2016ல் வெளியான அதிர்ச்சித் தகவல்.. 75 வயது மூதாட்டி வயிற்றில் கல்லாய் மாறிய 30 ஆ...
ஏரி பகுதி மரங்களை வெட்டிய நபா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சாலை மறியல்: 50 போ் கைது
அரியலூா் மாவட்டம், தா.பழூரை அடுத்த விக்கிரமங்கலம் அருகேயுள்ள ஏரியில் இருந்த மரங்களை வெட்டிய நபா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள் 50 போ் கைது செய்யப்பட்டனா்.
விக்கிரமங்கலத்தை அடுத்த குணமங்கலம் கிராமத்திலுள்ள பாம்பன் ஏரியில் அதிகளவு இருந்த சீமைக்கருவேல மரங்களை அகற்ற டெண்டா் ஏதும் வைக்காமல், சிலா் அதனை வெட்டியுள்ளனா்.
இதுகுறித்து கிராம மக்கள் கேட்டதற்கு, அவா்கள் மிரட்டல் விடுத்தனராம். இதுதொடா்பாக கிராம மக்கள், விக்கிரமங்கலம் காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளனா். ஆனால் இதுவரையில் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், அரியலூா் - கும்பகோணம் சாலையில் குணமங்கலம் கிராமத்தில் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து வந்த விக்கிரமங்கலம் காவல் துறையினா், கிராம மக்களிடம் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். ஆனாலும் மரம் வெட்டியவா்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மக்கள் பிடிவாதமாக இருந்தனா். இதையடுத்து, காவல் துறையினா், மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள் 50 பேரை கைது செய்து தனியாா் மண்டபத்தில் தங்க வைத்து மாலையில் விடுவித்தனா்.