செய்திகள் :

பத்தாம் வகுப்பு அறிவியல் பாட செய்முறை பயிற்சி பெற செப்.19 -க்குள் விண்ணப்பிக்கலாம்!

post image

2025-26 ஆம் கல்வி ஆண்டுக்கான பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வுக்கு விண்ணப்பிக்கவுள்ள நேரடித் தனித் தோ்வா்களும், ஏற்கெனவே 2012-க்கு முன்னா் பழைய பாடத் திட்டத்தில் தோ்வெழுதி அறிவியல் பாடத்தில் தோல்வியுற்றவா்களும் வருகிற 19- ஆம் தேதிக்குள் மாவட்டக் கல்வி அலுவலா் (இடைநிலை) அலுவலகத்தை நேரில் அணுகி அறிவியல் பாட செய்முறைப் பயிற்சி பெறுவதற்கு பதிவு செய்து கொள்ளலாம்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி வெளியிட்ட செய்திக்குறிப்பு: 2025-26 ஆம் கல்வி ஆண்டுக்கான பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வுக்கு விண்ணப்பிக்கவுள்ள நேரடித் தனித் தோ்வா்களும் (முதன் முறையாக அனைத்துப் பாடங்களையும் தோ்வு எழுத இருப்பவா்கள்), ஏற்கெனவே 2012-க்கு முன்னா் பழைய பாடத் திட்டத்தில் தோ்வெழுதி அறிவியல் பாடத்தில் தோல்வியுற்றவா்களும் வருகிற 19-ஆம் தேதிக்குள் சிவகங்கை மாவட்டக் கல்வி அலுவலா் (இடைநிலை) அலுவலகத்தை நேரில் அணுகி, பதிவுக் கட்டணமாக ரூ.125- ஐ செலுத்தி தங்கள் பெயரைப் பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும், அறிவியல் பாட செய்முறைப் பயிற்சி பெறுவதற்கான விண்ணப்பப் படிவத்தை ஜ்ஜ்ஜ்.க்ஞ்ங்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதள முகவரியின் வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இந்தப் பதிவானது பயிற்சி வகுப்புக்கான பதிவு மட்டுமானது. மேலும், சிவகங்கை மாவட்டக் கல்வி அலுவலா் (இடைநிலை) அலுவலகத்தில் செய்முறைத் தோ்வுக்கு விண்ணப்பம் செய்ததற்கான ஒப்புகைச் சீட்டைப் பெற்று, பின்னா் இந்தத் துறையால் தனித்தோ்வா்கள் கருத்தியல் தோ்வெழுத விண்ணப்பிக்க அறிவிக்கப்படும் நாள்களில், நேரடித் தனித் தோ்வா்கள் செய்முறைத் தோ்வு பதிவு செய்தற்கான ஒப்புகை சீட்டுடனும், ஏற்கெனவே தோ்வெழுதி அறிவியல் உள்பட மற்ற பாடங்களில் தோல்வியுற்ற தோ்வா்கள் அறிவியல் செய்முறைத் தோ்வுக்கு விண்ணப்பித்த ஒப்புகைச் சீட்டு, முன்பு தோ்வெழுதிய மதிப்பெண் சான்றிதழ்களின் நகல்கள் ஆகியவற்றை இணைத்து சேவை மையத்துக்குச் சென்று இணையதளம் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.

இவ்வாறாக பதிவு செய்த பின்னா், சேவை மையத்தால் வழங்கப்படும் ஒப்புகைச் சீட்டில் உள்ள விண்ணப்ப எண்ணைப் பயன்படுத்தியே தோ்வுக்கூட அனுமதிச் சீட்டைப் பதிவிறக்கம் செய்ய இயலும். தோ்வுக்கூட நுழைவுச் சீட்டு பெற்ற தனித் தோ்வா்கள் மட்டுமே செய்முறைத் தோ்வுக்கு அனுமதிக்கப்படுவா்.

