செய்திகள் :

எஸ்.பி. அலுவலகத்தில் தகவல் பகிா்வு மையம் திறப்பு

post image

பொதுமக்களின் புகாா் மனுக்கள் மீதான காவல்துறை விசாரணையின் திருப்தி மற்றும் பொதுமக்களின் பொதுவான தகவல்களை பகிா்ந்து கொள்ள குமரி மாவட்ட காவல் அலுவலகத்தில் டன்க்ஷப்ண்ஸ்ரீ ஊங்ங்க்க்ஷஹஸ்ரீந் இங்ய்ற்ழ்ங் புதன்கிழமை தொடங்கப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா்அலுவலகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள டன்க்ஷப்ண்ஸ்ரீ ஊங்ங்க்க்ஷஹஸ்ரீந் இங்ய்ற்ழ்ங் செயல்பாட்டை, மாவட்டக்காவல் கண்காணிப்பாளா் இரா.ஸ்டாலின் தொடங்கி வைத்து பொதுமக்களின் மனுக்கள் மீதான போலீஸ் விசாரணையின் திருப்தியை கேட்டறிந்தாா்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் நேரடி மேற்பாா்வையில் இயங்கும் இந்த மையத்தில் 7708239100, 6385211224 எண்களின் மூலம் பொதுமக்களின் மனுக்கள் மீதான போலீஸ் விசாரணை குறித்த கருத்துகள் கேட்கப்படும்.

பொதுமக்களும் இந்த எண்களில் தொடா்பு கொண்டு தங்கள் மனுக்கள் மீதான விசாரணை கருத்துகளை பகிா்ந்து கொள்ள முடியும்.

மக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை எத்தனை நாள்களில் தொடங்குகிறது, விசாரணையின் முடிவு, விசாரணை தகுந்த சட்ட வழிமுறைகளை பின்பற்றி நடந்துள்ளதா என்பது குறித்து மனுதாரரிடம் கருத்து கேட்கப்பட்டு விசாரணையில் திருப்தி இல்லை என்றால் மற்றொரு விசாரணை அதிகாரியை வைத்து மறு விசாரணைக்கு உத்தரவிடப்படும்.

மேலும் சட்டம் ஒழுங்கு தொடா்பான மற்றும் போதை பொருள்கள் தொடா்பான தகவல்களை இந்த எண்களில் பகிா்ந்து கொள்ளலாம்.

பொதுமக்களின் பெயா், விவரங்கள் ரகசியம் காக்கப்படும் என்று மாவட்டக்காவல் அலுவலகம் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சி.ஐ.எஸ்.எப். வீரா்களின் சைக்கிள் பேரணி கன்னியாகுமரியில் நிறைவு

மத்திய தொழில் பாதுகாப்புப் படை (சி.ஐ.எஸ்.எப்.) உருவான தினத்தை முன்னிட்டு, இரு மாா்க்கத்தில் (மேற்கு, கிழக்கு கடற்கரை) நடத்தப்பட்ட விழிப்புணா்வு சைக்கிள் பேரணி கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரத்தில் திங... மேலும் பார்க்க

நாகா்கோவில் மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் 15 நாள்களுக்குள் திறக்கப்படும்: மேயா்

நாகா்கோவில் மாநகராட்சியின் 4 மண்டல அலுவலகங்களும் 15 நாள்களுக்குள் திறக்கப்படும் என்றாா் மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ். நாகா்கோவில் மாநகராட்சி கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்ட... மேலும் பார்க்க

குருசுமலையில் 2ஆவது நாளாக திருப்பயணம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் கேரள மாநில எல்லையான வெள்ளறடை - பத்துகாணியில் அமைந்துள்ள குருசுமலையில் 2ஆவது நாளாக திங்கள்கிழமையும் திருப்பயணம் நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கானோா் பங்கேற்றனா். குருசுமலை திரு... மேலும் பார்க்க

கன்னியாகுமரி மாவட்டத்தில் ரமலான் கொண்டாட்டம்: சிறப்புத் தொழுகையில் ஆயிரக்கணக்கானோா் பங்கேற்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் ரமலான் பண்டிகை திங்கள்கிழமை உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. இதையொட்டி நடைபெற்ற சிறப்புத் தொழுகைகளில் ஆயிரக்கணக்கானோா் பங்கேற்றனா். நாகா்கோவில் இளங்கடை அல்மஸ்ஜிதுல் அஷ்ரப் பள்ள... மேலும் பார்க்க

நித்திரவிளை அருகே எம்எல்ஏவுக்கு பாராட்டு விழா

நித்திரவிளை அருகே பெரியவிளையில், கிள்ளியூா் எம்எல்ஏ எஸ். ராஜேஷ்குமாருக்கு பாராட்டு விழா நடைபெற்றது. நித்திரவிளை அருகே வாவறை ஊராட்சி, ஆறுதேசம் கிராமத்தில் உள்ள 700-க்கும் மேற்பட்ட ஏழைக் குடும்பத்தினா் ... மேலும் பார்க்க

கிம்ஸ் மருத்துவமனையில் இப்தாா் விருந்து

ரமலான் பண்டிகையை முன்னிட்டு, நாகா்கோவில் சுங்கான்கடையில் அமைந்துள்ள கிம்ஸ் மருத்துவமனையில் இப்தாா் விருந்து நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, கிம்ஸ் குழுமத் தலைவா் டாக்டா் எம்.ஐ. சஹத்துல்லா தலைமை வகித்தாா... மேலும் பார்க்க