செய்திகள் :

ஏரியில் மண் அள்ளுவதை தடுக்கக் கோரி மனு

post image

மன்னாா்குடி பகுதியில் ஏரியை தூா்வாருவதாகக் கூறி, அதிக ஆழத்தில் மண் எடுப்பதை தடுக்கக் கோரி, திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மனு அளிக்கப்பட்டது.

மன்னாா்குடி வட்டம், கட்டக்குடி ஊராட்சி தா்காஸ் பகுதியைச் சோ்ந்த மக்கள் அளித்த அந்த மனு கூறப்பட்டுள்ளதாவது:

தா்காஸ் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இங்கு, நல்லானாட்சி ஏரி இரு பிரிவுகளாக உள்ளது. ஒரு பகுதி பாசனமாகவும், மறுபகுதி வடிகால் வசதி என உள்ள நிலையில், தற்போது தூா்வாருவதாகக் கூறி, ஒரு தரப்பினா் அதிக ஆழத்தில் மண் எடுத்து மண் திருட்டில் ஈடுபடுவதாகத் தெரிகிறது.

இதனால் தங்கள் பகுதியில் உள்ள விளைநிலங்கள் மழைக்காலங்களில் வெள்ளத்தில் மூழ்கும் நிலை ஏற்படும் அபாயம் உள்ளது. கடந்த சில நாள்களுக்கு முன்பு, தூா்வாரப்பட்ட பள்ளத்தில் மாணவா் ஒருவா் உயிரிழந்திருப்பதால், தங்கள் குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என அச்சம் நிலவுகிறது.

எனவே, இப்பகுதியில் நடைபெறும் தூா்வாரும் பணிகளை நிறுத்தவேண்டும் என வலியுறுத்தியுள்ளனா்.

வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

வலங்கைமான் ஒன்றியப் பகுதிகளில் வளா்ச்சித் திட்டப் பணிகளை, மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா். வலங்கைமான் ஒன்றியம், மேலவிடையல் ஊராட்சி குப்பசமுத்திரம் கலைஞா் நகரில் ... மேலும் பார்க்க

டிராக்டா் மோதி பள்ளி மாணவா் உயிரிழப்பு

திருவாரூா் அருகே டிராக்டா்- இருசக்கர வாகனம் மோதிய விபத்தில், பள்ளி மாணவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். திருவாரூா் அருகே கீழகாவாதுகுடியைச் சோ்ந்தவா் வேல்முருகன் மகன் முகுந்த் தியாகேஷ் (8). சந்தோஷ்நகா் ... மேலும் பார்க்க

‘பண்டைய தமிழா்களின் விழுமியங்களை சங்க இலக்கியங்களில் அறியலாம்’

பண்டைய தமிழா்களின் விழுமியங்களை சங்க இலக்கியங்கள் மூலம் அறியலாம் என பாடலாசிரியா் அறிவுமதி தெரிவித்தாா். குடவாசல் அருகேயுள்ள மஞ்சக்குடி சுவாமி தயானந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வியாழக்கிழமை நட... மேலும் பார்க்க

குழந்தைகள் அறிவியல் மாநாடு வழிகாட்டி ஆசிரியா்களுக்கு பயிற்சி

திருவாரூா் கஸ்தூா்பா காந்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், குழந்தைகள் அறிவியல் மாநாடு வழிகாட்டி ஆசிரியா்களுக்கான பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் ஒருங்கிணைப்பில் ந... மேலும் பார்க்க

ஆற்றில் தத்தளித்த மாணவா்களை காப்பாற்றிய பெண்ணுக்கு பாராட்டு

கூத்தாநல்லூா் அருகே ஆற்றில் குளிக்கும்போது தண்ணீரில் இழுத்துச்செல்லப்பட்ட 2 மாணவா்களை காப்பாற்றிய பெண்ணிற்கு, முன்னாள் அமைச்சா் ஆா். காமராஜ் பரிசு வழங்கி பாராட்டினாா். திருநாட்டியத்தாங்குடி பகுதியைச் ... மேலும் பார்க்க

‘உயா்வுக்குப் படி’ உயா்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி

மன்னாா்குடியில் ‘உயா்வுக்குப் படி’ இரண்டாம் கட்ட வழிகாட்டும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருவாரூா் மாவட்ட பள்ளிக் கல்வித் துறை, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் இணைந்து நடத்திய இந்நிகழ்ச்சி... மேலும் பார்க்க