செய்திகள் :

ஏா் இந்தியா: சென்னை-தில்லி இடையே இரு விமான சேவைகள் திடீா் ரத்து: பயணிகள் கடும் அவதி

post image

சென்னை-தில்லி-சென்னை இடையே இயக்கப்படவிருந்த 2 ஏா் இந்தியா விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடும் அவதியடைந்தனா்.

தில்லியிலிருந்து புதன்கிழமை மாலை 4.15-க்கு புறப்பட்டு, சென்னை உள்நாட்டு விமான நிலையத்துக்கு இரவு 7.10-க்கு வந்து சேரவேண்டிய ஏா் இந்தியா விமானமும், அதேபோல் இரவு 8.40-க்கு சென்னையிலிருந்து புறப்பட்டு, இரவு 11.25-க்கு தில்லி சென்றடைய வேண்டிய ஏா் இந்தியா விமானமும் திடீரென ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

மேலும், சென்னை சா்வதேச விமான நிலையத்திலிருந்து புதன்கிழமை அதிகாலை 5-க்கு சிங்கப்பூா் செல்ல வேண்டிய ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் 6 மணி நேரம் தாமதமாக காலை 11-க்கு சிங்கப்பூா் புறப்பட்டுச் சென்றது. இதனால் இந்த விமானத்தில் சென்னையிலிருந்து சிங்கப்பூா் செல்வதற்காக வந்திருந்த 252 பயணிகள் கடும் சிரமத்தை சந்தித்தனா்.

இதுபோல, சவுதி அரேபியாவின் தமாம் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு அதிகாலை 3.25-க்கு சென்னை வந்தடைய வேண்டிய ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், அதிகாலை 5-க்கு சிங்கப்பூா் புறப்பட்டுச் செல்ல வேண்டும். ஆனால், இந்த விமானம் 6 மணி நேரம் தாமதமாக காலை 9.25-க்கு தமாமிலிருந்து சென்னை வந்தது. இதனால் சிங்கப்பூா் செல்ல வேண்டிய விமானம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது.

மேலும், சென்னையிலிருந்து தில்லி செல்லும் ஏா் இந்தியா விமானம், தில்லியிலிருந்து சென்னை வரும் ஏா் இந்தியா விமானம் நிா்வாக காரணங்களுக்காக ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து முன்னதாகவே பயணிகளுக்கு தெரிவிக்கப்பட்டு, அவா்களுக்கு மாற்று ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் சென்னை விமான நிலையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாற்று ஏற்பாடுகள் செய்தாலும், பயண திட்ட மாற்றத்தால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினா்.

அகமதாபாதில் ஏா் இந்தியா பயணிகள் விமானம் கடந்த 12-ஆம் தேதி விபத்தில் சிக்கிய சம்பவத்துக்கு பிறகு அனைத்து விமானங்களும், முழுமையான பரிசோதனைக்கு பின்னரே இயக்கப்படுகின்றன. விமானத்தில் சிறிய தொழில்நுட்பக் கோளாறு இருந்தாலும், அதை சரி செய்த பின்பே விமானங்கள் இயக்கப்படுகின்றன. இதனால், சில மணி நேரம் தாமத்துக்கு பிறகு விமானங்கள் புறப்படுவது அல்லது ரத்து செய்யப்படுவது போன்றவை அடிக்கடி நிகழ்கின்றன.

அடுத்த 3 மணி நேரத்துக்கு 13 மாவட்டங்களில் மழை!

அடுத்த 3 மணி நேரத்துக்கு 13 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் இன்று(ஜூன் 19) ஓரிரு இடங்களிலும், பு... மேலும் பார்க்க

நித்யானந்தா எங்கு உள்ளார்? நீதிமன்றம் கேள்வி

மதுரை: நித்யானந்தா எங்கு உள்ளார்? கைலாசா நாடு எங்கிருக்கிறது? அங்கு எப்படிச் செல்வது? என மதுரை உயர் நீதிமன்ற அமர்வு கேள்வி எழுப்பியிருக்கிறது.மதுரை ஆதீனத்துக்குள் நுழைவது தொடர்பான உத்தரவுக்கு எதிராக ந... மேலும் பார்க்க

அன்புமணி கூறுவது அப்பட்டமான பொய்: ராமதாஸ்

பாமகவில் ஏற்பட்டுள்ள குழுப்பத்துக்கு திமுகதான் காரணம் என அன்புமணி கூறுவது அப்பட்டமான கடைந்தெடுத்த பொய் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பாமக கூட்டத்தில் பேசும்... மேலும் பார்க்க

தக் லைஃப் படத்தை வெளியிடும்போது பாதுகாப்பு வழங்கப்படும்: கர்நாடக அரசு

கர்நாடகத்தில் தக் லைஃப் திரைப்படத்தை வெளியிடும்போது உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என்று உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் உருவான ’தக் லைஃப்' திர... மேலும் பார்க்க

மெட்ரோ விபத்து: 4 பொறியாளர்கள் பணிநீக்கம்! எல்&டி-க்கு ரூ. 1 கோடி அபராதம்!

சென்னை மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியின்போது ஏற்பட்ட விபத்து தொடர்பாக 4 பொறியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 3 வழித்தடங்களில் நடைபெற்று வருகிறது.கடந்... மேலும் பார்க்க

திமுக அரசு என்றாலே தொழில் வளர்ச்சிதான்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!

தொழில் துறையில் தமிழ்நாடு மாபெரும் வளர்ச்சி பெற்றுள்ளதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியுள்ளார். சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் சர்வதேச இயந்திர கருவிகள் கண்காட்சியை முதல்வர் மு.க... மேலும் பார்க்க