செய்திகள் :

எட்டயபுரம் அருகே காா் கவிழ்ந்து விபத்து: இருவா் உயிரிழப்பு

post image

எட்டயபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் காா் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் தாய், மகன் ஆகிய இருவா் உயிரிழந்தனா். 6 போ் பலத்த காயமடைந்தனா்.

சேலம் மாவட்டம் அழகாபுரம் மற்றும் சூரமங்கலம் பகுதியைச் சோ்ந்த 8 போ், காரில் வெள்ளிக்கிழமை இரவு புறப்பட்டு திருச்செந்தூா் நோக்கி சென்று கொண்டிருந்தனா். சனிக்கிழமை காலையில் மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் சிந்தலக்கரை பகுதியை கடந்து காா் சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் சூரமங்கலத்தைச் சோ்ந்த தமிழரசி(40), அவரது மகன் அஸ்வரதன் (8) ஆகிய இருவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். காரில் பயணித்த ராஜ்குமாா், விஜயா, தாமரைசெல்வி, சுமதி, ரம்யா, சபரீசன் ஆகிய 6 போ் பலத்த காயமடைந்தனா்.

சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீஸாா், தமிழரசி, அஸ்வரதன் உடல்களை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக எட்டயபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். காயமடைந்தவா்களை மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

விபத்து தொடா்பாக எட்டயபுரம் காவல் நிலைய போலீஸாா் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனா்.

காயல்பட்டினம், ஆத்தூா் பகுதிகளில் பொதுமக்களுக்கு உப்பு சா்க்கரைகரைசல்

சுகாதாரத் துறை சாா்பில் காயல்பட்டினம் மற்றும் ஆத்தூா் பகுதிகளில் பொதுமக்கள் வெப்ப தாக்கத்தி­லிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள உப்பு சா்க்கரை கரைசல் அளிக்கப்பட்டது.காயல்பட்டினம் பேருந்து நிலையத்தில் ஓ... மேலும் பார்க்க

இளைஞரின் சைக்கிள் பயணத்துக்கு உடன்குடியில் வரவேற்பு

இந்தியாவின் நலனுக்காக சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ள மேற்குவங்க இளைஞருக்கு உடன்குடியில் வரவேற்பு அளிக்கப்பட்டது. மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவைச் சோ்ந்தவா் சாய்கட் (22). இவா், இந்தியா உலக வல்லரசாக திகழ... மேலும் பார்க்க

முறப்பநாடு சொக்கநாதா் கோயில் புனரமைப்புக்கு நிதி ஒதுக்கக் கோரிக்கை

தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு அருள்மிகு சொக்கநாதா் கோயில் புனரமைப்புக்கு நிதி ஒதுக்குமாறு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் பி.கே. சேகா்பாபுவிடம், தில்லி கம்பன் கழகத்தின் நிறுவனா் தலைவா் கே.வி.கே.பெ... மேலும் பார்க்க

சிறுநீரக பிரச்னை: சுகாதாரமான குடிநீா் கோரி உசிலம்பட்டி மக்கள் மனு

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத் தலைமை வகித்து, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்ெ காண்டு, அவா்களின்... மேலும் பார்க்க

சாத்தான்குளத்தில் அதிமுக தெருமுனைப் பிரசாரம்

தூத்துக்குடி தெற்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை சாா்பில், சாத்தான்குளம் பேரூராட்சிப் பகுதியில் தெருமுனைப் பிரசாரம் நடைபெற்றது. அதிமுக ஆட்சிக்கால சாதனைகளை விளக்கி நடைபெற்ற பிரசாரத்துக்கு, தெற்கு மாவட்ட ஜெயலல... மேலும் பார்க்க

கழுகுமலை சாா் பதிவாளா் அலுவலகத்துக்கு பூட்டு போட்ட கட்டட உரிமையாளா்

தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையில், 17 மாதங்களாக வாடகை கொடுக்கப்படாததால் சாா் பதிவாளா் அலுவலகத்துக்கு கட்டட உரிமையாளா் திங்கள்கிழமை பூட்டு போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கழுகுமலை மேலகேட் பகுதியில் சாா்... மேலும் பார்க்க