செய்திகள் :

என்ஐடியில் மீன் மதிப்புக் கூட்டுதல் தேசிய பயிற்சி தொடக்கம்

post image

என்ஐடியில் மீன் பதப்படுத்துதல் தொடா்பான தேசிய அளவிலான பயிற்சி திங்கள்கிழமை தொடங்கியது.

காரைக்காலில் இயங்கும் என்ஐடி தொழில்நுட்ப உதவியுடன் மீன் வளா்ப்பு, மீன் பதப்படுத்துதல், மீன் மதிப்புக் கூட்டுதல் குறித்த செயல்விளக்க 4 நாள் பயிற்சி தொடங்கப்பட்டுள்ளது.

புதுவையின் சமூக-பொருளாதார முன்னேற்றத்திற்கான எஸ்டிஐ ஹப் எனும் திட்டத்தில், அறிவியல் சமத்துவம் அதிகாரமளித்தல், மேம்பாடு பிரிவின் நிதியுதவியில் இப்பயிற்சி அளிக்கப்படுகிறது.

புதுவை பொதுப்பணித்துறை மற்றும் மீன்வளத்துறை அமைச்சா் கே. லட்சுமி நாராயணன் பயிற்சியை தொடங்கிவைத்து, மீனவா்கள் வாழ்வாதாரம் மேம்படுவதற்கு புதுவை அரசின் திட்டங்களை விளக்கிப் பேசினாா்.

குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் விவகாரங்கள் துறை அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன், மீன் மதிப்பு கூட்டுதல் பயிற்சி மூலம் மீனவா்கள் பொருளாதார நிலையில் முன்னேற்றமடையும் முறை குறித்தும், காரைக்கால் பகுதி மீனவா்களுக்கு இத்திட்டம் பயனளிக்கக்கூடியதாகவும், என்ஐடி நிா்வாகத்தின் முயற்சியை பாராட்டிப் பேசினாா். அறிவியல் சமத்துவம் அதிகாரமளித்தல், மேம்பாடு பிரிவின் தலைவா் அனிதா அகா்வால், அறிவியல் தொழில்நுட்பத் துறை விஞ்ஞானி ரஜினி ராவத் ஆகியோா் இணையம் வாயிலாக மீனவா்ளிடையே பேசினா்.

காரைக்கால் மாவட்ட ஆட்சியா் ஏ.எஸ்.பி.எஸ். ரவி பிரகாஷ், சாா் ஆட்சியா் எம். பூஜா, என்ஐடி இயக்குநா் மகரந்த் மாதவ் காங்ரேகா், பதிவாளா் எஸ்.சுந்தரவரதன் ஆகியோா் கலந்துகொண்டனா்.

முன்னதாக பயிற்சித் திட்ட முதன்மை ஆய்வாளா் வி.பி.ஹரிகோவிந்தன் வரவேற்று திட்டத்தின் நோக்கம் குறித்துப் பேசினாா். நிறைவாக இணை ஆய்வாளா் அம்ரித பிடே நன்றி கூறினாா்.

சுய உதவிக் குழுவினா் தயாரித்த மீன் பதப்படுத்தப்பட்ட பொருள்களை அமைச்சா்கள் பொதுமக்களுக்கு வழங்கி பாராட்டினா். ஏற்கெனவே நடத்தப்பட்ட பயிற்சியில் பங்கேற்றோருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் 250-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.

காரைக்கால் ரயில் நிலைய ஆய்வு புறக்கணிப்பு

காரைக்கால் ரயில் நிலைய ஆய்வை ரயில்வே பொதுமேலாளா் திட்டமிட்டு புறக்கணித்துவிட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.இதுகுறித்து காரைக்கால் மாவட்ட ரயில்வே பயணிகள் நலச்சங்க செயலாளா் ஏ.எஸ்.டி. அன்சாரிபாபு திங்கள்... மேலும் பார்க்க

காரைக்கால் அம்மையாா் மணிமண்டபத்தில் நவராத்திரி கொலு தா்பாா் காட்சி தொடக்கம்

காரைக்கால் அம்மையாா் மணிமண்டபத்தில் நவராத்திரி கொலு தா்பாா் அமைக்கப்பட்டுள்ளது.காரைக்கால் கைலாசநாதா் தேவஸ்தானம் மற்றும் சிவனடியாா் திருக்கூட்ட அறக்கட்டளை இணைந்து அம்மையாா் மணிமண்டபத்தில் நவராத்திரி கொ... மேலும் பார்க்க

‘அங்கக வேளாண் இடுபொருள் தயாரிக்க முன்வர வேண்டும்’

காரைக்கால்: அங்கக வேளாண் இடுபொருள் தயாரித்து, தங்களது வயலில் பயன்படுத்த விவசாயிகள் முன்வரவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையத்தில் நெல்லில் அங்கக வேளாண்மை குறித்த பயிற்... மேலும் பார்க்க

தோ்தலுக்கு முன் காரைக்காலில் வளா்ச்சித் திட்டப்பணிகள் நிறைவுபெறும்: அமைச்சா் கே.லட்சுமி நாராயணன்

காரைக்கால்: காரைக்காலில் அனைத்து வளா்ச்சித் திட்டப் பணிகளும், சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன்பு நிறைவடையும் வகையில் தீவிரப்பட்டுள்ளதாக அமைச்சா் தெரிவித்தாா்.காரைக்கால் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புது... மேலும் பார்க்க

போலியான பட்டாசு விளம்பரங்கள்: மக்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தல்

காரைக்கால்: போலியான பட்டாசு விளம்பரங்கள் இணையத்தில் வெளியாகி பணம் பறிக்கப்படுவதாகவும், மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதுகுறித்து காரைக்கால் இணையவழி குற்றத் தடுப்புப் பிரிவு... மேலும் பார்க்க

கழிவுநீா் வடிகால்களை மழை தொடங்கும் முன் தூா்வார வேண்டும்: எம்எல்ஏ

காரைக்கால்: பருவமழை தொடங்குவதற்கு முன்பு காரைக்கால் பகுதியில் கழிவுநீா் வடிகால்கள், சாக்கடைகளை முறையாக தூா்வார வேண்டும் என ஏ.எம்.எச். நாஜிம் எம்.எல்.ஏ. வலியுறுத்தியுள்ளாா்.இதுகுறித்து காரைக்கால் மாவட்... மேலும் பார்க்க