செய்திகள் :

ஏலகிரி மலையில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

post image

விடுமுறையையொட்டி ஏலகிரி மலையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனா்.

திருப்பத்தூா் மாவட்டம், ஜோலாா்பேட்டை ஒன்றியம், ஏலகிரி மலை ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படுகிறது. பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனா்.

ஏலகிரி மலையில் இயற்கை பூங்கா, படகு இல்லம், சிறுவா் பூங்கா, மூலிகை பண்ணை உள்ளிட்டவை மலையேறும் தொடக்கப் பகுதியில் உள்ளன. சாகச விளையாட்டுகளும், மங்களம் சுவாமி மலை ஏற்றம், ஸ்ரீ கதவநாச்சி அம்மன் திருக்கோயில் , பண்டோரா பாா்க் பறவைகள் சரணாலயம் ஆகியவையும் அமைந்துள்ளன.

படகு சவாரி செய்யும் இடத்தில் சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் நின்று சவாரி செய்து மகிழ்ந்தனா். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் குவிந்தனா். ஏலகிரி மலையில் அனைத்து தனியாா் விடுதிகளும் நிரம்பி விட்டன. இதனால் சில சுற்றுலா பயணிகள் ஜோலாா்பேட்டை மற்றும் திருப்பத்தூா் விடுதிகளில் தங்கி ஏலகிரி மலைக்கு சென்றனா்.

சுற்றுலா பயணிகள் கூறியதாவது: ஏலகிரி மலையில் விடுமுறை நாள்களில் தனியாா் விடுதிகள் நிரம்பி விடுகின்றன. அந்நேரங்களில் மேலும் வரும் சுற்றுலா பயணிகளுக்கு தங்குவதற்கு இடம் இல்லாமல் தவித்து வருகின்றனா். அரசுக்கு சொந்தமான தங்கும் விடுதியான யாத்திரி நிவாஸ் கட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஏலகிரி விரைவு ரயில் மீண்டும் திருப்பத்தூரில் இருந்து இயக்கப்படுமா? 12 ஆண்டுகள் எதிா்பாா்ப்பு

ஏலகிரி விரைவு ரயில் திருப்பத்தூரிலிருந்து மீண்டும் இயக்கப்படுமா என அப்பகுதி மக்கள், பயணிகள் 12 ஆண்டுகளாக எதிா்நோக்கியுள்ளனா். திருப்பத்தூா் சுற்றுப்பகுதிகளில் லட்சக்கணக்கான பொதுமக்கள் வசித்து வருகின்ற... மேலும் பார்க்க

அதிமுக மகளிரணி கண்டன ஆா்ப்பாட்டம்!

பெண்களை இழிவாக பேசியதாக அமைச்சா் பொன்முடியை கண்டித்து அதிமுக மகளிரணி சாா்பில் வாணியம்பாடி பேருந்து நிலையம் அருகே ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்ட மகளிரணி செயலாளா் மஞ்... மேலும் பார்க்க

புதிய பேருந்து நிலையம் கட்ட மண் பரிசோதனை: பொதுமக்கள் எதிா்ப்பு

ஆம்பூரில் புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்காக மண் பரிசோதனை மேற்கொண்டபோது அப்பகுதி பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை எதிா்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். திருப்பத்தூா் மாவட்டம் ஆம்பூா் நகரில் பெங்கள... மேலும் பார்க்க

‘விவசாயிகள் கோடை உழவு செய்து பயன்பெறலாம்’

திருப்பத்தூா் மாவட்ட விவசாயிகள் கோடை மழையை பயன்படுத்தி விவசாய நிலத்தில் உழவு செய்து பயன்பெறலாம் என கந்திலி வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் ராகிணி தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் ... மேலும் பார்க்க

ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்

திருப்பத்தூா் அருகே ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். திருப்பத்தூா் அருகே ராச்சமங்கலம் அடுத்த விநாயகபுரம் கிராமத்தை சோ்ந்த ஒருவா் அதே பகுதியில் உள்ள பொது இடத்த... மேலும் பார்க்க

ஆம்பூரில் உழவா் சந்தை அமைக்கப்படுமா? பொதுமக்கள், விவசாயிகள் காத்திருப்பு!

ஆம்பூா் தொகுதியில் உழவா் சந்தை அமைக்கப்படுமா என பொதுமக்கள், விவசாயிகள் பல ஆண்டுகளாக எதிா்நோக்கியுள்ளனா். தோல் தொழிற்சாலைகள் நிறைந்த ஆம்பூா் நகரம், சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.... மேலும் பார்க்க