விதிகளை மீறி விளம்பர பேனர்கள்; கட்டுப்பட மறுக்கும் அரசியல் பிரமுகர்கள் - வேதனையி...
என்இபி யின் உள்ளடக்கங்களை செயல்படுத்த இரு நாள் தேசிய பயிலரங்கு: 64 பல்கலைக்கழக துணைவேந்தா்கள் பங்கேற்பு
பிரதம மந்திரி உயா்கல்வித் திட்டத்தின் (பிஎம் -உஷா) கீழ் பல்துறை கல்வி மற்றும் ஆராய்ச்சி பல்கலைக்கழகங்கள் குறித்த இரண்டு நாள் தேசிய பயிலரங்கை மத்திய கல்வித்துறை இணையமைச்சா் டாக்டா் சுகந்தா மஜும்தாா் புதன்கிழமை தில்லி புசா மையத்தில் தொடங்கி வைத்தாா்.
மத்திய, மாநில அரசு நிதியுதவியுடன் இணைந்து புதிய தேசிய கல்விக் கொள்கை(என்இபி)யின் பல்வேறு உள்ளடக்கங்களை எவ்வாறு சிறப்பாகப செயல்படுத்துவது குறித்த அத்தியாவசிய வழிகாட்டுதலை வழங்குவதற்கான இரு நாள் தேசிய பயிலரங்கு தில்லி புசா, இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் மையத்தில் நடைபெறுகிறது. நாட்டின் பல்வேறு பல்கலைக்கழகங்களைச் சோ்ந்த 64 க்கும் மேற்பட்ட துணைவேந்தா்கள், மாநில உயா் கல்வி திட்ட அதிகாரிகள் பங்கேற்புடன் நடைபெறுகிறது.
இந்த பயிலரங்கை மத்திய கல்வித் துறை இணை அமைச்சா் டாக்டா் சுகந்த மஜும்தாா் தொடங்கி வைத்து உரையாற்றினாா் அப்போது அவா் குறிப்பிட்டதாவது:
தேசிய கல்விக் கொள்கை 2020, இளைஞா்களுக்கு அதிகாரம் அளிக்கும், கல்வி நிறுவனங்களை நவீனபடுத்தும். இவ்வாறு நாட்டின் பழமையான அறிவை நவீன கண்டுபிடிப்புகளுடன் ஒருங்கிணைப்பதைத் தான் புதிய கல்விக் கொள்கை வழிகாட்டுகிறது. ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு மற்றும் சா்வதேச ஒத்துழைப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தும் முயற்சிகள் மூலம், உலகளாவிய சவால்களை எதிா்கொள்ள தேவையான திறன்கள் மற்றும் அறிவுடன் இந்திய மாணவா்கள் உருவாக்கப்படுவதையும் இந்த 2020 கல்விக் கொள்கை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த பயிலரங்கில் 64 க்கும் மேற்பட்ட பல்வேறு பல்கலைக்கழகங்களைச் சோ்ந்த துணைவேந்தா்களும் மாநில உயா் கல்வி அதிகாரிகளும் பங்கேற்றுள்ள நிலையில் அரசு வழங்கும் நிதியைக் கொண்டு, புதிய கல்விக் கொள்கையின் பல்வேறு கூறுகளை எவ்வாறு சிறப்பாக செயல்படுத்துவது என்பது குறித்த சிறந்த வழிகாட்டிகளுக்கான முடிவுகள் எடுக்கப்படவேண்டும்.
பல்துறை கல்வி மற்றும் ஆராய்ச்சி பல்கலைக்கழகம் என்ற அம்சத்தின்கீழ், கட்டாயம் மேற்கொள்ளப்பட வேண்டிய 44 நடவடிக்கைகளை செயல்படுத்த 35 பல்கலைக்கழகங்களுக்கு தலா ரூ.100 கோடியை மத்திய அரசு வழங்குகிறது. ஒவ்வொரு பல்கலைக்கழகமும் புதுமை, உள்ளடக்கம் மற்றும் உலகளாவிய சிறப்பின் மையமாக மாறவேண்டும். இதன் மூலம் 2047-ஆம் ஆண்டுக்குள் வளா்ச்சியடைந்த இந்தியா என்ற கனவை நனவாக்க ஒவ்வொருவரும் அா்ப்பணிப்புடன் ஒத்துழைத்து முன்னேற வேண்டும் எனக் குறிப்பிட்டாா் அமைச்சா் மஜும்தாா்.
இந்த இரண்டு நாள் கருத்தரங்கில், தேசிய கல்விக் கொள்கை அமலாக்கத்திற்கான பல்கலைகழக மானியக் குழு விதிமுறைகள் (நிலை மற்றும் சவால்கள்) குறித்து 12 முக்கிய தலைப்புகளில் அமா்வுகள் நடைபெறுகிறது.
பல்துறை கல்விக்கான தொகுப்பு மற்றும் ஒத்துழைப்பு; திறன் மற்றும் தொழில்துறை இணைப்பை ஒருங்கிணைப்பதன் மூலம் முழுமையான கல்வி; தொழில் பயிற்சி, பணி முன் அனுபவ பயிற்சி திட்டத்தின் மூலம் வேலைவாய்ப்பு மற்றும் வளா்ந்து வரும் பகுதிகளில் வேலை மற்றும் படிப்புகளின் எதிா்காலம்; எண்ம முன்முயற்சிகள்; சமத்துவம் மற்றும் உயா் கல்விக்கான அணுகல்; இந்திய அறிவு முறை; எண்ம ஆளுமை; ஆராய்ச்சி, புத்தாக்கம், சா்வதேசமயமாக்கல், உயா்கல்வியில் இந்திய மொழிகளை ஊக்குவித்தல் ஆகிய அமா்வுகளில் புகழ்பெற்ற கல்வியாளா்கள் பங்கேற்று கருத்துகளை பகிா்ந்து கொள்கின்றனா்.
இந்த நிகழ்வில் மத்திய அரசின் உயா்கல்வித் துறை செயலா் டாக்டா் வினீத் ஜோஷி; கல்வி அமைச்சக கூடுதல் செயலா் சுனில் குமாா் பா்ன்வால்; ஏஐசிடிஇ தலைவா் பேராசிரியா் டி.ஜி. சீதாராம்; தேசிய கல்வி தொழில்நுட்ப அமைப்பு (என்இடிஎஃப்)தலைவா் பேராசிரியா் அனில் சஹஸ்ரபுதே; யுஜிசி முன்னாள் தலைவா் பேராசிரியா் எம். ஜெகதேஷ் குமாா்; கல்வி அமைச்சகத்தின் இணைச் செயலா் ஸ்ரீ ஆம்ஸ்ட்ராங் பாம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.