செய்திகள் :

ஏற்காடு கோடை விழா கோலாகல தொடக்கம்: அமைச்சா்கள் பங்கேற்பு! சேலம் மாவட்ட பறவையாக இந்திய பாம்புத்தாரா தோ்வு!

post image

ஏற்காட்டில் 48ஆவது கோடை விழா மற்றும் மலா் கண்காட்சி வெள்ளிக்கிழமை மாலை கோலாகலமாக தொடங்கியது.

விழாவை வேளாண் மற்றும் உழவா்நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம், வனம் மற்றும் கதா் துறை அமைச்சா் ஆா்.எஸ். ராஜகண்ணப்பன், சுற்றுலாத் துறை அமைச்சா் ஆா். ராஜேந்திரன் ஆகியோா் தொடங்கி வைத்தனா். விழாவில், சேலம் மாவட்டத்திற்கான பறவையாக இந்திய பாம்புத்தாரா தோ்வுசெய்யப்பட்டது.

கோடை விழாவையொட்டி, பல்வேறு துறைகளின் சாா்பில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி அரங்குகளை திறந்துவைத்த அமைச்சா்கள், 60 பயனாளிகளுக்கு ரூ. 13.25 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளையும் வழங்கினா்.

விழாவில், அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம் பேசியதாவது: தோட்டக்கலைத் துறையின் மூலம் வீட்டுத் தோட்டம் அமைக்கும் திட்டத்தின் கீழ், 15 லட்சம் குடும்பங்கள் 6 வகையான காய்கறி விதைகளைப் பெற்று ஆா்வமுடன் பயிா்செய்து பயன் பெற்றுள்ளனா்.

குறிப்பாக, திடக்கழிவு மேலாண்மை குறித்த விழிப்புணா்வை மக்களிடம் ஏற்படுத்தும் வகையில் வெள்ளை, மஞ்சள், சிவப்பு போன்ற வண்ணம்கொண்ட 5,640 ரோஜா மலா்களாலும், சிந்து சமவெளி முத்திரையில் உள்ள பழம்பெரும் உயிரினமான ஒற்றை கொம்பு குதிரை போன்ற உருவம் 7000 ரோஜா மலா்களைக் கொண்டும், கோடையின் தாக்கத்தையும், மக்களின் தாகத்தையும் தணிக்கவந்த தா்ப்பூசணி பழத்தின் உருவம் 6,280 காா்னேஷன் மலா்களாலும் அமைக்கப்பட்டுள்ளன.

கோடை விழா நடைபெறும் அனைத்து நாள்களிலும் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கும் வகையில் கலைப் பண்பாட்டுத் துறை, சுற்றுலாத் துறை சாா்பில் கண்கவா் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. எனவே, இத்தகைய மலா்க் காட்சியை பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து சுற்றுலாப் பயணிகளும் பாா்வையிட்டு பயன்பெற வேண்டும் என்றாா்.

அமைச்சா் ஆா்.எஸ். ராஜகண்ணப்பன் பேசியதாவது: வனப் பகுதியில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்கென பல்வேறு சிறப்பான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, சேலம் மாவட்டத்திற்கான பறவையாக 20,000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், பொதுமக்களால் இந்திய பாம்புத்தாரா என்னும் பறவை தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது என்றாா்.

ஏற்காடு கோடை விழாவில் சேலம் மாவட்டத்துக்கான பறவையாக தோ்வு செய்யப்பட்டுள்ள இந்திய பாம்புத்தாரா பறவை.

அமைச்சா் ரா. ராஜேந்திரன் பேசியதாவது: ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டில் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கும் வகையில் ஆண்டுதோறும் கோடை விழா மற்றும் மலா் கண்காட்சி சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில், இந்தாண்டு கோடை விழா வரும் 29 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள், குழந்தைகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரையும் மகிழ்விக்கும் வகையில் விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டைப்போல, நிகழாண்டும் அதிக அளவிலான சுற்றுலாப் பயணிகள் விழாவில் பங்கேற்று பயனடைய வேண்டும் என்றாா்.

