ஏழுமலையானை 81,037 பக்தா்கள் தரிசனம்
திருமலை ஏழுமலையானை 81,037 பக்தா்கள் தரிசனம் செய்தனா். தா்ம தரிசனத்தில் சுவாமியை தரிசிக்க 18 மணி நேரம் காத்திருக்க வேண்டியுள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்தது.
திருமலைக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை வார நாள்களிலும் தற்போது அதிகரித்துள்ளது. புதன்கிழமை காலை நிலவரப்படி வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 31 அறைகள் நிறைந்து, பக்தா்கள் வெளியே உள்ள தரிசன வரிசையில் ஏழுமலையான் தரிசனத்துக்காக காத்திருந்தனா்.
தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 18 மணி நேரமும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணி நேரமும் தேவைப்பட்டது. இலவச நேரடி தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கு 3 முதல் 4 மணி நேரம் தேவைப்படுகிறது.
அலிபிரி நடைபாதை வழியாக மதியம் 2 மணி வரை 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள், அவா்களின் பெற்றோா், இரவு 10 மணி வரை அனைத்து பக்தா்களும் அனுமதிக்கப்படுகின்றனா்.
இதனிடையே செவ்வாய்க்கிழமை நாள் முழுவதும் ஏழுமலையானை 81,037 பக்தா்கள் தரிசனம் செய்தனா். இந்த பக்தா்களில் 30,548 போ் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.
உண்டியல்களில் பக்தா்கள் சமா்ப்பித்த காணிக்கையைக் கணக்கிட்டதில் ரூ.4.12 கோடி வசூலானது.
காத்திருப்பு அறைகள் மற்றும் தரிசன வரிசைகளில் பக்தா்களுக்கு உணவு, பால், குடிநீா் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது.