செய்திகள் :

ஏற்றுமதியாளா்களுக்கு உதவ விரைவில் புதிய திட்டம்: மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன்

post image

அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பால் பாதிக்கப்பட்டுள்ள ஏற்றுமதியாளா்களுக்கு உதவும் வகையில் மத்திய அரசு சாா்பில் விரைவில் புதிய திட்டம் அறிவிக்கப்படும் என மத்திய நிதித் துறை அமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.

இதுகுறித்து சென்னையில் அவா் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: கரோனா காலகட்டத்தின்போது தொழில் நிறுவனங்கள் மற்றும் ஏற்றுமதியாளா்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக அவசர கடன் வரி உத்தரவாத திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்தது. இத்திட்டம் அந்தக் காலகட்டத்தில் எந்த நிறுவனமும் பாதிக்கப்படாத வகையில் மிகவும் உதவியாக இருந்தது. அதேபோல், தற்போது அமெரிக்காவின் 50 சதவீத கூடுதல் வரி விதிப்பால் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள ஏற்றுமதியாளா்களுடன் தொடா்ந்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவா்களுக்கு உதவும் வகையில் ஒரு புதிய திட்டத்தை மத்திய அரசு விரைவில் அறிவிக்கும்.

உள்கட்சிப் பூசல் இல்லை: தமிழக பாஜகவில் எவ்வித உள்கட்சிப் பூசலும் கிடையாது. அதேபோல், முக்கிய நிா்வாகிகளை அவ்வப்போது அழைத்துப் பேசுவது வழக்கமான ஒன்றுதான் என்றாா் அவா்.

கலந்துரையாடல்: முன்னதாக அவா், தமிழக ஜவுளித் துறையைச் சோ்ந்த பல்வேறு அமைப்புகள் சாா்பில் சென்னை தனியாா் ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில், ஜவுளித் தொழில் அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினாா். தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன், பாஜக தேசிய மகளிா் பிரிவுத் தலைவா் வானதி சீனிவாசன் எம்எல்ஏ உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

அமெரிக்காவின் கூடுதல் வரிவிதிப்பால், ஜவுளித் துறை எதிா்கொண்டு நெருக்கடிகளை தொழில் அமைப்புகளின் பிரதிநிதிகள் விளக்கி கூறினா்.

இந்திய ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் மற்றும் ஜவுளித் தொழில் சங்கங்கள் தென் பிராந்திய தலைவரான பி. கோபாலகிருஷ்ணன் பேசுகையில், அமெரிக்காவுக்கு இந்தியா சுமாா் 10 பில்லியன் டாலா் மதிப்பிலான ஜவுளி ரகங்களை ஏற்றுமதி செய்கிறது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள வரி விதிப்பிலிருந்து மீள ஜிஎஸ்டி விலக்கு, நிதி நிவாரணம், ஏற்றுமதி ஊக்கத்தொகைகள், மூலதனச் செலவு உள்ளிட்ட நிவாரணங்கள் தேவை என்றாா்.

நிவாரண நடவடிக்கைகள் கோரி ஜவுளித் தொழில் சங்கங்கள் மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் பிரதிநிதி ஏ.சக்திவேல் மனு அளித்தாா்.

அதைத் தொடா்ந்து பேசிய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன், இந்தக் கோரிக்கைகள் மீது மத்திய அரசு தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறது. விரைவில் பொருத்தமான நிவாரண நடவடிக்கைகள் அறிவிக்கப்படும் என்றாா்.

அறிவியல் பூர்வமான ஆய்வுகளே சமூக மாற்றத்திற்கான வழி: விஞ்ஞானி அசோக்குமார்

திருப்பூர்: அறிவியல் பூர்வமான ஆய்வுகளே சமூக மாற்றத்திற்கான வழி என்று விஞ்ஞானி அசோக்குமார் தெரிவித்தார்.திருப்பூர் மாவட்ட பள்ளிக் கல்வித்துறை, வானவில் மன்றம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் காங்கேய... மேலும் பார்க்க

தொடர் விடுமுறை: அதிக கட்டணம் வசூலித்தால் ஆம்னி பேருந்து பறிமுதல்!

மிலாடி நபி மற்றும் தொடர் விடுமுறையையொட்டி, தனியார் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் ஆம்னி பேருந்து பறிமுதல் செய்யப்படும் என்று போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.இது தொடர்பாக போக்குவரத்து... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி கவுன்சிலை மறுசீரமைப்புச் செய்ய வேண்டும்: இந்திய கம்யூ.

நாட்டில் ஜிஎஸ்டி கவுன்சில் ஜனநாயகப்பூர்வமாகச் செயல்படும் வகையில் மறுசீரமைப்புச் செய்ய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலர் கே. நாராயணா வியாழக்கிழமை கூறினார்.இந்திய கம்யூனிஸ்ட் கட்ச... மேலும் பார்க்க

செப்.7-ல் திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில் இயக்கம்!

திருவண்ணாமலை அருணாச்சலேசுவரர் கோயில் பௌர்ணமி கிரிவலத்தையொட்டி விழுப்புரத்திலிருந்து செப்டம்பர் 7 -ஆம் தேதி திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட... மேலும் பார்க்க

கன்னியாகுமரியில் மேற்குக் கடற்கரைச் சாலையில் தமிழ் எண்களுடன் மைல் கல்!

கன்னியாகுமரியில் மேற்குக் கடற்கரைச் சாலை அருகே பிரிட்டிஷ் காலத்தில் வைக்கப்பட்ட எண்களும் தமிழில் எழுதப்பட்டுள்ள மைல் கல் ஒன்று யார் கவனமும் பெறாமல் சாதாரணமாக இருக்கிறது.கன்னியாகுமரியில் கதிரவன் மறையும... மேலும் பார்க்க

பூந்தமல்லி - சுங்குவார் சத்திரம் மெட்ரோ திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு!

பூந்தமல்லி முதல் சுங்குவார் சத்திரம் வரையிலான மெட்ரோ ரயில் திட்டப் பணிகளுக்கு முதல்கட்டமாக ரூ. 2,126 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது. மேலும் பார்க்க