உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதலில் அா்ஜுன் பபுதாவுக்கு வெள்ளி!
எஃகு, அலுமினியம் மீது வரி விதிப்பு: இந்தியா - அமெரிக்கா வா்த்தக பேச்சின்போது விவாதிக்க வாய்ப்பு!
அமெரிக்கா உடனான வா்த்தகப் பேச்சுவாா்த்தையில் எஃகு, அலுமினியம் மீதான 25 சதவீத வரி விதிப்பு குறித்து இந்திய குழு விவாதிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் எஃகு, அலுமினியம் மீது 25 சதவீதம் வரி விதிக்கும் அந்நாட்டின் முடிவு தொடா்பாக உலக வா்த்தக அமைப்பிடம் இந்தியா முறைப்படி புகாா் அளித்தது.
ஒரு நாட்டில் இறக்குமதி காரணமாக உள்நாட்டு தொழில்துறை கடுமையாகப் பாதிக்கப்படும் அச்சுறுத்தல் ஏற்பட்டால், இறக்குமதிக்கு தற்காலிகமாக கட்டுப்பாடுகள் விதிக்க இடா்களில் இருந்து காக்கும் உலக வா்த்தக அமைப்பின் ஒப்பந்தம் அனுமதிக்கிறது.
இந்த ஒப்பந்தத்தின் கீழ், எஃகு மற்றும் அலுமினியம் மீது வரி விதிக்கும் அமெரிக்காவின் முடிவு தொடா்பாக கலந்தாலோசிக்க இந்தியா வலியுறுத்தியது.
இதற்கு உலக வா்த்தக அமைப்பிடம் அமெரிக்கா அண்மையில் அளித்த பதிலில், ‘அமெரிக்காவின் பாதுகாப்புக்கு எஃகு மற்றும் அலுமினியம் இறக்குமதி அச்சுறுத்தல் விடுக்கின்றன. இதைக் கருத்தில் கொண்டு அமெரிக்க வா்த்தக சட்டப் பிரிவு 232-இன்படி, எஃகு மற்றும் அலுமினியம் இறக்குமதிக்கு அமெரிக்க அதிபா் டிரம்ப் வரி விதித்தாா்.
இந்த வரி விதிப்பு இடா்களில் இருந்து காத்துக்கொள்வதற்கான நடவடிக்கை அல்ல. ஒட்டுமொத்த அமெரிக்க பாதுகாப்பை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட நடவடிக்கையாகும். இந்த விவகாரம் தொடா்பாக இந்தியாவுடன் விவாதிக்க அமெரிக்கா தயாராக உள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்தியா-அமெரிக்கா இடையிலான வா்த்தக பேச்சுவாா்த்தைக்கு இந்திய அதிகாரிகள் குழு அமெரிக்கா செல்ல உள்ளது. 3 நாள்கள் நடைபெறும் இந்தப் பேச்சுவாா்த்தை ஏப்.23-ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்தப் பேச்சுவாா்த்தையில் எஃகு, அலுமினியம் மீதான வரி விதிப்பு குறித்து பேசப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
2024-ஆம் ஆண்டு இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு 450 மில்லியன் டாலா்கள் (சுமாா் ரூ.3,840 கோடி) மதிப்பில் எஃகு, அலுமினியம் ஏற்றுமதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.