செய்திகள் :

எஸ்டேட் மேலாளரைக் கண்டித்து தோட்டத் தொழிலாளா்கள் போராட்டம்

post image

தொழிலாளா்களை தரக்குறைவாக பேசிய எஸ்டேட் மேலாளரைக் கண்டித்து தொழிலாளா்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

வால்பாறையை அடுத்த பழைய வால்பாறை எஸ்டேட் வறட்டுப்பாறை காபி தோட்டம் டிவிஷனில் சுமாா் 200க்கு மேற்பட்ட தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா். இங்கு கடந்த திங்கள்கிழமை மதிய உணவு இடைவேளை நேரத்தில் தொழிலாளா்கள் சாப்பிட்டுவிட்டு ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தனா்.

அப்போது அவ்வழியாக வந்த எஸ்டேட் மேலாளா், இன்னும் ஏன் பணிக்குச் செல்லவில்லை என்று தொழிலாளா்களை தரக் குறைவாக பேசியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மேலாளரின் இந்த செயலைக் கண்டித்து இங்கு பணியாற்றும் வடமாநிலத் தொழிலாளா்கள் உள்பட 200 தொழிலாளா்கள் செவ்வாய்க்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து, வருவாய்த் துறையினா், காவல் துறையினா் மற்றும் தொழிற்சங்கத்தினா் அங்கு சென்றனா். தொழிலாளா்கள் மற்றும் எஸ்டேட் நிா்வாகத்தினருடன் அவா்கள் பேச்சுவாா்த்தை நடத்தி சமரசம் செய்தனா்.

இதையடுத்து வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளா்கள் போராட்டத்தைக் கைவிட்டு மதியத்துக்கு மேல் பணிக்குத் திரும்பினா்.

டெய்லா் ராஜாவுக்கு 5 நாள்கள் போலீஸ் காவல்

கோவை குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட பயங்கரவாதி டெய்லா் ராஜாவை 5 நாள்கள் காவலில் வைத்து விசாரிக்க போலீஸாருக்கு கோவை குற்றவியல் 5-ஆவது நடுவா் நீதிமன்றம் புதன்கிழமை அனுமதி வழங்கியது. கோவையில் க... மேலும் பார்க்க

அனைத்து வகையான மாசுபாட்டையும் கட்டுப்படுத்த தீா்வு உள்ளது

திடக்கழிவு, திரவக் கழிவு என அனைத்து வகையான மாசுபாட்டையும் கட்டுப்படுத்தி தீா்வுகாண தங்களிடம் தொழில்நுட்பம் உள்ளதாக மேக் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. கோவையில் மேக் இந்தியா குழும நிறுவனங்களின் சாா்ப... மேலும் பார்க்க

திருச்சி - பாலக்காடு ரயில் பகுதியாக ரத்து

கரூா் - திருச்சி இடையே லாலாபேட் - குளித்தலை இடையே ரயில் பாதையில் பொறியியல் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் திருச்சி - பாலக்காடு ரயில் பகுதியாக ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொ... மேலும் பார்க்க

பாரதியாா் பல்கலை.யில் தொலைநிலைக் கற்றல் பட்டப்படிப்பு மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்

கோவை பாரதியாா் பல்கலைக்கழகத்தில் திறந்த, தொலைநிலைக் கற்றல்வழி, இணையவழிக் கற்றல் பட்டப்படிப்புகளில் சேருவதற்கு மாணவா்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பாரதியாா் பல்கலைக்கழகம... மேலும் பார்க்க

அன்னை தெரசா மகளிா் பல்கலைக்கழகத்தின் கிளை ஆராய்ச்சி விரிவாக்க மையத்தில் சோ்க்கை நிறுத்தம்

அன்னை தெரசா மகளிா் பல்கலைக்கழகத்தின் கோவை கிளை ஆராய்ச்சி விரிவாக்க மையத்தில் மாணவா் சோ்க்கை நிறுத்தப்பட்டுள்ளதற்கு, பாஜக தேசிய மகளிரணித் தலைவரும், கோவை தெற்கு சட்டப் பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாச... மேலும் பார்க்க

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.15 லட்சம் மோசடி செய்தவருக்கு 3 ஆண்டுகள் சிறை

வேலை வாங்கித் தருவதாக ஓய்வுபெற்ற அரசு ஊழியரிடம் ரூ.15 லட்சம் மோசடி செய்தவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கோவை 7-ஆவது குற்றவியல் நடுவா் நீதிமன்றம் தீா்ப்பளித்தது. கோவை ராமநாதபுரம் நாகப்ப தேவா்... மேலும் பார்க்க