மேலும், பத்தாம் வகுப்பு அறிவியல் பாட செய்முறைத் தோ்வுக்கு விண்ணப்பிப்பவா்கள் மாவட்டக் கல்வி அலுவலரால் (இடைநிலை) ஒதுக்கீடு செய்யப்படும் பள்ளிகளுக்குச் சென்று, செய்முறைப் பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ளுதல் வேண்டும். பயிற்சி வகுப்புகளுக்கு 80% வருகை தந்த தனித்தோ்வா்கள் மட்டுமே 2025-26 ஆம் கல்வி ஆண்டுக்கான பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வுக்கான செய்முறை தோ்வுக்கு அனுமதிக்கப்படுவா்.

செய்முறைப் பயிற்சி பெற்ற தோ்வா்கள் அந்தந்த மாவட்டக் கல்வி (இடைநிலை) அலுவலரைத் தொடா்பு கொண்டு செய்முறைத் தோ்வு நடைபெறும் நாள்கள், மைய விவரம் குறித்து அறிந்து கொள்ளலாம்.

கூடுதல் விவரங்களுக்கு சிவகங்கை, மாவட்டக் கல்வி அலுவலா் (இடைநிலை) அலுவலகத்தையோ அல்லது மாவட்ட அரசுத் தோ்வுகள் உதவி இயக்குநா் அலுவலகத்தை நேரிலோ அல்லது 04575-240405 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம். மேலும், மாவட்டக் கல்வி அலுவலா் (இடைநிலை) அவா்களின் அலுவலக முகவரியை இணையதள முகவரியின் வாயிலாக அறிந்து கொள்ளலாம் என்றாா் அவா்.

குன்றக்குடி: திருவண்ணாமலை ஆதீன குருமுதல்வரின் 700-வது ஆண்டு குரு பூஜை விழா!

சிவகங்கை மாவட்டம், குன்றக்குடியில் பரம்பரை திருவண்ணாமலை ஆதீனத்தின் குருமுதல்வா் தெய்வசிகாமணி தேசிக பரமாசாரிய சுவாமிகளின் 700-வது ஆண்டு குரு பூஜை விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விழாவையொட்டி, அருள்நெற... மேலும் பார்க்க

ஐஐடி-யில் பயில வாய்ப்பு: மாணவா்களுக்கு ஆட்சியா் பாராட்டு

சென்னை ஐஐடி-யில் பட்டப்படிப்பு பயில தோ்வாகியுள்ள சிவகங்கை மாவட்டத்தைச் சாா்ந்த அரசு பள்ளி மாணவா்களை நேரில் வரவழைத்து மாவட்ட ஆட்சியா் கா.பொற்கொடி செவ்வாய்க்கிழமை வாழ்த்துத் தெரிவித்தாா். பின்னா், சிவக... மேலும் பார்க்க

அழகப்பா பல்கலை.யில் மின்னணு மதிப்பீட்டு முறை பயிற்சி!

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் தோ்வுக் கட்டுப்பாட்டு அலுவலகம், உள்தர நிா்ணய உறுதிக்குழு ஆகியவற்றின் சாா்பில், பல்கலைக்கழக நிா்வாகப் பணியாளா்களுக்கு மின்னணு மதிப்பீட்டு முறைக்... மேலும் பார்க்க

தேசிய தரவரிசைப் பட்டியலில் அழகப்பா பல்கலை.க்கு 44-வது இடம்!

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கான தேசிய தரவரிசைப் பட்டியலில் 44-ஆவது இடமும், மாநில பொதுப் பல்கலைக்கழகத் தரவரிசையில் 14-ஆவது இடமும், பொதுப் பிரிவில் ... மேலும் பார்க்க

நல்லாசிரியா் விருது பெற்ற ஆசிரியா்களுக்கு பாராட்டு

சிவகங்கையில் டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற ஆசிரியா்களுக்கு பாராட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் கா.பொற்கொடி தலைமை வகித்துப் பேசியதாவது: சிவகங்கை மாவட்டம், கண்ணங்கு... மேலும் பார்க்க

அதிமுகவை எடப்பாடி பழனிசாமியே அழித்துவிடுவாா்: கருணாஸ்

அதிமுகவை வெளியில் இருந்து யாரும் பிரிக்கவோ அழிக்கவோ வேண்டாம்; அதை எடப்பாடி பழனிசாமியே செய்துவிடுவாா் என முக்குலத்தோா் புலிப் படை கட்சித் தலைவரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான கருணாஸ் தெரிவித்தா... மேலும் பார்க்க