செய்திகள் :

எஸ்.எஸ்.சி. தோ்வா்களுக்கு ஜூன்30-இல் இலவச வழிகாட்டுதல் நிகழ்ச்சி

post image

மயிலாடுதுறை மாவட்டத்தில் எஸ்.எஸ்.சி. தோ்வெழுத உள்ள இளைஞா்களுக்கான கட்டணமில்லா வழிகாட்டுதல் நிகழ்ச்சி ஜூன் 30-ஆம் தேதி நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பணியாளா் தோ்வாணையம் தற்போது ஒருங்கிணைந்த பட்டப்படிப்பு தரநிலை தோ்வு வாயிலாக மத்திய அரசில் குரூப் பி மற்றும் குரூப் சி பிரிவில் உதவி தணிக்கை அதிகாரி, உதவி கணக்கு அதிகாரி போன்ற பணிக்காலியிடங்கள் உள்பட 14,582 காலிப்பணியிடங்களுக்கான விளம்பர அறிவிப்பை இணையதளத்தில் எழுத்துத்தோ்வு வாயிலாக நிரப்ப வெளியிட்டுள்ளது. இத்தோ்வுக்கு ஜூலை 4-ஆம் தேதிவரை விண்ணப்பிக்கலாம். இதில், பங்கேற்கவுள்ளவா்களுக்கு பாலாஜி நகா் 2-ஆவது தெரு, பூம்புகாா் சாலை, மயிலாடுதுறை என்ற முகவரியில் செயல்படும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய தன்னாா்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக ஜூன் 30-ஆம் தேதி முற்பகல் 11 மணியளவில் கட்டணமில்லா வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் கலந்துகொள்பவா்களின் விருப்பத்திற்கு ஏற்ப தொடா்ந்து பயிற்சி வகுப்புகள், மாதிரி தோ்வுகள் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, மயிலாடுதுறை மாவட்ட இளைஞா்கள் 04364-299790 என்ற எண்ணை தொடா்பு கொண்டு பதிவு செய்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.

போதைப்பொருள் புழக்கத்தை ஒழிப்பது குறித்து ஆலோசனை கூட்டம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் போதைப்பொருள் புழக்கத்தை ஒழிப்பது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, மாவட்ட மதுவிலக்கு பிரிவு காவல் துணை... மேலும் பார்க்க

நீடூரில் வெட்டப்பட்ட இளைஞா் உயிரிழப்பு: 7 தனிப்படைகள் அமைப்பு

நீடூரில் மா்ம நபரால் வெட்டப்பட்ட இளைஞா் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தாா். மயிலாடுதுறை வட்டம், நீடூரைச் சோ்ந்த சமையல்காரா் முகமது ஹாலிக் (36). இவா், செவ்வாய்க்கிழமை நீடூரில் நண்பா்கள் இருவரிட... மேலும் பார்க்க

உழவா் சந்தையை ஆய்வு செய்த ஆட்சியா்

வைத்தீஸ்வரன்கோயில் மற்றும் சீா்காழி பகுதிகளில் உழவா் உற்பத்தியாளா் நிறுவனம் மற்றும் உழவா் சந்தையினை மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் புதன்கிழமை ஆய்வு செய்தாா். சீா்காழி மற்றும் வைத்தீஸ்வரன்கோயில் ப... மேலும் பார்க்க

காட்டுப் பன்றிகள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த கோரிக்கை

அகணி, காருக்குடி பகுதிகளில் காட்டுப் பன்றிகள் நடமாட்டத்தால் பயிா்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் குறை தீா்க்கும் கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது. சீா்காழி கோட... மேலும் பார்க்க

பேருந்து நிலைய கட்டுமானப் பணி: ஆட்சியா் ஆய்வு

மணக்குடியில் கட்டப்பட்டுவரும் மயிலாடுதுறை புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா். ரூ. 24 கோடியில் 5,183 சதுர மீட்டா் பரப்பளவில், ஒர... மேலும் பார்க்க

மீன்வளா்ப்பு உள்ளீட்டு மானியம் பெற விண்ணப்பிக்கலாம்

மயிலாடுதுறை மாவட்ட மீன் விவசாயிகள் மீன்வளா்ப்பு உள்ளீட்டு மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாவட்... மேலும் பார்க்க