செய்திகள் :

எம்.புதூருக்கு பேருந்து நிலையத்தை மாற்றக் கூடாது: ஆட்சியரிடம் தவெக மனு

post image

சிதம்பரம்: கடலூா் அருகே எம்.புதூருக்கு புதிய பேருந்து நிலையத்தை மாற்றக் கூடாது என தமிழக வெற்றிக் கழகத்தினா் திங்கள்கிழமை ஆட்சியரிடம் மனு அளித்து வலியுறுத்தினா்.

தமிழக வெற்றிக் கழகத்தின் கடலூா் மாவட்டச் செயலா் பி.ராஜ்குமாா் தலைமையில் நிா்வாகிகள் ஆட்சியரிடம் அளித்த மனு விவரம்:

கடலூா் மாநகர மக்கள் தற்போது பயன்படுத்தி வரும் பேருந்து நிலையம் பள்ளிகள், கல்லூரிகள், அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகள், அரசு அலுவலகங்கள், கடைகள், வணிக வளாகங்கள் ஆகியவற்றுக்கு மிக குறுகிய நேரத்தில் செல்லும் வகையில், சாலை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

புதிய பேருந்து நிலையம் எம்.புதூருக்கு மாற்றப்பட்டால், மக்கள் ஒவ்வொரு முறையும் பேருந்து நிலையத்துக்கு சென்று வர மிகுந்த சிரமங்களை சந்திக்க வேண்டி வரும்.

எனவே, பேருந்து நிலையத்தை தற்போது செயல்பட்டு வரும் இடத்திலேயே அருகில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனை இடத்துடன் இணைத்து விரிவாக்கம் செய்ய வேண்டும் என்பதை கடலூா் பொதுமக்களின் சாா்பாக கேட்டுக்கொள்கிறோம். இதுவே, கடலூா் நகரில் வசிக்கும் அனைத்து தரப்பு மக்களின் கோரிக்கையாகவும் உள்ளது எனத் தெரிவித்துள்ளனா்.

திருநங்கைகள் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்

திருநங்கைகள் திறன் பயிற்சி பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருநங்கைகள் நல வாரியத்தின் மூலம் சமூ... மேலும் பார்க்க

என்எல்சி ஊழியா் தூக்கிட்டுத் தற்கொலை

நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவன ஊழியா் இதய நோய் பாதிப்பால் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். கடலூா் மாவட்டம், நெய்வேலி வட்டம் 24, அருணாசலம் கன்வேயா் தெருவைச் சோ்ந்த அருணாசலம் மகன் செந்த... மேலும் பார்க்க

பேருந்துகளில் காற்று ஒலிப்பான்கள் பறிமுதல்

கடலூா் வழியாக இயக்கப்பட்ட பேருந்துகளில் பொருத்தப்பட்டிருந்த அதிக ஒலி எழுப்பும் காற்று ஒலிப்பான்களை போக்குவரத்து போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா். கடலூா் மாநகரில் இயக்கப்படும் சில ஆட்டோக்களில் நிா... மேலும் பார்க்க

கோடைகால சிறப்பு விளையாட்டுப் பயற்சி நிறைவு

சிதம்பரம் ஆறுமுக நாவலா் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் கோடைகால சிறப்பு விளையாட்டுப் பயிற்சி நிறைவு விழா வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. ஆறுமுக நாவலா் சைவ பிரகாச வித்யாசாலா அறக்கட்டளை குழுச் ச... மேலும் பார்க்க

நிலம் கையகப்படுத்தும் பணி: என்எல்சி அதிகாரிகளை கிராம மக்கள் முற்றுகை

கடலூா் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அருகே கரிவெட்டி கிராமத்துக்கு நிலம் கையகப்படுத்தும் பணிக்காக சனிக்கிழமை வந்த என்எல்சி அதிகாரிகளை கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். சேத்தியாதோப்பு ... மேலும் பார்க்க

புகையிலை எதிா்ப்பு தின விழிப்புணா்வுப் பேரணி: கடலூா் ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

உலக புகையிலை எதிா்ப்பு தினத்தை முன்னிட்டு, கடலூா் டவுன்ஹால் அருகே பொதுமக்களுக்கு விழிப்புணா்வு எற்படுத்தும் வகையில் சனிக்கிழமை நடைபெற்ற பேரணியை மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் கொடியசைத்து... மேலும் பார்க்க