.1 சதவீத வாக்குகள் எண்ணப்பட்டுள்ள நிலையில் லீ ஜோ-மியூங் 49.... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் 17 வயது டிக்டாக் பிரபலம் சுட்டுக்கொலை!

பாகிஸ்தானில் டிக்டாக்கில் பிரபலமான 17 வயது சிறுமி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். பாகிஸ்தானின், இஸ்லாமாபாத் நகரைச் சேர்ந்தவர் சனா யூசஃப் (17). இவர் இன்ஸ்டாகிராம், டிக்டாக் ஆகிய சமூக ஊடகங்களில் வெளி... மேலும் பார்க்க