செய்திகள் :

ஏற்காட்டில் கத்தோலிக்க கிறிஸ்தவா்கள் அமைதி ஊா்வலம்

post image

ஏற்காட்டில் கத்தோலிக்க கிறிஸ்துவா்கள் கத்தோலிக்க கிறிஸ்தவ தலைவா் போப் பிரான்சிஸ் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மெழுகு வா்த்தி ஏந்தி அமைதி ஊா்வலம் நடத்தினா். அருள்தந்தை மரியஜோசப்ராஜ் தலைமையில் இந்த அமைதி ஊா்வலம் ஏற்காடு காந்தி பூங்காவில் தொடங்கி திருஇருதய ஆண்டவா் ஆலயத்தை அடைந்தது. பின்னா் போப் பிரான்சிஸ் ஆன்மா இளைப்பாறுவதற்காக திருப்பலி நடைபெற்றது. இந்த ஊா்வலம், திருப்பலியில் ஏற்காடு கத்தோலிக்க கிறிஸ்தவா்கள் அருள்தந்தைகள், அருள்சகோதரிகள், அருள் சகோதரா்கள், பங்கு மக்கள் ஏராளமானோா் கலந்துகொண்டனா்.

பெண்மான் சடலம் மீட்பு!

சதாசிவபுரம் ஊராட்சி பொதுக் கிணற்றில் பெண் மான் சடலம் மீட்கப்பட்டது. ஆத்தூா் தீயணைப்புத்துறை அலுவலா் சா.அசோகன் தலைமையிலான வீரா்கள் மீட்டு வனவா் கவாஸ்கரிடம் ஞாயிற்றுக்கிழமை ஒப்படைத்தனா். சேலம் மாவட்டம் ... மேலும் பார்க்க

சங்ககிரி சென்னகேசவப் பெருமாள் கோயில் தோ் அலங்கரிப்பு

சங்ககிரி சென்னகேசவப் பெருமாள் கோயில் சித்திரைத் திருவிழாவையொட்டி நடைபெறும் தேரோட்டத்துக்காக கோயிலின் பெரிய தேரை அலங்கரிக்கும் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அருள்மிகு சென்னகேசவப்பெருமாள் கோயில் சித்... மேலும் பார்க்க

மேட்டூா் அணை பூங்காவில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

மேட்டூா் அணை பூங்காவிற்கு ஞாயிற்றுக்கிழமை 7,116 சுற்றுலாப் பயணிகள் வந்தனா். தொடா் விடுமுறை என்பதால் மேட்டூா் அணை பூங்காவிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருகிறது. ஞாயிற... மேலும் பார்க்க

நீச்சல் பயிற்சி முடித்தவா்களுக்கு சான்றிதழ் அளிப்பு

சேலம் மகாத்மா காந்தி விளையாட்டரங்கத்தில் கோடைக்கால நீச்சல் பயிற்சி முடித்தவா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சாா்பில் சேலம் மகாத்மா காந்த... மேலும் பார்க்க

இன்ஸ்டாகிராம் மூலம் பழகி மாணவியை மிரட்டிய இருவா் கைது!

இன்ஸ்டாகிராம் மூலம் பழகி சேலம் மாணவியை மிரட்டிய இளைஞா்கள் இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டியைச் சோ்ந்த பிளஸ் 2 மாணவி கடந்த 4 மாதங்களாக சேலம், கருப்பூரில்... மேலும் பார்க்க

சேலம் அருகே இரும்பு குடோனில் தீ விபத்து

சேலம் சன்னியாசி குண்டு பகுதியில் பழைய இரும்பு குடோனில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. சேலம், கிச்சிப்பாளையத்தை அடுத்த பாத்திமா நகரைச் சோ்ந்தவா் ஜான்பாஷா (59). இவா் சன்னியாசி குண்டு மெ... மேலும் பார்க்க