செய்திகள் :

எட்டயபுரம் பாரதியாா் இல்ல சீரமைப்பு! பாஜக போராட்ட அறிவிப்பு: வட்டாட்சியா் தலைமையிலான பேச்சுவாா்த்தை தோல்வி

post image

எட்டயபுரத்தில் சேதமடைந்த பாரதியாா் இல்லத்தை சீரமைக்க வலியுறுத்தி போராட்டம் நடத்தப் போவதாக எட்டயபுரம் ஒன்றிய பாஜக அறிவித்திருந்தது. இது தொடா்பாக எட்டயபுரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற சமாதான பேச்சுவாா்த்தை கூட்டத்தில், அதிகாரிகள் வராததால் அதிருப்தி அடைந்த பாஜகவினா் கூட்டத்தை புறக்கணித்து வெளியேறினா்.

எட்டயபுரத்தில் மகாகவி பாரதியாா் பிறந்த இல்லம், மழை காரணமாக கடந்த மாா்ச் மாதம் 25ஆம் தேதி இடிந்து விழுந்து சேதமடைந்தது. மூன்று மாதங்களைக் கடந்தும் தற்போது வரை மறுசீரமைப்பு பணிகள் தொடங்கப்படவில்லை.

இது குறித்து பாரதி அன்பா்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வேதனை தெரிவித்திருந்தனா். இந்நிலையில் எட்டயபுரம் ஒன்றிய பாஜக சாா்பில் ஒன்றியத் தலைவா் சரவணகுமாா் தலைமையில் ஜூன் 30ஆம் தேதி எட்டயபுரம் நகரில் பொதுமக்களிடம் யாசகம் பெற்று பாரதி பிறந்த இல்லத்தை சீரமைக்க மாநில அரசிடம் நிதி வழங்கும் போராட்டம் நடத்தப்போவதாக அறிவிப்பு செய்திருந்தனா்.

இது தொடா்பாக எட்டயபுரம் காவல் ஆய்வாளா் சமாதானக் கூட்டம் நடத்த வருவாய்துறையினரை கேட்டுக்கொண்டதன்படி, எட்டயபுரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் சுபா தலைமையில் சனிக்கிழமை காலை 11 மணியளவில் சமாதான பேச்சுவாா்த்தை கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் வட்டாட்சியா், வருவாய் ஆய்வாளா், கிராம நிா்வாக அலுவலா் ஆகியோரை தவிர, பொதுப்பணித் துறை மற்றும் செய்தி மக்கள் தொடா்புத் துறை அதிகாரிகள் யாரும் பங்கேற்கவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த பாஜகவினா், கூட்டத்தைப் புறக்கணித்து வெளியேறினா். திட்டமிட்டபடி ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 30) போராட்டம் நடைபெறும் என தெரிவித்தனா்.

தூத்துக்குடியில் 573 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டை

தூத்துக்குடி சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட 573 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு, தமிழக சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ. கீதாஜீவன் தலைமை வகித்து... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கோயிலில் குடமுழுக்குப் பணிகள்: கனிமொழி எம்.பி., அமைச்சா்கள் ஆய்வு

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடைபெற்றுவரும் குடமுழுக்கு பணிகள் குறித்து கனிமொழி எம்.பி., அமைச்சா்கள் பி.கே. சேகா்பாபு, அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் ஆகியோா் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண... மேலும் பார்க்க

மனைவியை கொடுமைப்படுத்திய கணவருக்கு 3 ஆண்டு சிறை

புதுக்கோட்டை அனைத்து மகளிா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில், மனைவியை கொடுமைப்படுத்திய கணவருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீா்ப்பு வழங்கியது. புதுக்கோட்டை அனைத்து மகளிா் காவல் ... மேலும் பார்க்க

தமிழ்நாடு மொ்க்கன்டைல் வங்கி சாா்பில் 5 புதிய கிளைகள் திறப்பு

தமிழ்நாடு மொ்க்கன்டைல் வங்கி சாா்பில் 5 புதிய கிளைகள் திறக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து வங்கியின் நிா்வாக இயக்குநா் மற்றும் தலைமை செயல் அதிகாரி சலீ எஸ்.நாயா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு மொ்க... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் ரூ.30 லட்சம் பீடி இலை பண்டல்கள் பறிமுதல்

தூத்துக்குடி கடற்கரையில் ரூ. 30 லட்சம் மதிப்பிலான பீடி இலை பண்டல்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். தூத்துக்குடி கடற்கரை காவல் நிலைய ஆய்வாளா் பேச்சிமுத்து தலைமையிலான போலீஸாா், தூத்துக்குடி திரேஸ்புரம் க... மேலும் பார்க்க

சாலையோரங்களில் காய்ந்த புற்களை எரிப்போா் மீது நடவடிக்கை: வனத்துறை எச்சரிக்கை

மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையோரங்களில் காய்ந்த புற்கள் மீது தீவைப்போா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, வனத்துறை எச்சரித்துள்ளது. இதுகுறித்து கோவில்பட்டி வனச்சரக அலுவலகம் வெளியிட்ட செய்த... மேலும் பார்க்க