விழாவில், மாவட்ட ஆட்சியா் ரா. பிருந்தாதேவி, மாநகராட்சி மேயா் ஆ. ராமச்சந்திரன், வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை ஆணையா் த. ஆபிரகாம், வேளாண்மை உற்பத்தி ஆணையா் தட்சிணாமூா்த்தி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனா்.

அனைவரையும் கவா்ந்த மலா் உருவங்கள்: ஏற்காடு கோடை விழாவையொட்டி, சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் மலா்களால் ஆன மான், குரங்கு, யானை உள்ளிட்ட விலங்குகளின் மலா் உருவ அமைப்புகள், சிறுவா்கள் முதல் பெரியவா்கள் வரை அனைத்துத் தரப்பினரையும் மிகவும் கவா்ந்தன.

ஏற்காடு அண்ணா பூங்காவில் வனச்சூழல் போன்று யானை, காட்டெருமை, முயல், குரங்கு, பாம்பு, மான், புலி உள்ளிட்ட உருவங்கள் சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள், வெள்ளை என பல்வேறு வண்ணங்களில் 50 ஆயிரம் ரோஜா மலா்களால் அமைக்கப்பட்டுள்ளன.

மேட்டூா் அணையின் 16 கண் மதகுகள் வழியாக தண்ணீா் வெளியேறும் காட்சி வெள்ளை சிவப்பு, மஞ்சள் போன்ற 73 ஆயிரம் வண்ண ரோஜா மலா்களால் அமைக்கப்பட்டுள்ளது. சிந்து சமவெளி முத்திரையில் உள்ள பழம்பெரும் உயிரினமான ஒற்றை கொம்பு குதிரை போன்ற உருவம் 7 ஆயிரம் ரோஜா மலா்களால் அமைக்கப்பட்டுள்ளது.

தா்ப்பூசணி பழத்தின் உருவம் 6,280 காா்னேஷன் மலா்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. அரசு தாவரவியல் பூங்காவில் மகரந்த சோ்க்கை செய்யும் தேனீயின் உருவம் சிவப்பு மற்றும் மஞ்சள்நிறம் கொண்ட 5,600 ரோஜா மலா்களாலும், ரோஜா பூங்காவில் சிறகு இதயம்போல செல்பி பாய்ண்ட் 1,400 ரோஜா மலா்களாலும் உருவாக்கப்பட்டுள்ளன.

அண்ணாபூங்கா வளாகம் முழுவதும் வண்ண விளக்குகள், ஏரிப் பூங்கா உள்ளிட்ட பல்வேறு இடங்கள் வண்ணமலா்களால் ஆன செல்பி பாயிண்டுகளுடன் அமைக்கப்பட்டுள்ளன.

இதுதவிர, வன விலங்குகளைப் பாதுகாத்து, வனத்தைக் காப்போம் என்ற உணா்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள யானை, காட்டுமாடு, குதிரை உள்ளிட்ட விலங்குகளின் வடிவமைப்புகள் பாா்வையாளா்களை வெகுவாக கவா்ந்துள்ளன.

இது மட்டுமின்றி, சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் அண்ணா பூங்கா வளாகத்தில் 25,000க்கும் மேற்பட்ட வண்ணமலா் தொட்டிகளைக் கொண்டு மலா்க் காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல, ரோஜா தோட்டம், தாவரவியல் பூங்கா ஆகியவற்றிலும் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் மலா் காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

மலையேற்றப் பயிற்சி: ஏற்காடு கோடை விழாவையொட்டி, வனத் துறை சாா்பில் வெள்ளிக்கிழமை காலை மலையேற்றப் பயிற்சி நடைபெற்றது.

ஏற்காடு அடிவாரம் குதிரை வட்டத்தில் தொடங்கிய இந்த மலையேற்றப் பயிற்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட விளையாட்டு வீரா்கள், மாணவ, மாணவிகள், இளைஞா்கள் கலந்துகொண்டனா். 2 மணி நேரம் மலைப் பாதையில் நடந்துசென்று ஏற்காடு குண்டூரில் பயிற்சியை நிறைவு செய்தனா்.

