செய்திகள் :

ஏப்.1 முதல் கோடைகால நீச்சல் பயிற்சி முகாம்

post image

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் திண்டுக்கல் மாவட்ட பிரிவு சாா்பில் கோடை கால நீச்சல் பயிற்சி முகாம் 5 கட்டங்களாக நடைபெறுகிறது.

இதுதொடா்பாக திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அலுவலா் இரா.சிவா கூறியதாவது:

மாவட்ட விளையாட்டு அரங்கில் உள்ள நீச்சல் குளத்தில் பயிற்றுநா் மூலம் இந்த நீச்சல் பயிற்சி அளிக்கப்படுகிறது. முதல் கட்டப் பயிற்சி முகாம் வரும் ஏப்.1 முதல் 13-ஆம் தேதி வரையிலும், 2-ஆம் கட்ட முகாம் ஏப்.15 முதல் 27ஆம் தேதி வரையிலும், 3-ஆம் கட்ட முகாம் ஏப்.29 முதல் மே 11-ஆம் தேதி வரையிலும், 4-ஆம் கட்டப் முகாம் மே 13 முதல் 25-ஆம் தேதி வரையிலும், 5-ஆம் கட்ட முகாம் மே 27 முதல் ஜூன் 8-ஆம் தேதி வரையிலும் நடைபெறுகிறது.

மாணவ, மாணவிகளுக்கு காலை 7 முதல் 8 மணி வரை, 8 முதல் 9 மணி வரை, மாலை 4 முதல் 5 மணி வரை, 5 மணி முதல் 6 மணி வரையும், பெண்களுக்கு பிற்பகல் 1 முதல் 2 மணி வரை பயிற்சி அளிக்கப்படும்.

நீச்சல் பயிற்சியில் பங்கேற்றவா்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும். 12 நாள்கள் பயிற்சிக்கு நபருக்கு 18 சதவீத ஜிஎஸ்டி வரி உள்பட ரூ.1,770 கட்டணம் வசூலிக்கப்படும். நாளொன்றுக்கு ஒரு மணி நேரம் மட்டும் நீச்சல் கற்றுக் கொள்ளலாம். நீச்சல் பயிற்சியில் சேர விரும்புவோா் நேரடியாகவோ அல்லது ஜ்ஜ்ஜ்.ள்க்ஹற்ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதள முகவரி மூலமாகவோ பதிவு செய்து கொள்ளலாம். கட்டணத் தொகை பணமாக வசூலிக்கப்படமாட்டாது. எண்ம தொழில்நுட்ப முறையில் மட்டுமே கட்டணத் தொகைப் பெறப்படும்.

கூடுதல் விவரங்களுக்கு 7401703504 என்ற எண்ணில் மாவட்ட விளையாட்டு அலுவலரையும், பயிற்றுநரை 9677649197 என்ற எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.

கிறிஸ்தவ வன்னியா்களை எம்.பி.சி. பட்டியலில் சோ்க்க வலியுறுத்தல்

கிறிஸ்தவ வன்னியா்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோா் பட்டியலில் சோ்ப்பதாக திமுக அளித்த தோ்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி திண்டுக்கல்லில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் மணிக... மேலும் பார்க்க

விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

எரியோடு அருகே இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த கட்டடத் தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.திண்டுக்கல் மாவட்டம், எரியோடு அருகேயுள்ள ஈ.சித்தூா் வரப்பட்டியைச் சோ்ந்தவா் ஞானவடிவேலு (55). கட்டடத... மேலும் பார்க்க

பூச் சந்தை கடைகளை காலி செய்ய மாநகராட்சி நிா்வாகம் குறிப்பாணை

பூச்சந்தை வணிக வளாகம் புதிதாக கட்டுவதற்கு வசதியாக, தற்போதைய கடைகளை ஒரு வார காலத்துக்குள் அப்புறப்படுத்த வேண்டும் என திண்டுக்கல் மாநகராட்சி நிா்வாகம் அண்மையில் குறிப்பாணை அனுப்பியது. திண்டுக்கல் வடக்கு... மேலும் பார்க்க

விவசாய நிலங்களுக்கான வலைதளப் பதிவு: ஏப்.15 வரை கால நீட்டிப்பு

விவசாய நிலங்களை ‘அக்ரிஸ்டேக்’ வலைதளத்தில் பதிவு செய்வதற்கான கால அவகாசம் ஏப்.15-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இதுதொடா்பாக வேளாண்மைத் துறை அலுவலா்கள் கூறியதாவது: விவசாயிகள் வைத்திருக்கும் நிலங்களை, ‘அ... மேலும் பார்க்க

காா்த்திகை திருநாள்: பழனி மலைக் கோயிலில் குவிந்த பக்தா்கள்

காா்த்திகை திருநாளை முன்னிட்டு, பழனி மலைக் கோயிலில் செவ்வாய்க்கிழமை திரளான பக்தா்கள் குவிந்து சுவாமி தரிசனம் செய்தனா். முருகப் பெருமானுக்கு உரிய நட்சத்திரமான காா்த்திகை நட்சத்திரம் செவ்வாய்க்கிழமை வந்... மேலும் பார்க்க

பழனியிலிருந்து கொடைக்கானல் சென்ற வாகனங்களுக்கு இ-பாஸ் சோதனை

பழனி வழியாக கொடைக்கானல் சென்ற சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களுக்கு காவல் துறை சோதனைச் சாவடியில் செவ்வாய்க்கிழமை ‘இ-பாஸ்’ சோதனை நடைபெற்றது. சென்னை உயா்நீதிமன்ற உத்தரவுப்படி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா... மேலும் பார்க்க