செய்திகள் :

'என்னை கல்யாணம் பண்ணிட்டு அவகூட ஹனிமூனா?' - கோவை விமான நிலையத்தில் இளைஞரிடம் வாக்குவாதம் செய்த பெண்!

post image

கோவை விமான நிலையத்துக்கு சென்னையில் இருந்து நேற்று இரவு விமானம் வந்தது. அதில் ஒரு இளம் தம்பதி வந்திருந்தனர். அண்மையில் திருமணமான அந்த தம்பதியினர் ஹனிமூனுக்காக எகிப்து சென்றுவிட்டு கோவை திரும்பியுள்ளனர். அந்த தம்பதியை வரவேற்க அவர்களின் குடும்பத்தினரும் விமான நிலையம் வந்திருந்தனர்.

தம்பதி மற்றும் இளம்பெண்

அப்போது அங்கு திடீரென ஒரு இளம்பெண் தம்பதி வெளியே வரும்போது, “என்னை கல்யாணம் பண்ணிட்டு அவக்கூட ஹனிமூன் போயிட்டு வரியா. பொம்பளை பொறுக்கி.” என்று திட்ட தொடங்கினார்.

தன் கணவரை மற்றொரு பெண் திட்டுவதை பார்த்து என்ன செய்வதென்று அறியால் மனைவி திகைத்து நின்றார். அந்த இளைஞரின் உறவினர் ஒருவர் இளம் பெண்ணின் கையை பிடித்து இழுத்து சமரசம் செய்ய முயற்சி செய்தார். தம்பதி அங்கிருந்து காரில் கிளம்பினர். இளம்பெண் அவர்களை பின் தொடர்ந்து சென்று,

இளம்பெண்

“அவனை நம்பாதே.. அவன் பொம்பளை பொறுக்கி.” என்று கூச்சலிட்டார். ஆனால் இளைஞரின் உறவினர் பெண்ணின் கையை விடவே இல்லை. இதனால் ஆத்திரமடைந்த இளம்பெண் அவரின் கன்னத்தில் அறைந்தார்.

மேலும் அவரின் சட்டையைப் பிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் அவரை சமாதானம் செய்ய முயற்சி செய்தனர். “காசு இருந்தா என்ன வேண்டுமானாலும் பண்ணுவீங்களா.” என்று ஆவேசமாக கேட்டார்.  சுற்றி பலர் வேடிக்கை பார்த்து வீடியோ எடுத்து கொண்டிருந்தனர்.

இளம் பெண்

அவர்களை பார்த்து, “இவ்ளோ பேர் வீடியோ எடுக்கறீங்க. அவனை யாராவது பிடிச்சீங்களா. அவன் மேல பீளமேடு ஸ்டேஷன்ல கம்ப்ளைன்ட் கொடுத்துருக்கேன்.” என்றும் அந்த பெண் கூறினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொழிலதிபர் ஒருவரின் மகனான அந்த இளைஞர் இன்ஸ்டாகிராம் மூலம் அந்த இளம்பெண்ணுடன் பழகி காதலித்துள்ளனர். பிறகு இளைஞருக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நிச்சயமானதால் அந்த பெண் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதற்கு இளைஞர் இந்த பெண்ணுக்கு தாலி கட்டி சமாதானம் செய்ததாக கூறப்படுகிறது.

இன்ஸ்டாகிராம்

இதனிடையே மற்றொரு பெண்ணை திருமணம் செய்து ஏமாற்றியதால், அவர் ஆத்திரமடைந்து விமான நிலையத்தில் பிரச்னை செய்துள்ளார். இது குறித்து பீளமேடு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருமண ஆசை காட்டி கிரிப்டோகரன்சி மோசடி; தேனி இளைஞரிடம் 88 லட்சம் பறித்த கும்பல் கைது - நடந்தது என்ன?

தேனியைச் சேர்ந்த இளைஞரிடம் திருமண ஆசைகாட்டி கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்யக் கூறி 88.58 லட்ச ரூபாயை மோசடி செய்த 4 பேரை தேனி சைபர் க்ரைம் போலீஸார் கைது செய்துள்ளனர். மோசடியில் ஈடுபட்டவர்கள் 2 கூலித... மேலும் பார்க்க

Karnataka Bank Theft: 'Money Heist' பார்த்து SBI வங்கியை கொள்ளை அடித்த மதுரை கும்பல் - பகீர் பின்னணி

மதுரையைச் சேர்ந்த விஜய்குமார், அஜய்குமார் இருவரும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் கர்நாடகா தாவங்கேர் மாவட்டத்தில் இருக்கும் நியாமதி தலுகாவிற்கு பிழைப்புக்காகச் சென்று ஸ்வீட் கடை நடத்தி வந்துள்ளனர். கட... மேலும் பார்க்க

கிளாமர் காளி கொலையில் தேடப்பட்டவர்; வெள்ளைக்காளியின் கூட்டாளி - மதுரை என்கவுன்ட்டர் பின்னணி

மதுரையில் வி.கே.குருசாமி - ராஜபாண்டி தரப்பினருக்குள் நீண்டகாலமாக பகை தொடர்ந்து வருகிறது. இதில் பழிக்குப்பழியாக கொலைகள் நடந்து வந்த நிலையில், சில நாள்களுக்கு முன் குருசாமியின் உறவினர் கிளாமர் காளி என்ற... மேலும் பார்க்க

கள்ள நோட்டல்ல, கலர் நோட்டு - தப்பிய விசிக கடலூர் மாவட்ட பொருளாளர்; சிக்கிய துப்பாக்கிகள் - பின்னணி?

கடலூர் மாவட்டம், திட்டக்குடி அதர்நத்தம் கிராமத்தைச் சேர்ந்த செல்வம், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கடலூர் மேற்கு மாவட்டப் பொருளாளராக பதவி வகித்து வந்தார். இவரும் ஆவட்டி பகுதியைச் சேர்ந்த சங்கர் என்பவர... மேலும் பார்க்க

நெல்லை: 3 மாதங்களில் 41 பேருக்கு ஆயுள் தண்டனை; வழக்குகளை முடிப்பதில் தீவிரம் காட்டும் போலீஸார்

தென் மாவட்டங்களில் பதற்றமான ஊர்கள் நிறைந்தது நெல்லை மாவட்டம். ஆனால், போலீஸாரின் தீவிர கண்காணிப்பு, குற்றவாளிகளை கைது செய்தல், அவர்களுக்கு தண்டனை பெற்றுத்தருதலில் போலீஸார் ஒருங்கிணைந்து திறம்பட செயல்பட... மேலும் பார்க்க

லிவ்இன் உறவு; கருகலைப்பு - கும்பமேளா பிரபலம் மோனலிசாவுக்கு வாய்ப்பு கொடுப்பதாக கூறிய இயக்குநர் கைது

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயக்ராஜ் நகரில் சமீபத்தில் நடந்த கும்பமேளாவில் ருத்ராட்ச மாலை விற்பனை செய்து மோனலினா போஸ்லே என்ற பெண் பிரபலம் அடைந்தார். அப்பெண் சமூக வலைத்தளத்தில் பிரபலம் அடைந்ததால், அவர் இப்... மேலும் பார்க்க