செய்திகள் :

என்னுடைய வேலையை செய்தேன்; அணியின் வெற்றிக்கு உதவிய டி காக் பேச்சு!

post image

தொடக்க ஆட்டக்காரராக என்னுடைய வேலையை செய்தேன் என கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர் குயிண்டன் டி காக் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் 18-வது சீசனில் குவாஹாட்டியில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் தொடக்க ஆட்டக்காரர் குயிண்டன் டி காக்கின் அதிரடியான ஆட்டத்தால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை வீழ்த்தியது.

அதிரடியாக விளையாடிய குயிண்டன் டி காக் 61 பந்துகளில் 97 ரன்கள் (8 பவுண்டரிகள், 6 சிக்ஸர்கள்) எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதிரடியாக விளையாடி அணியின் வெற்றிக்கு உதவிய டி காக் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மனம் திறந்த டி காக்

நடப்பு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அதன் முதல் வெற்றியைப் பதிவு செய்த நிலையில், தொடக்க ஆட்டக்காரராக நான் எனது வேலையை செய்தேன் என குயிண்டன் டி காக் பேசியுள்ளார்.

இதையும் படிக்க: வெற்றிப் பாதைக்கு திரும்ப ராஜஸ்தான் ராயல்ஸ் செய்ய வேண்டியதென்ன? ராபின் உத்தப்பா பதில்!

இது தொடர்பாக ஐபிஎல் தரப்பில் வெளியிட்டுள்ள விடியோவில் அவர் பேசியிருப்பதாவது: தொடக்க ஆட்டக்காரராக அணிக்காக சிறப்பாக செயல்படுவது எனது வேலை. ஆட்டத்தின் தன்மையை உணர்ந்து அணியை வெற்றியை நோக்கி எடுத்துச் செல்ல வேண்டிய பொறுப்பு தொடக்க ஆட்டக்காரருக்கு இருக்கிறது. கொல்கத்தாவில் நடைபெற்ற கடைசி ஆட்டத்துக்குப் பிறகு, நாங்கள் நிறைய ஆலோசனை மேற்கொண்டோம். முதல் போட்டிக்குப் பிறகு அணி வீரர்கள் மேற்கொண்ட ஆலோசனை அணியின் வெற்றிக்கு உதவியது என்றார்.

ஐபிஎல் தொடரின் முதல் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தோல்வியைத் தழுவியது குறிப்பிடத்தக்கது.

திட்டங்களை தெளிவாக செயல்படுத்திய மும்பை இந்தியன்ஸ்; பாராட்டிய நியூசி. வீரர்!

மும்பை இந்தியன்ஸ் அதனுடைய திட்டங்களை தெளிவாக செயல்படுத்தி முதல் வெற்றியைப் பெற்றுள்ளதாக நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் பாராட்டியுள்ளார்.ஐபிஎல் தொடரில் மும்பை வான்கடே திடலில் நடைபெற்ற நேற்றையப் ப... மேலும் பார்க்க

ஒவ்வொரு போட்டியிலும் 1% முன்னேற விரும்புகிறேன்: அர்ஷ்தீப் சிங்

பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடும் இடதுகை வேகப் பந்துவீச்சாளர் ரஷ்தீப் சிங் சுய விமர்சனத்தை செய்துகொண்டு ஒவ்வொரு போட்டியிலும் 1 சதவிகிதம் முன்னேற வேண்டுமென விரும்புவதாக ஜியோ ஹாட்ஸ்டாருக்கு அளித்த பேட்... மேலும் பார்க்க

மதிய உணவு உண்ணாமல் விளையாடிய அஸ்வனி குமார்..! பாண்டியாவின் அறிவுரையால் கிடைத்த விக்கெட்!

அறிமுகப் போட்டி என்பதால் மதிய உணவு உண்ணாமலே விளையாடியதாக ஆட்ட நாயகன் விருது வென்ற இளம் மும்பை வீரர் அஸ்வனி குமார் பேசியுள்ளார்.ஐபிஎல் 18ஆவது சீசனின் 12ஆவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு நிர்ணயி... மேலும் பார்க்க

மும்பை அணியில் இளம் வீரர்கள் தேர்வு குறித்து பேசிய ஹார்திக் பாண்டியா!

ஐபிஎல் 18ஆவது சீசனின் 12ஆவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு நிர்ணயிக்கப்பட்ட 117 என்ற இலக்கினை 12.5 ஓவர்களில் வென்று அசத்தியது. இந்தப் போட்டியில் மும்பை சார்பாக அறிமுகமான அஸ்வினி குமார் 4 விக்கெ... மேலும் பார்க்க

அஸ்வனி, ரயான் அபாரம்; மும்பைக்கு முதல் வெற்றி

ஐபிஎல் போட்டியின் 12-ஆவது ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடா்ஸை திங்கள்கிழமை வெற்றி கண்டது. முதலில் கொல்கத்தா 16.2 ஓவா்களில் 116 ரன்களுக்... மேலும் பார்க்க

அறிமுகப் போட்டியில் அசத்திய இளம் வீரர்; 116 ரன்களுக்கு ஆட்டமிழந்த கேகேஆர்!

மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 116 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.ஐபிஎல் தொடரில் மும்பை வான்கடே திடலில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் மும்பை இந்திய... மேலும் பார்க்க