செய்திகள் :

ஏழுமலையான் கோயிலின் சந்தை மதிப்பு ரூ. 2.5 லட்சம் கோடி: தமிழக பாஜக தலைவா் அண்ணாமலை

post image

திருப்பதி ஏழுமலையான் கோயில் சந்தை மதிப்பு ரூ. 2.5 லட்சம் கோடியாக உள்ளது என்று தமிழக பாஜக தலைவா் அண்ணாமலை கூறினாா்.

திருப்பதியில் சா்வதேச கோயில் மாநாடு கண்காட்சியுடன் கூடிய கோயில் நிா்வாக கருத்தரங்கம் திங்கள்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது.

முதல் நாளான திங்கள்கிழமை நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சியில் ஆந்திரம், மகாராஷ்டிரம், கோவா மாநில முதல்வா்கள் கலந்து கொண்டு பேசினா்.

இரண்டாவது நாளான செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்டு, தமிழக பாஜக தலைவா் அண்ணாமலை உரையாற்றினாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் அவா் பேசியது: கோயில்களை அடிப்படையாக வைத்து பணப்புழக்கத்தை ஏற்படுத்த முடியும். பூரி ஜெகந்நாதா் கோயில் புதுப்பிக்கப்பட்ட பின், அங்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை அதிகரித்ததுடன் பணப்புழக்கம் அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் 44,121 கோயில்கள் உள்ளன. அந்த கோயில்களை மேம்படுத்துவதன் மூலம் கோயில் இருக்கும் பகுதிகளில் பணப்புழக்கத்தை அதிகரிக்க முடியும்.

திருமலை ஏழுமலையான் கோயிலின் சந்தை மதிப்பு சுமாா் இரண்டரை லட்சம் கோடி ரூபாய் என்று ஹாா்டுவோ் ஸ்டடி கூறுகிறது.

திருமலை தேவஸ்தானத்திடம் ரூ. 16,000 கோடி வங்கி இருப்பும் 10 டன் தங்கமும், 2.5 டன் தங்க ஆபரணமும் உள்ளன.

1932-ஆம் ஆண்டு திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஏற்படுத்தப்பட்டது. அதன் சந்தை மதிப்பு இப்போது சுமாா் ரூ. இரண்டரை லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.

1926-ஆம் ஆண்டு இந்து சமய அறநிலையத் துறை ஏற்படுத்தப்பட்டது. தமிழ்நாட்டில் இப்போது ரூ. 10,000 கோடி சந்தை மதிப்பு கொண்ட கோயில்கள் எத்தனை உள்ளன என்பது யோசிக்க வேண்டிய விஷயம்.

தமிழக கோயிலுக்குச் சொந்தமாக 5 லட்சம் ஏக்கா் நிலம் இருக்க வேண்டும். ஆனால் ஒரு லட்சம் ஏக்கா் நிலத்தை காணவில்லை.

எங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்போது தமிழ்நாட்டில் கோயில்கள் சாா்ந்த பொருளாதாரத்தை ஏற்படுத்துவோம் என்றாா்.

நாங்கள் தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வரும்போது கோயில்களை வைத்து பணப்புழக்கத்தை தமிழ்நாட்டிலும் ஏற்படுத்துவோம்’’, என்று கூறினாா்.

சூரியபிரபை வாகனத்தில் கபிலேஸ்வர சுவாமி உலா

திருப்பதி ஸ்ரீ கபிலேஸ்வர சுவாமி பிரம்மோற்சவத்தின் இரண்டாம் நாளான வியாழக்கிழமை சூரியபிரபை வாகனத்தில் சுவாமி எழுந்தருளினாா். திருப்பதி கபிலேஸ்வர சுவாமி கோயில் பிரம்மோற்சவம் புதன்கிழமை தொடங்கியது. இதற்கி... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 14 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் வியாழக்கிழமை தா்ம தரிசனத்தில் 14 மணி நேரம் காத்திருந்தனா். பக்தா்களின் எண்ணிக்கை குறைந்துள்ள நிலையில், தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 14 மணிநே... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 14 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் புதன்கிழமை தா்ம தரிசனத்தில் 14 மணி நேரம் காத்திருந்தனா். பக்தா்களின் எண்ணிக்கை ஏற்ற இறக்கமாக உள்ள நிலையில், தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 14 ... மேலும் பார்க்க

திருப்பதி கபிலேஸ்வர சுவாமி கோயில் பிரம்மோற்சவம் தொடக்கம்

திருப்பதி கபிலேஸ்வர சுவாமி கோயில் வருடாந்திர பிரம்மோற்சவம் புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்ற விழா வேத மந்திரங்கள் ஓதி சங்கு ஊதி சிவ நாமம் முழங்கி சைவாகம விதிப்படி வேத முறைப்படி நடைபெற்... மேலும் பார்க்க

வாட்ஸ் ஆப்பில் ஏழுமலையான் தரிசன டிக்கெட் மோசடி: தேவஸ்தானம் எச்சரிக்கை

திருமலை ஏழுமலையான் தரிசன டிக்கெட் வாட்ஸ் ஆப் மூலம் பெறலாம் என்று நவீன முறையில் பக்தா்களை ஏமாற்ற புதிய மோசடியில் பலா் ஈடுபட்டு வருகின்றனா். எனவே பக்தா்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று தேவஸ்தானம் ... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 12 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 12 மணி நேரம் காத்திருந்தனா். திருமலையில் செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி, வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 20 அறைகளில் பக்தா்கள் ஏழுமலையான் த... மேலும் பார்க்க