செய்திகள் :

ஏற்றுமதியில் திராட்சையை பின்னுக்குத் தள்ளிய பழம்!

post image

உலக நாடுகளுக்கு இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பழங்களில் அதிகளவில் ஏற்றுமதியாகும் பழமாக இதுவரை இருந்த திராட்சையைப் பின்னுக்குத் தள்ளியிருக்கிறது வாழைப்பழம்.

மத்திய கிழக்கு நாடுகளில் வாழைப்பழம் அதிகம் விரும்பி சாப்பிடும் பழமாக மாறி வரும் நிலையில், இந்திய ஏற்றுமதி அதிகரித்திருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்தியாவிலிருந்து கடந்த 2023 - 24ஆம் ஆண்டில் ஏற்றுமதி செய்யப்பட்ட வாழைப்பழத்தின் மதிப்பு ரூ.2,474 கோடியாக இருந்த நிலையில், 2024 - 2025ஆம் நிதியாண்டில் இது ரூ.3,209 கோடியாக அதிகரித்துள்ளது என்கின்றன தரவுகள். இதனால், வாழைப்பழ ஏற்றுமதி 30 சதவீதம் அதிகரித்துள்ளது.

இந்தியாவிலிருந்து ஏராளமான பழங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வரும் நிலையில், இதுவரை திராட்சைதான் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படும் பழங்களின் பட்டியலில் முதலிடத்தில் இருந்தது. இந்தியாவில் திராட்சை அதிகம் விளைகிறது. அதுவும் தமிழகத்தில் பன்னீர் திராட்சை அதிகம் விளைவிக்கப்படுகிறது.

ஆனால், தற்போது, திராட்சையை பின்னுக்குத் தள்ளி வாழைப்பழம் முதலிடம் பிடித்துள்ளது. வாழைப்பழம் என்று எடுத்துக்கொண்டால் ஆந்திரத்தில் அதிக விளைச்சல் உள்ளதாகக் கூறப்படுகிறது. தமிழகம், கர்நாடகத்திலும் வாழை அதிகளவில் விளைவிக்கப்படுகிறது.

திராட்சையை விட வாழை விலை குறைவு என்பதால், தற்போது அதிகம் வாங்கும் பழங்களில் வாழை இடம்பிடித்து ஏற்றுமதியும் அதிகரித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

சந்தா அடிப்படையில் பேட்டரி: அறிமுகப்படுத்துகிறது ஹீரோ மோட்டோகாா்ப்

நாட்டின் மிகப் பெரிய இருசக்கர வாகன உற்பத்தியாளரான ஹீரோ மோட்டோகாா்ப், அடுத்த மாதம் வெளியிடப்படவிருக்கும் தனது விடா விஎக்ஸ்2 மின்சார ஸ்கூட்டருக்கு சந்தா அடிப்படையில் பேட்டரியை அளிக்கும் ‘பேட்டரி-அஸ்-எ-ச... மேலும் பார்க்க

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 14 காசுகள் உயர்ந்து ரு.86.59 ஆக முடிவு!

மும்பை: இன்றைய வர்த்தகத்தில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 14 காசுகள் உயர்ந்து ரூ.86.59 ஆக நிறைவடைந்தது. உலகளாவிய கச்சா எண்ணெய் விலை சரிவு மற்றும் பலவீனமான டாலரின் மதிப்பும் உதவியதாக வர்த்தகர... மேலும் பார்க்க

காளையின் ஆதிக்கத்தில் சென்செக்ஸ் 1,046 புள்ளிகளும், நிஃப்டி 319 புள்ளிகளுடன் உயர்ந்து முடிவு!

மும்பை: உலகளாவிய கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட திருத்தத்திற்கு மத்தியில் நிதி, தொலைத்தொடர்பு மற்றும் தொழில்நுட்ப பங்குகளில் முதலீட்டாளர்கள் கவனம் செலுத்தியதால், கடந்த மூன்று அமர்வுகளாக சரிந்த பிறகு, ... மேலும் பார்க்க

அனைத்து பைக்களுக்கும் ஏபிஎஸ் கட்டாயம்! 2 ஹெல்மெட்

சாலை விபத்துகளைக் குறைத்து, வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மத்திய அரசு, அனைத்து இருசக்கர வாகனங்களுக்கும் ஏபிஎஸ் எனப்படும் பூட்டுதலில்லா நிறுத்த அமைப்பைக் கட்டாயமாக்கும் பரிந்துரைக்க... மேலும் பார்க்க

ரூ. 26,000-க்கு ஆப்பிள் ஐபோன் 15 வாங்க முடியும்! எப்படி?

ஆப்பிள் ஐபோன் 15 மொபைல் போனுக்கு அமேசான் தளத்தில் சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஆப்பிள் ஐபோன் வாங்க வேண்டும் என்பது மொபைல் பிரியர்கள் பலரின் கனவாக இருக்கிறது. தற்போது ஆப்பிள் ஐபோன் 16 அறிமுகமான நி... மேலும் பார்க்க

இந்திய பங்குச் சந்தை ஏற்றத்துடன் வர்த்தகம்! நிஃப்டி 25,000 புள்ளிகளைக் கடந்தது!

இந்திய பங்குச் சந்தையான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகின்றது.ஈரான் - இஸ்ரேல் மோதல் காரணமாக புவிசாா் அரசியல் நிச்சயமற்ற தன்மைகள் முதலீட்டாளா்களை பதற்றத்துக்கு உள்ளாக்கியுள்ளது.... மேலும் பார்க்க