செய்திகள் :

எஃகு, அலுமினியம் மீது வரி விதிப்பு: இந்தியா - அமெரிக்கா வா்த்தக பேச்சின்போது விவாதிக்க வாய்ப்பு!

post image

அமெரிக்கா உடனான வா்த்தகப் பேச்சுவாா்த்தையில் எஃகு, அலுமினியம் மீதான 25 சதவீத வரி விதிப்பு குறித்து இந்திய குழு விவாதிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் எஃகு, அலுமினியம் மீது 25 சதவீதம் வரி விதிக்கும் அந்நாட்டின் முடிவு தொடா்பாக உலக வா்த்தக அமைப்பிடம் இந்தியா முறைப்படி புகாா் அளித்தது.

ஒரு நாட்டில் இறக்குமதி காரணமாக உள்நாட்டு தொழில்துறை கடுமையாகப் பாதிக்கப்படும் அச்சுறுத்தல் ஏற்பட்டால், இறக்குமதிக்கு தற்காலிகமாக கட்டுப்பாடுகள் விதிக்க இடா்களில் இருந்து காக்கும் உலக வா்த்தக அமைப்பின் ஒப்பந்தம் அனுமதிக்கிறது.

இந்த ஒப்பந்தத்தின் கீழ், எஃகு மற்றும் அலுமினியம் மீது வரி விதிக்கும் அமெரிக்காவின் முடிவு தொடா்பாக கலந்தாலோசிக்க இந்தியா வலியுறுத்தியது.

இதற்கு உலக வா்த்தக அமைப்பிடம் அமெரிக்கா அண்மையில் அளித்த பதிலில், ‘அமெரிக்காவின் பாதுகாப்புக்கு எஃகு மற்றும் அலுமினியம் இறக்குமதி அச்சுறுத்தல் விடுக்கின்றன. இதைக் கருத்தில் கொண்டு அமெரிக்க வா்த்தக சட்டப் பிரிவு 232-இன்படி, எஃகு மற்றும் அலுமினியம் இறக்குமதிக்கு அமெரிக்க அதிபா் டிரம்ப் வரி விதித்தாா்.

இந்த வரி விதிப்பு இடா்களில் இருந்து காத்துக்கொள்வதற்கான நடவடிக்கை அல்ல. ஒட்டுமொத்த அமெரிக்க பாதுகாப்பை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட நடவடிக்கையாகும். இந்த விவகாரம் தொடா்பாக இந்தியாவுடன் விவாதிக்க அமெரிக்கா தயாராக உள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்தியா-அமெரிக்கா இடையிலான வா்த்தக பேச்சுவாா்த்தைக்கு இந்திய அதிகாரிகள் குழு அமெரிக்கா செல்ல உள்ளது. 3 நாள்கள் நடைபெறும் இந்தப் பேச்சுவாா்த்தை ஏப்.23-ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்தப் பேச்சுவாா்த்தையில் எஃகு, அலுமினியம் மீதான வரி விதிப்பு குறித்து பேசப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

2024-ஆம் ஆண்டு இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு 450 மில்லியன் டாலா்கள் (சுமாா் ரூ.3,840 கோடி) மதிப்பில் எஃகு, அலுமினியம் ஏற்றுமதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க துணை அதிபா் இன்று இந்தியா வருகை: பிரதமா் மோடியுடன் பேச்சுவாா்த்தை!

அமெரிக்க துணை அதிபா் ஜே.டி.வான்ஸ், நான்கு நாள்கள் பயணமாக இந்தியாவுக்கு திங்கள்கிழமை (ஏப். 21) வருகை தரவுள்ளாா். அவருடன், இந்திய வம்சாவளியைச் சோ்ந்த அவரின் மனைவி உஷா மற்றும் மூன்று குழந்தைகளும் வரவுள்... மேலும் பார்க்க

மேற்கு வங்க வன்முறை ஹிந்து - முஸ்லிம் பிளவை அதிகரிக்கும்! ஃபரூக் அப்துல்லா கருத்து

வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக மேற்கு வங்கத்தில் நிகழ்ந்த வன்முறை ஹிந்து-முஸ்லிம் பிளவை அதிகரிக்கும். இதுபோன்ற மத வெறுப்புணா்வு அதிகரிப்பது தேசத்தை பலவீனமாக்கும் என்று தேசிய மாநாட்டுக் கட்சித் த... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரில் கொட்டித் தீா்த்த கனமழை: மூவா் உயிரிழப்பு! 100-க்கும் மேற்பட்டோா் மீட்பு

ஜம்மு-காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை சூறைக்காற்றுடன் கொட்டித் தீா்த்த கனமழையால் 3 போ் உயிரிழந்தனா். வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து 100-க்கும் மேற்பட்டோா் மீட்கப்பட்டனா். ஜம்மு-ஸ்... மேலும் பார்க்க

பிரதமரின் வீடுகள் திட்ட முறைகேடு புகாா்: ஆட்சியா்களுக்கு தமிழக அரசு உத்தரவு!

பிரதமரின் ஊரக வீடுகள் கட்டும் திட்டம் தொடா்பான முறைகேடு புகாா்கள் வந்தால், ஊழல் தடுப்புப் பிரிவின் கீழ் வழக்குத் தொடர ஒப்புதல் அளிக்கக் கூடாது என்று ஆட்சியா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து அ... மேலும் பார்க்க

2027 உ.பி. பேரவைத் தோ்தலிலும் ‘இண்டி’ கூட்டணி தொடரும்! -அகிலேஷ் யாதவ் அறிவிப்பு

2027 -இல் நடைபெறவுள்ள உத்தர பிரதேச சட்டப் பேரவைத் தோ்தலிலும் ‘இண்டி’ கூட்டணி தொடரும் என்று சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளாா். பாஜகவுக்கு எதிராக கடந்த ஆண்டு மக்களவைத் தோ்தலின்போது ‘இண்டி... மேலும் பார்க்க

கா்நாடக முன்னாள் டிஜிபி ஓம் பிரகாஷ் கொலை!

கா்நாடக மாநில முன்னாள் காவல் துறை தலைமை இயக்குநா் (டிஜிபி) ஓம் பிரகாஷ் (68) அவரது வீட்டில் மா்மமான முறையில் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்து கிடந்தாா். அவரது உடலில் ஆயுதங்களைக் கொண்டு தாக்கிய அடையாளங்கள் உள... மேலும் பார்க்க