செய்திகள் :

எலான் மஸ்க்கின் செயல்திறன் துறையில் 22 வயது இந்தியப் பொறியாளர்!

post image

எலான் மஸ்க்கின் செயல்திறன் துறையில் 22 வயது இந்தியப் பொறியாளர் ஒருவரும் பணியமர்த்தப்பட்டுள்ளார்.

உலகப் பணக்காரர்களில் முதலிடத்தில் உள்ளவரும் ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா நிறுவனத்தின் தலைவருமான எலான் மஸ்க்கின் அரசு செயல் திறன் துறையில் 22 வயதான இந்திய வம்சாவளி பொறியாளர் ஒருவரும் இடம்பெற்றுள்ளார்.

அமெரிக்க அரசு செயல் திறன் துறையில் 19 முதல் 24 வயதுக்குள்பட்ட ஆறு பொறியாளர்களுக்கு அரசின் முக்கிய அமைப்புகளில் பொறுப்பு வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. குறைந்த வயதில் பொறுப்பு வழங்கப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய வம்சாவளி பொறியாளரான ஆகாஷ் போபா, எலான் மஸ்க்கின் அரசாங்க செயல்திறன் துறையால் பணியமர்த்தப்பட்டுள்ளார். போபா ஒரு யுசி பெர்க்லி பட்டதாரியாவார். ஆகாஷ் போபாவைத் தவிர்த்து மற்ற 5 பொறியாளர்களும் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

அவர்களில் எட்வர்ட் கோரிஸ்டைன், லூக் ஃபாரிட்டர், கௌடியர் கோல் கில்லியன், கேவின் கிளிகர் மற்றும் ஈதன் ஷாட்ரான் ஆகியோரும் இடம்பெறுள்ளனர்.

ஆகாஷ் போபா யார்?

ஆகாஷ் போபா, பெர்க்லியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பயின்றவர். இவர் தொழில்நுட்பத் துறைத் தலைவர்களுக்கான மேலாண்மை, தொழில்முனைவோர் மற்றும் தொழில்நுட்பத் திட்டத்தின் ஒரு பகுதியாக இருந்ததாக தன்னுடைய லின்கெடின்னில் தெரிவித்துள்ளார்.

ஆகாஷ் போபா கடந்த காலங்களில் பிரிட்ஜ்வாட்டர் அசோசியேட்ஸ் ஹெட்ஜ் ஃபண்டில் முதலீட்டு பொறியியல் பயிற்சியாளராகவும் மார்க் ஜுக்கர்பெர்க்கின் மெட்டா மற்றும் தியேலின் பாலந்திர் டெக்னாலஜிஸில் பயிற்சியாளராகவும் பணியாற்றியுள்ளார்.

காஸாவிலிருந்து விடுவிக்கப்பட்ட தாய்லாந்து நாட்டினர் தாயகம் திரும்பினர்

பாங்காக் : காஸாவிலிருந்து விடுவிக்கப்பட்ட தாய்லாந்து நாட்டினர் தாயகம் திரும்பியுள்ளனர்.பாலஸ்தீன மக்கள் பெரும்பான்மையாக வாழும் காஸாவில், இஸ்ரேல் ராணுவத்துக்கும் பாலஸ்தீன ஆயுதப் படையான ஹமாஸ் படைப் பிரிவ... மேலும் பார்க்க

நமீபியாவின் சுதந்திரப் போராட்டத் தலைவர் சாம் நியோமா காலமானார்!

‘நமீபியாவின் நிறுவனத் தந்தை’ எனப் போற்றப்படும் சாம் நியோமா சனிக்கிழமை(பிப். 8) காலமானார். அவருக்கு வயது 95.ஆப்பிரிக்க தேசமான நமீபியா தென்னாப்பிரிக்காவின் கட்டுப்பாட்டிலிருந்து விடுதலை அடைந்து சுதந்திர... மேலும் பார்க்க

சீனாவில் நிலச்சரிவு: 30 போ் மாயம்

சீனாவில் சனிக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 30 போ் மாயமாகினா்.இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:தென்கிழக்கு மாகாணமான சிசுவானில் உள்ள மலை கிராமம் ஒன்றில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 10 வீடுகள் பு... மேலும் பார்க்க

இஸ்ரேல்-ஹமாஸ் மீண்டும் கைதிகள் பரிமாற்றம்

காஸா போா் நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ், ஹமாஸ் அமைப்பும் இஸ்ரேலும் மீண்டும் பைறிமாற்றம் செய்துகொண்டன.முதலில், காஸாவின் டேய்ா் அல்-பாலா நகரில் பெரும் கூட்டத்தினா் முன்னிலையில் இலி ஷாபரி (52), ஒஹாத் பென் எ... மேலும் பார்க்க

‘கனடாவை மாகாணமாக்க டிரம்ப் முயல்வது உண்மை’

‘கனடாவை அமெரிக்காவின் 51-ஆவது மாகாணம் என்று அதிபா் டிரம்ப் கூறுவது வெறும் வேடிக்கைகாக அல்ல, உண்மையிலேயே அவருக்கு அந்த திட்டம் இருக்கிறது. கனடாவின் இயற்கை வளங்களை டிரம்ப் குறிவைக்கிறாா்’ என்று கனடா பிர... மேலும் பார்க்க

சிங்கப்பூா்: எஸ். ஈஸ்வரனுக்கு வீட்டுச் சிறை

சிங்கப்பூரில் தொழிலதிபா்களிடமிருந்து பரிசுப் பொருள்களை பெற்ற வழக்கில் ஓராண்டு சிறை தக்கப்பட்டுள்ள இந்திய வம்சாவளியைச் சோ்ந்த முன்னாள் அமைச்சா் எஸ். ஈஸ்வரன் வீட்டுச் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளாா்.இது கு... மேலும் பார்க்க