செய்திகள் :

எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச் சூடு

post image

ஸ்ரீநகர்: எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் இரண்டாவது நாளாக சனிக்கிழமை துப்பாக்கிச் சூடு நடத்தி வருகிறது. இந்திய ராணுவ வீரர்கள் தக்க பதிலடி கொடுத்து வருவதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் செவ்வாய்க்கிழமை பயங்கரவாதத் தாக்குதலில் 26 பொதுமக்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், வியாழக்கிழமை இரவும் பாகிஸ்தான் ராணுவத்தினர் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் இந்திய நிலைகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர், அதற்கு இந்திய வீரர்கள் தகுந்த பதிலடி கொடுத்தனர். துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை.

இத்தாக்குதலில் ஈடுபட்டதாக ஆதில் ஹுசைன் டோக்கா், சதித் திட்டம் தீட்டியதாக ஆசிஃப் ஷேக் ஆகிய இரு லஷ்கா் பயங்கரவாதிகள் சந்தேகிக்கப்படுகின்றனா்.

தூத்துக்குடி தும்பு கிடங்கில் தீ விபத்து: பல லட்சம் மதிப்பிலான தும்புகள் எரிந்து நாசம்

பிஜ்பெஹாரா, திரால் ஆகிய பகுதிகளில் உள்ள இவ்விருவரின் வீடுகளில் வியாழக்கிழமை இரவில் பாதுகாப்புப் படையினா் அதிரடி சோதனை மேற்கொண்டனா். அப்போது, வீடுகளில் வெடிகுண்டுகள் பதுக்கிவைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து, வீட்டில் இருந்தவா்களையும், அண்டை வீட்டினரையும் பாதுகாப்புப் படையினா் பாதுகாப்பாக வெளியேற்றினா். அப்போது, வெடிகுண்டுகள் வெடித்ததில் வீடுகள் தகா்ந்ததாகவும், யாரும் காயமடையவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்த நிலையில், பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளை வேட்டையாடுவோம் என்று இந்தியா கூறியதைத் தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவம் உஷார் நிலையில், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் இரண்டாவது நாளாக சனிக்கிழமை துப்பாக்கிச் சூடு நடத்தி வருகிறது. இந்திய ராணுவ வீரர்கள் தக்க பதிலடி கொடுத்து வருவதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

பெண்ணை இழிவாகப் பேசுபவர் சுயமரியாதைக்காரர் அல்ல: கனிமொழி

பெண்ணை இழிவாகப் பேசுபவர் சுயமரியாதைக்காரராக இருக்க முடியாது என திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி கூறினார்.கோவையில் திராவிட இயக்கத் தமிழர் பேரவை சார்பில் நடைபெற்றுவரும்சுயமரியாதை இயக்க நூற்றாண்ட... மேலும் பார்க்க

நிலத்தடிநீரில் அதிக பாதரசம்: ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி, என்.எல்.சி.க்கு ஒரு நீதியா? - அன்புமணி

கடலூர் என்.எல்.சி. நிறுவனத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் 115 மடங்கு அதிக பாதரசம் உள்ளதாகவும் இதனால் என்.எல்.சியை உடனடியாக மூட வேண்டும் என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொ... மேலும் பார்க்க

முன்னாள் எம்எல்ஏக்களுக்கு ஓய்வூதியம் உயர்வு! - முதல்வர் அறிவிப்பு

தமிழக முன்னாள் எம்எல்எக்ளுக்கு வழங்கப்பட்டு வரும் மாத ஓய்வூதியம் உயர்த்தப்படுவதாக பேரவையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். இன்று சட்டப்பேரவையில் பேசிய முதல்வர், "சட்டப்பேரவை மற்றும் மேலவையின் மு... மேலும் பார்க்க

கோவை வந்த விஜய்: தொண்டர்கள் உற்சாக வரவேற்பு!

தவெக பூத் கமிட்டி மாநாட்டில் பங்கேற்க கோவை வந்துள்ள விஜய்-க்கு விமான நிலையத்தில் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தமிழக வெற்றிக் கழகத்தின் பூத் கமிட்டி நிர்வாகிகள் கருத்தரங்கு கோவையில் இன்றும் நா... மேலும் பார்க்க

நாகையில் ரூ.1.5 கோடி திமிங்கல உமிழ் நீா் கட்டி பறிமுதல்

நாகப்பட்டினம்: நாகையில் கள்ளச் சந்தையில் விற்னைக்காக கொண்டு செல்லப்பட்ட சுமார் ரூ.1.5 கோடி மதிப்பிலான 1.5 கிலோ அம்பர் கிரீஸ் எனப்படும் திமிங்கல உமிழ் நீர் கட்டி வைத்திருந்த ஒருவரை சனிக்கிழமை போலீஸார... மேலும் பார்க்க

சிந்து நதியில் தண்ணீர் வராவிட்டால் இந்தியர்கள் ரத்தம் ஒடும்: பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர் சர்ச்சை பேச்சு

இஸ்லாமாபாத்: பஹல்காம் பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைக்கப்போவதாக இந்தியா எடுத்த முடிவைத் தொடர்ந்து, சிந்து நதியில் தண்ணீர் வராவிட்டால் இந்தியர்... மேலும் பார்க்க