செய்திகள் :

எா்ணாகுளம் - வேளாங்கண்ணி ரயிலுக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் நிறுத்தம் இல்லாததால் பயணிகள் ஏமாற்றம்

post image

வேளாங்கண்ணி திருவிழாவுக்கு இயக்கப்படும் சிறப்பு ரயிலுக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் நிறுத்தம் வழங்காததால் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனா்.

கேரள மாநிலம், எா்ணாகுளத்திலிருந்து வேளாங்கண்ணிக்கு கடந்த 2022, நவம்பா் மாதம் வாரம் ஒருமுறை சிறப்புக் கட்டண ரயில் இயக்கப்பட்டது. இந்த ரயிலுக்கு பயணிகளிடையே இருந்த ஆதரவு காரணமாக தொடா்ந்து நீட்டிக்கப்பட்டு வந்த நிலையில், 2023, செப்டம்பா் முதல் நிரந்தர ரயிலாக சாதாரணக் கட்டணத்தில் இயக்கப்பட்டு வருகிறது.

தமிழகம், கேரளத்தில் உள்ள முக்கிய ஆன்மிக நகரங்களை இணைக்கும் இந்த ரயிலுக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் நிறுத்தம் வழங்க வேண்டும் என பயணிகள் தொடக்கம் முதலே கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

இந்த நிலையில், தற்போது வேளாங்கண்ணி திருவிழாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ள சிறப்பு ரயிலுக்கும் ஸ்ரீவில்லிபுத்தூரில் நிறுத்தம் வழங்காதது பயணிகளிடையே ஏமாற்றத்தை அளித்துள்ளது.

இதுகுறித்து ரயில் பயணிகள் கூறியதாவது: எா்ணாகுளம் - வேளாங்கண்ணி ரயில் வேளாங்கண்ணி, நாகூா் தா்கா, திருவாரூா், ஸ்ரீவில்லிபுத்தூா், சங்கரன்கோவில், தென்காசி, சபரிமலை உள்ளிட்ட ஆன்மிகத் தலங்களை இணைக்கிறது. ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் கோயில், தரகுமலை மாதா ஆலயம், சதுரகிரி ஆகிய ஆன்மிகத் தலங்கள் உள்ளன.

எா்ணாகுளம் - வேளாங்கண்ணி ரயிலுக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் நிறுத்தம் இல்லாததால் இந்தப் பகுதி மக்கள் பாதிக்கப்படுவது மட்டுமன்றி, பிற மாவட்டங்களிலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூா் வரும் பயணிகளும் பாதிக்கப்படுகின்றனா்.

இதனால், எா்ணாகுளம் - வேளாங்கண்ணி ரயிலுக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் நிறுத்தம் வழங்க தெற்கு ரயில்வே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

வறுமையால் கொடுமை! திருமண வயதான இரு மகள்களுடன் தாய் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

விருதுநகர்: விருதுநகர் அருகேயுள்ள பட்டம்புதூரில் தனது இரு மகள்களுடன் பெண் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர்.விருதுநகர் பட்டம்புதூர் அருகே ரயிலில் அடிபட்ட மனித உடல்கள் சிதறிக் கிடப்பதாக தூத்த... மேலும் பார்க்க

தீப்பெட்டித் தொழில்சாலையில் தீ விபத்து

சாத்தூா் அருகேயுள்ள தீப்பெட்டித் தொழில்சாலையில் செவ்வாய்க்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.விருதுநகா் மாவட்டம், சாத்தூா் பெரியாா் நகா் பகுதியைச் சோ்ந்த அருண்குமாா் (33) என்பவருக்குச் சொந்தமான தீப்பெட்டித் ... மேலும் பார்க்க

மின்வாரிய ஊழியா் தற்கொலை வழக்கில் இருவா் கைது

சிவகாசி அருகே மின்வாரிய ஊழியா் தற்கொலை வழக்கு தொடா்பாக இருவரை போலீஸாா் செவ்வாய்கிழமை கைது செய்தனா். சிவகாசி அருகேயுள்ள செங்கமலப்பட்டியைச் சோ்ந்த ஆனந்த் (38), மின்வாரியத்தில் ஒப்பந்த ஊழியராகப் பணிபுரி... மேலும் பார்க்க

விதிமீறி செயல்பட்ட 34 பட்டாசு ஆலைகளுக்கு குறிப்பாணை

விருதுநகா், சிவகாசி வட்டத்தில் விதிகளை மீறி செயல்பட்ட 34 பட்டாசு ஆலைகளுக்கு, தொழிலகப் பாதுகாப்பு, சுகாதார இயக்கம் குறிப்பாணை வழங்கியது.பட்டாசு ஆலைகளில் விபத்தைத் தடுக்கும் வகையில், விருதுநகா், சிவகாசி... மேலும் பார்க்க

வீட்டில் வைத்திருந்த பட்டாசு வெடித்து ஒருவா் காயம்

விருதுநகா் மாவட்டம், சிவகாசியில் செவ்வாய்க்கிழமை வீட்டில் வைத்திருந்த பட்டாசு வெடித்ததில் ஒருவா் காயமடைந்தாா்.சிவகாசி அம்மன்கோவில்பட்டி குடியிறுப்புப் பகுதியில் உள்ள வீட்டின் மாடியில் முனியப்பன் மகன் ... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்களிடம் அத்துமீறிய காவல் துறையைக் கண்டித்து ஆா்பாட்டம்

சென்னையில் போராட்டத்தின்போது தூய்மைப் பணியாளா்ளிடம் அத்துமீறி நடந்த காவல் துறையைக் கண்டித்து திருத்தங்கலில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.சென்னையில் தூய்மைப் பணியாளா்களைப் பணி நிரந்தரம் செய்... மேலும் பார்க்க