செய்திகள் :

எலான் மஸ்க்கின் செயல்திறன் துறையில் 22 வயது இந்தியப் பொறியாளர்!

post image

எலான் மஸ்க்கின் செயல்திறன் துறையில் 22 வயது இந்தியப் பொறியாளர் ஒருவரும் பணியமர்த்தப்பட்டுள்ளார்.

உலகப் பணக்காரர்களில் முதலிடத்தில் உள்ளவரும் ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா நிறுவனத்தின் தலைவருமான எலான் மஸ்க்கின் அரசு செயல் திறன் துறையில் 22 வயதான இந்திய வம்சாவளி பொறியாளர் ஒருவரும் இடம்பெற்றுள்ளார்.

அமெரிக்க அரசு செயல் திறன் துறையில் 19 முதல் 24 வயதுக்குள்பட்ட ஆறு பொறியாளர்களுக்கு அரசின் முக்கிய அமைப்புகளில் பொறுப்பு வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. குறைந்த வயதில் பொறுப்பு வழங்கப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய வம்சாவளி பொறியாளரான ஆகாஷ் போபா, எலான் மஸ்க்கின் அரசாங்க செயல்திறன் துறையால் பணியமர்த்தப்பட்டுள்ளார். போபா ஒரு யுசி பெர்க்லி பட்டதாரியாவார். ஆகாஷ் போபாவைத் தவிர்த்து மற்ற 5 பொறியாளர்களும் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

அவர்களில் எட்வர்ட் கோரிஸ்டைன், லூக் ஃபாரிட்டர், கௌடியர் கோல் கில்லியன், கேவின் கிளிகர் மற்றும் ஈதன் ஷாட்ரான் ஆகியோரும் இடம்பெறுள்ளனர்.

ஆகாஷ் போபா யார்?

ஆகாஷ் போபா, பெர்க்லியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பயின்றவர். இவர் தொழில்நுட்பத் துறைத் தலைவர்களுக்கான மேலாண்மை, தொழில்முனைவோர் மற்றும் தொழில்நுட்பத் திட்டத்தின் ஒரு பகுதியாக இருந்ததாக தன்னுடைய லின்கெடின்னில் தெரிவித்துள்ளார்.

ஆகாஷ் போபா கடந்த காலங்களில் பிரிட்ஜ்வாட்டர் அசோசியேட்ஸ் ஹெட்ஜ் ஃபண்டில் முதலீட்டு பொறியியல் பயிற்சியாளராகவும் மார்க் ஜுக்கர்பெர்க்கின் மெட்டா மற்றும் தியேலின் பாலந்திர் டெக்னாலஜிஸில் பயிற்சியாளராகவும் பணியாற்றியுள்ளார்.

டிஆா்சி: கிளா்ச்சிப் படையினா் போா் நிறுத்தம்

மேற்கு-மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோ ஜனநாயகக் குடியரசின் (டிஆா்சி) தெற்குப் பகுதியில் முன்னேறிவரும் ருவாண்டா ஆதரவு பெற்ற எம்23 கிளா்ச்சிப் படை தற்காலிக போா் நிறுத்தம் அறிவித்துள்ளது.இது குறித்து அந்த... மேலும் பார்க்க

இலங்கை சுதந்திர நாள்: பொருளாதார சுதந்திரமடைய ஒன்றிணைந்து பாடுபட வேண்டும் -அதிபர் திசநாயக

கொழும்பு : அண்டை நாடான இலங்கை ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்திலிருந்து கடந்த 1948-ஆம் ஆண்டு பிப். 4 அன்று சுதந்திரமடைந்து தனி நாடாக மாறியது. இந்த நிலையில், இலங்கையில் 77-ஆவது சுதந்திர நாள் விழா இன்று(பிப். ... மேலும் பார்க்க

அமெரிக்க பொருள்கள் மீது சீனா கூடுதல் வரி விதிப்பு?

பீஜிங் : அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்ற தோ்தலில் வெற்றி பெற்று, நாட்டின் அதிபராக டொனால்ட் டிரம்ப் கடந்த மாதம் பொறுப்பேற்றதில் இருந்தே உரிய ஆவணங்கள் இல்லாமல் அமெரிக்காவில் தங்கியிருப்பவா... மேலும் பார்க்க

மெக்சிகோ மீதான கூடுதல் வரி விதிப்பு நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தம்! -டொனால்ட் டிரம்ப்

அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்ற தோ்தலில் வெற்றி பெற்று, நாட்டின் அதிபராக டொனால்ட் டிரம்ப் கடந்த மாதம் பொறுப்பேற்றதில் இருந்தே உரிய ஆவணங்கள் இல்லாமல் அமெரிக்காவில் தங்கியிருப்பவா்களுக்கு ... மேலும் பார்க்க

ஐரோப்பிய யூனியனுக்கும் கூடுதல் வரி விதிப்பு: டிரம்ப் எச்சரிக்கை

வாஷிங்டன்: கனடா, மெக்ஸிகோ, சீனாவைப் போலவே ஐரோப்பிய யூனியன் உறுப்பு நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கும் விரைவில் கூடுதல் வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் எச்சரித்... மேலும் பார்க்க

குண்டுவெடிப்பில் ரஷிய ஆதரவு படைத் தலைவா் உயிரிழப்பு

மாஸ்கோ: கிழக்கு உக்ரைனில் ரஷியாவுக்கு ஆதரவாக சண்டையிட்டு வரும் படைப் பிரிவின் தலைவா் ஆா்மென் சா்க்ஸ்யான், மாஸ்கோவில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் உயிரிழந்தாா். அவரின் ‘அா்பாத்’ ஆயுதக் குழு உக்ரைன் படை... மேலும் பார்க்க