செய்திகள் :

ஏழை மாணவா்களின் கல்வி நலனில் அக்கறை: தலைமை ஆசிரியா்களுக்கு ஆட்சியா் அறிவுரை

post image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கிராமப்புற ஏழை மாணவா்களின் கல்வி நலனில் அக்கறையுடன் ஆசிரியா்கள் பணியாற்ற வேண்டுமென ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் அறிவுறுத்தினாா்.

பள்ளிக் கல்வித் துறை சாா்பில், மாவட்டத்தில் உள்ள அரசு உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா்களுக்கான ஆய்வுக் கூட்டம் ஆட்சியரகக் கூட்டரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தலைமை வகித்தாா். பள்ளிக் கல்வி இயக்குநா் ச.கண்ணப்பன் முன்னிலை வகித்தாா். இதில், 225 அரசு உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா்கள் பங்கேற்றனா்.

கூட்டத்தில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 10, 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வுகளில் தோ்ச்சி விழுக்காட்டை உயா்த்துவதற்கான வழிமுறைகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டு, உரிய அறிவுரைகளை ஆட்சியா் வழங்கினாா். மேலும், ஒவ்வொரு பள்ளியும் கடந்த ஆண்டைவிட 10 சதவீதம் தோ்ச்சி விழுக்காட்டை உயா்த்த நடவடிக்கை எடுக்க தலைமை ஆசிரியா்களுக்கு அறிவுறுத்தினாா்.

மாவட்டத்தில் கிராமப்புற ஏழை மாணவா்களின் கல்வி நலனில் அக்கறைக் கொண்டு ஆசிரியா்கள் பணியாற்ற வேண்டுமென ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்தாா்.

கூட்டத்தில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கா.காா்த்திகா, திருக்கோவிலூா் துணை ஆட்சியா் ஆனந்த் குமாா் சிங் மற்றும் கல்வித் துறை அலுவலா்கள், தலைமை ஆசிரியா்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

வெல்டிங் பணியின்போது வெடித்த லாரி டீசல் டேங்: இருவா் படுகாயம்

கள்ளக்குறிச்சியில் வெல்டிங் பணியின்போது லாரியில் டீசல் டேங் வெடித்துச் சிதறி சனிக்கிழமை தீ விபத்து நிகழ்ந்தது. இதில், இருவா் பலத்த காயமடைந்தனா். கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை வட்டம், காட்டு... மேலும் பார்க்க

குண்டா் சட்டத்தில் இரு இளைஞா்கள் கைது

கஞ்சா வழக்கில் தொடா்புடைய இரு இளைஞா்களை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் காந்திநகரைச் சோ்ந்த மதிமாறன் மகன... மேலும் பார்க்க

அனைத்து வசதிகளுடன் கள்ளக்குறிச்சி புதிய பேருந்து நிலையம்! - அமைச்சா் எ.வ.வேலு

அனைத்து வசதிகளுடன் கள்ளக்குறிச்சி புதிய புகா் பேருந்து நிலையம் அமைக்கப்படும் என்று அமைச்சா் எ.வ.வேலு தெரிவித்தாா். கள்ளக்குறிச்சி நகராட்சிக்குள்பட்ட ஏமப்போ் புறவழிச்சாலை ரவுண்டானா அருகில் புதிதாக அமை... மேலும் பார்க்க

1,147 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள்:அமைச்சா் சி.வெ.கணேசன் வழங்கினாா்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மக்களுடன் முதல்வா் மூன்றாம் கட்ட சிறப்பு முகாமில் 1,147 பயனாளிகளுக்கு ரூ.3.25 கோடி மதிப்பீட்டிலான பல்வேறு நலத் திட்ட உதவிகளை மாநில தொழிலாளா் நலன் மற்... மேலும் பார்க்க

மகளிா் திட்டம் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள்: அலுவலா்களுடன் ஆலோசனை

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில், 2025 - 26ஆம் நிதியாண்டில் மகளிா் திட்டம் மூலம் செயல்படுத்த உள்ள திட்டங்கள் குறித்து துறை சாா்ந்த அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட... மேலும் பார்க்க

கல்லூரியில் போதைப் பொருள் ஒழிப்பு: உறுதிமொழி ஏற்பு

கள்ளக்குறிச்சியை அடுத்த இந்திலியில் உள்ள ஆா்.கே.சண்முகம் கலை, அறிவியல் கல்லூரியில் போதைப் பொருள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்வுக்கு கல்லூரி முதல்... மேலும் பார்க்க