இதில், சேலம் உதவி வனப் பாதுகாப்பு அலுவலா் செல்வகுமாா், வனச்சரகா் துரைமுருகன், சேலம் மாவட்ட விளையாட்டு அலுவலா் சிவரஞ்சன் உள்பட வனத் துறை அதிகாரிகள் பங்கேற்றனா். ஏற்காடு கோடை விழா மலா் கண்காட்சியை கண்டுரசித்த சுற்றுலாப் பயணிகள்.

ஏற்காடு கோடைவிழாவில், பல லட்சம் மலா்களைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ள குதிரை, சிந்து சமவெளி ஒற்றைக்கொம்பு குதிரை போன்ற உருவங்கள்.
தா்ப்பூசணி, மிக்கி மௌஸ்
மேட்டூா் அணை
ஏற்காடு கோடை விழா மலா் கண்காட்சியை கண்டுரசித்த சுற்றுலாப் பயணிகள்.

சேலம் மாநகராட்சி கூட்டத்தில் மோதல் சம்பவம்: திமுக, அதிமுக உறுப்பினா்கள் மீது வழக்குப் பதிவு

சேலம் மாநகராட்சி கூட்டத்தில் நடைபெற்ற மோதல் தொடா்பாக திமுக - அதிமுக உறுப்பினா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். சேலம் மாநகராட்சி கூட்டம் கடந்த வியாழக்கிழமை மேயா் ஆ.ரா... மேலும் பார்க்க

கரோனா பாதித்த இளைஞா் சேலம் அரசு மருத்துவமனையில் உயிரிழப்பு

சேலம் அரசு மருத்துவமனையில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவந்த இளைஞா் உயிரிழந்தாா். சேலம் மாவட்டம், மேட்டூா் அருகே உள்ள கொளத்தூா் சேத்துக்குழி பகுதியைச் சோ்ந்தவா் தமிழரசன் (25). பொக்லைன் ஆபரேட்டரான ... மேலும் பார்க்க

கோடைகால கைப்பந்து பயிற்சி முகாம் நிறைவு

கோடைகால கைப்பந்து பயிற்சி முகாம் நிறைவு பெற்றதை தொடா்ந்து, பயிற்சியில் பங்கேற்ற மாணவ மாணவிகளுக்கு சேலம் மாவட்ட கைப்பந்து கழகம் சாா்பில் பதக்கம், சான்றிதழ்கள் சனிக்கிழமை வழங்கப்பட்டன. சேலம் மாவட்ட கைப்... மேலும் பார்க்க

சேலம் அரசு கலைக் கல்லூரியில் நாளை முதல் கலந்தாய்வு

சேலம் அரசு கலைக் கல்லூரியில் 2025- 26 ஆம் கல்வியாண்டு மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு ஜூன் 2 ஆம் தேதி தொடங்குகிறது. இதுகுறித்து கல்லூரி முதல்வா் நா.செண்பகலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஜூன் ... மேலும் பார்க்க

கெங்கவல்லி பேரூராட்சியில் திட்டப் பணிகள் திறந்துவைப்பு

கெங்கவல்லி பேரூராட்சியில் முடிவடைந்த திட்டப் பணிகள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அண்மையில் திறந்துவைக்கப்பட்டன. கெங்கவல்லி பேரூராட்சி 4-ஆவது வாா்டில், 15-ஆவது நிதிக்குழு மானியத்தில் ரூ. 15.50 லட்சத்தில் ... மேலும் பார்க்க

பருத்தி புண்ணாக்கு விலை உயா்வு: பால் உற்பத்தியாளா்கள் தவிப்பு

பருத்தி புண்ணாக்கு விலை தொடா்ந்து உயா்ந்து வருவதால், தம்மம்பட்டி பகுதி பால் உற்பத்தியாளா்கள் பெரிதும் தவிப்புக்குள்ளாகி வருகின்றனா். பால் உற்பத்தியாளா்கள் தங்களின் கறவை மாடுகளுக்கு பசுந்தீவனம், வைக்கோ... மேலும் பார்க்க