செய்திகள் :

எதிரணியில் விராட் கோலி இருந்தால் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது! -ருதுராஜ்

post image

பெங்களூரு அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி எதிரணியில் இருந்தால் அந்தப் போட்டி ரசிகர்களால் எப்போதும் எதிர்பார்க்கப்படும் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார்.

18-வது ஐபிஎல் தொடரின் 8-வது போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

கடந்தாண்டு கட்டாயம் வென்றாக வேண்டிய போட்டியில் சென்னை அணி தோற்று சில புள்ளிகள் வித்தியாசத்தில் வெளியேறியதால் அதற்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் இருக்கிறது. அதே வேளையில் ஆர்சிபி அணி சென்னையில் வென்று 17 ஆண்டுகள் ஆவதாலும், இரு அணிகளிலும் அதிரடி வீரர்கள் வரிந்துக் கட்டிக்கொண்டு இருப்பதால் இந்தப் போட்டியில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இரு அணிகளும் முதல் போட்டியில் அபார வெற்றி பெற்றதால் இரண்டாவது வெற்றியைப் பெறுவது யார் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்திருக்கிறது. முதல் போட்டியில் விராட் கோலி, பில் சால்ட், சென்னைக்கு கெய்க்வாட், ரச்சின் ரவீந்திரா ஆகியோர் அரைசதம் விளாசியிருந்தனர்.

இதுபற்றி செய்தியாளர் சந்திப்பில் சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கூறுகையில், “நாட்டுக்காகவும், பெங்களூரு அணிக்காகவும் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வரும் விராட் கோலி, எதிரணியில் இருந்தால் அந்தப் போட்டி ரசிகர்களால் எப்போதும் எதிர்பார்க்கப்படும் ஒரு மோதலாகவே இருக்கும்.

இரு அணிகளுக்கு இடையிலான போட்டியில் எதோ தனித்துவம் இருக்கிறது. ஆர்சிபி அணி வலுவாக இருக்கிறது. மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியைப் போலவே இந்தப் போட்டியிலும் பரபரப்புக்குப் பஞ்சமிருக்காது. ரசிகர்கள் தவிர்க்கக்கூடாதப் போட்டியாக இருக்கும்.

ரஜத் படிதார் தலைமையிலான ஆர்சிபியை எதிர்கொள்வதற்கு நானும் ஆவலாக இருக்கிறேன். நாங்கள் இருவரும் நண்பர்கள் தான் என்றாலும், ஆர்சிபி வலுவான அணி என்பதில்லை எந்த சந்தேகமும் இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: ஐபிஎல்: சென்னை சேப்பாக்கத்தில் போக்குவரத்து மாற்றம்! ரசிகர்கள் கவனிக்க..!

பூரண், பதோனி விளாசல்: பஞ்சாப் அணிக்கு 172 ரன்கள் இலக்கு!

ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணிக்கு 172 ரன்களை இலக்காக நிர்ணயித்தது லக்னௌ அணி.முதலில் பேட் செய்த லக்னௌ 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்தது. லக்னௌ தரப்பில் அதிகபட்சமாக பூரண் 44, ப... மேலும் பார்க்க

ஐபிஎல் அறிமுகப் போட்டியில் அசத்திய டாப் 5 பந்துவீச்சாளர்கள்!

ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் அறிமுக வீரராக களமிறங்கிய அஸ்வனி குமார் அபார பந்துவீச்சை வெளிப்படுத்தினார்.ஐபிஎல் தொடரில் மும்பை வான்கடே திடலில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ்... மேலும் பார்க்க

சிஎஸ்கே - தில்லி போட்டி: டிக்கெட் விற்பனை! கிரிக்கெட் ரசிகர்கள் கவனிக்க..!

சென்னை சேப்பாக்கத்தில் ஏப்ரல் 5 ஆம் தேதியன்று நடைபெறும் சென்னை, தில்லி அணிகள் மோதும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை(ஏப்ரல் 2) தொடங்குகிறது.சேப்பாக்கத்தில் நடைபெற்ற மும்பை, பெங்களூரு அணிகளுக்கு இடைய... மேலும் பார்க்க

எந்த அணிக்கும் இந்த நிலை வரலாம்; கேகேஆர் தோல்வி குறித்து ரமன்தீப் சிங்!

மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியில் ஏற்பட்ட தோல்வி குறித்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ரமன்தீப் சிங் பேசியுள்ளார்.ஐபிஎல் தொடரில் மும்பை வான்கடே திடலில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் மும்பை இந்... மேலும் பார்க்க

பஞ்சாப் கிங்ஸ் பந்துவீச்சு: லோக்கி பெர்குசன் அறிமுகம்!

ஐபிஎல் தொடரின் லக்னௌ அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி டாஸ் வென்று பந்துவீசுவதாக அறிவித்துள்ளது.Locked in for his debut! ⚡#IPL2025 #LSGvPBKS #BasJeetnaHai #PunjabKings pic.twitter.com/DmhYl... மேலும் பார்க்க

திட்டங்களை தெளிவாக செயல்படுத்திய மும்பை இந்தியன்ஸ்; பாராட்டிய நியூசி. வீரர்!

மும்பை இந்தியன்ஸ் அதனுடைய திட்டங்களை தெளிவாக செயல்படுத்தி முதல் வெற்றியைப் பெற்றுள்ளதாக நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் பாராட்டியுள்ளார்.ஐபிஎல் தொடரில் மும்பை வான்கடே திடலில் நடைபெற்ற நேற்றையப் ப... மேலும் பார்க்க