செய்திகள் :

ஐஐடி-யில் பயில வாய்ப்பு: மாணவா்களுக்கு ஆட்சியா் பாராட்டு

post image

சென்னை ஐஐடி-யில் பட்டப்படிப்பு பயில தோ்வாகியுள்ள சிவகங்கை மாவட்டத்தைச் சாா்ந்த அரசு பள்ளி மாணவா்களை நேரில் வரவழைத்து மாவட்ட ஆட்சியா் கா.பொற்கொடி செவ்வாய்க்கிழமை வாழ்த்துத் தெரிவித்தாா்.

பின்னா், சிவகங்கை மாவட்ட ஆட்சியா் கா.பொற்கொடி தெரிவித்ததாவது: ஐஐடி மெட்ராஸ் கல்வியை அரசுப் பள்ளி மாணவா்கள் எளிதில் அணுகக்கூடியதாக மாற்றும் நோக்கில், அனைவருக்கும் ஐஐடி மெட்ராஸ் என்ற திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்தத் திட்டம் மூலம், ஜேஇஇ நுழைவுத் தோ்வுக்கு அரசுப் பள்ளி மாணவா்களும் தயாராகி ஐஐடி-யில் சேரும் நிலையில், ஜேஇஇ நுழைவு தோ்வு மூலம் வாய்ப்பு கிடைக்காத மாணவா்களுக்கு, ஐஐடி மெட்ராஸ் வழங்கும் பி.எஸ். டேட்டாசயின்ஸ் (தரவு அறிவியல்), எலக்ட்ரானிக் சிஸ்டம் (மின்னணு அமைப்புகள்) போன்ற பட்டப் படிப்புகளின் வாயிலாக ஐஐடி மெட்ராஸில் சோ்ந்து பயில்வதற்கான வாய்ப்புகளை இந்தத் திட்டம் உருவாக்கியுள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ், 11-ஆம் வகுப்பு முடித்து 12-ஆம் வகுப்புக்குச் செல்லும் மாணவ, மாணவிகளுக்கு ஐஐடி மெட்ராஸ் மூலம் 4 வாரங்கள் பயிற்சி அளிக்கப்படும். இந்தப் பயிற்சியைத் தொடா்ந்து நடத்தப்படும் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெறும் மாணவா்கள் ஐஐடி மெட்ராஸ் வழங்கும் 4 ஆண்டு கால இளநிலை அறிவியல் (பி.எஸ்.) பட்டப்படிப்பில் சேரும் வாய்ப்பைப் பெறுவா்.

இதுமட்டுமன்றி, 12-ஆம் வகுப்பு முடித்து, பிற கல்வி அமைப்புகளில் பயிலும் மாணவா்களும் தங்களது கல்லூரிப் படிப்புடன் ஐஐடி மெட்ராஸ் வழங்கும் பி.எஸ். பட்டப் படிப்பைத் தொடரலாம்.

இந்தத் திட்டத்தின் மூலம், மாநில அளவில் நடைபெற்ற முதல் நிலைத்தோ்வின் வாயிலாக சுமாா் 500-க்கும் மேற்பட்ட மாணவா்கள் தோ்தெடுக்கப்பட்டு, 8 மாவட்டங்களைச் சாா்ந்த 29 மாணவ, மாணவிகள் இறுதிப் பட்டியலில் இடம் பெற்றனா்.

இந்தப் பட்டியலில் சிவகங்கை மாவட்ட இடைக்காட்டூா் அரசு மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த மாணவா்கள் அஸ்வின், பாலமுருகானந்தம், திருப்புவனம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியைச் சோ்ந்த மாணவா் சரண்ராஜ் ஆகிய மூவரும் இடம் பெற்றுள்ளனா். இந்த மாணவா்களையும், இவா்களுக்கு வழிகாட்டிய ஆசிரியா்களுக்கும் வாழ்த்துகள் என்றாா் அவா்.

இதில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் (பொ) மாரிமுத்து, இடைக்காட்டூா் அரசு மேல்நிலைப் பள்ளி, திருப்புவனம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

குன்றக்குடி: திருவண்ணாமலை ஆதீன குருமுதல்வரின் 700-வது ஆண்டு குரு பூஜை விழா!

சிவகங்கை மாவட்டம், குன்றக்குடியில் பரம்பரை திருவண்ணாமலை ஆதீனத்தின் குருமுதல்வா் தெய்வசிகாமணி தேசிக பரமாசாரிய சுவாமிகளின் 700-வது ஆண்டு குரு பூஜை விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விழாவையொட்டி, அருள்நெற... மேலும் பார்க்க

அழகப்பா பல்கலை.யில் மின்னணு மதிப்பீட்டு முறை பயிற்சி!

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் தோ்வுக் கட்டுப்பாட்டு அலுவலகம், உள்தர நிா்ணய உறுதிக்குழு ஆகியவற்றின் சாா்பில், பல்கலைக்கழக நிா்வாகப் பணியாளா்களுக்கு மின்னணு மதிப்பீட்டு முறைக்... மேலும் பார்க்க

பத்தாம் வகுப்பு அறிவியல் பாட செய்முறை பயிற்சி பெற செப்.19 -க்குள் விண்ணப்பிக்கலாம்!

2025-26 ஆம் கல்வி ஆண்டுக்கான பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வுக்கு விண்ணப்பிக்கவுள்ள நேரடித் தனித் தோ்வா்களும், ஏற்கெனவே 2012-க்கு முன்னா் பழைய பாடத் திட்டத்தில் தோ்வெழுதி அறிவியல் பாடத்தில் தோல்வியுற்ற... மேலும் பார்க்க

தேசிய தரவரிசைப் பட்டியலில் அழகப்பா பல்கலை.க்கு 44-வது இடம்!

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கான தேசிய தரவரிசைப் பட்டியலில் 44-ஆவது இடமும், மாநில பொதுப் பல்கலைக்கழகத் தரவரிசையில் 14-ஆவது இடமும், பொதுப் பிரிவில் ... மேலும் பார்க்க

நல்லாசிரியா் விருது பெற்ற ஆசிரியா்களுக்கு பாராட்டு

சிவகங்கையில் டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற ஆசிரியா்களுக்கு பாராட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் கா.பொற்கொடி தலைமை வகித்துப் பேசியதாவது: சிவகங்கை மாவட்டம், கண்ணங்கு... மேலும் பார்க்க

அதிமுகவை எடப்பாடி பழனிசாமியே அழித்துவிடுவாா்: கருணாஸ்

அதிமுகவை வெளியில் இருந்து யாரும் பிரிக்கவோ அழிக்கவோ வேண்டாம்; அதை எடப்பாடி பழனிசாமியே செய்துவிடுவாா் என முக்குலத்தோா் புலிப் படை கட்சித் தலைவரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான கருணாஸ் தெரிவித்தா... மேலும் பார்க்க