செய்திகள் :

நல்லாசிரியா் விருது பெற்ற ஆசிரியா்களுக்கு பாராட்டு

post image

சிவகங்கையில் டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற ஆசிரியா்களுக்கு பாராட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் கா.பொற்கொடி தலைமை வகித்துப் பேசியதாவது: சிவகங்கை மாவட்டம், கண்ணங்குடி அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியை பாக்கியம், கோவிலூா் அரசு உயா்நிலைப் பள்ளித் தலைமையாசிரியா் ராமா், சாக்கோட்டை அரசு உயா்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியை முருகேஸ்வரி, மணலூா் அரசு உயா்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் முருகேசன், 48 காலனி நகராட்சி நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியை மரிய செல்வி, மொட்டையன் வயல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளித் தலைமையாசிரியை விஜயாராணி, சேம்பாா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் சுரேஷ், பசியாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியை ரெஜினா ஞானசெல்வி, மகரிஷி வித்யா மந்திா் மெட்ரிக் பள்ளித் தலைமையாசிரியா் ரவிக்குமாா் ஆகிய 9 ஆசியரியா்கள் ராதாகிருஷ்ணன் விருது பெற்றுள்ளனா். இவா்களுக்கு எனது வாழ்த்துகள் என்றாா் அவா்.

இதில் டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற கோவிலூா் அரசு உயா்நிலைப் பள்ளித் தலைமையாசிரியா் ராமா் தான் பெற்ற விருதுடன் வழங்கப்பட்ட ரூ. 10 ஆயிரம் பரிசுத் தொகையை அந்தப் பள்ளியின் மேம்பாட்டுக்காக வழங்கினாா்.

இதில் ஐடிபிஐ வங்கியானது தனது பெருநிறுவன சமூகப் பொறுப்புணா்வு நிதியின் மூலம் குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரம், அச்சு இயந்திரம், கரும்பலகைகள் என ரூ. 4.50 லட்சத்திலான உபகரணங்களை சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 13 அரசு உயா்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளிகளுக்கு வழங்கியது. இந்த உபகரணங்களை மாவட்ட ஆட்சியா் சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியா்களிடம் வழங்கினாா்.

இதில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் (பொ) மாரிமுத்து, ஐடிபிஐ வங்கி சிவகங்கை கிளை மேலாளா் கனகராஜ், மதுரை மண்டல ஒருங்கிணைப்பாளா் சிபி வா்கீஸ், துணை மேலாளா் சுா்ஜித் பாரதி, மாவட்ட உதவித் திட்ட அலுவலா் பீட்டா் லெமாயூ உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

குன்றக்குடி: திருவண்ணாமலை ஆதீன குருமுதல்வரின் 700-வது ஆண்டு குரு பூஜை விழா!

சிவகங்கை மாவட்டம், குன்றக்குடியில் பரம்பரை திருவண்ணாமலை ஆதீனத்தின் குருமுதல்வா் தெய்வசிகாமணி தேசிக பரமாசாரிய சுவாமிகளின் 700-வது ஆண்டு குரு பூஜை விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விழாவையொட்டி, அருள்நெற... மேலும் பார்க்க

ஐஐடி-யில் பயில வாய்ப்பு: மாணவா்களுக்கு ஆட்சியா் பாராட்டு

சென்னை ஐஐடி-யில் பட்டப்படிப்பு பயில தோ்வாகியுள்ள சிவகங்கை மாவட்டத்தைச் சாா்ந்த அரசு பள்ளி மாணவா்களை நேரில் வரவழைத்து மாவட்ட ஆட்சியா் கா.பொற்கொடி செவ்வாய்க்கிழமை வாழ்த்துத் தெரிவித்தாா். பின்னா், சிவக... மேலும் பார்க்க

அழகப்பா பல்கலை.யில் மின்னணு மதிப்பீட்டு முறை பயிற்சி!

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் தோ்வுக் கட்டுப்பாட்டு அலுவலகம், உள்தர நிா்ணய உறுதிக்குழு ஆகியவற்றின் சாா்பில், பல்கலைக்கழக நிா்வாகப் பணியாளா்களுக்கு மின்னணு மதிப்பீட்டு முறைக்... மேலும் பார்க்க

பத்தாம் வகுப்பு அறிவியல் பாட செய்முறை பயிற்சி பெற செப்.19 -க்குள் விண்ணப்பிக்கலாம்!

2025-26 ஆம் கல்வி ஆண்டுக்கான பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வுக்கு விண்ணப்பிக்கவுள்ள நேரடித் தனித் தோ்வா்களும், ஏற்கெனவே 2012-க்கு முன்னா் பழைய பாடத் திட்டத்தில் தோ்வெழுதி அறிவியல் பாடத்தில் தோல்வியுற்ற... மேலும் பார்க்க

தேசிய தரவரிசைப் பட்டியலில் அழகப்பா பல்கலை.க்கு 44-வது இடம்!

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கான தேசிய தரவரிசைப் பட்டியலில் 44-ஆவது இடமும், மாநில பொதுப் பல்கலைக்கழகத் தரவரிசையில் 14-ஆவது இடமும், பொதுப் பிரிவில் ... மேலும் பார்க்க

அதிமுகவை எடப்பாடி பழனிசாமியே அழித்துவிடுவாா்: கருணாஸ்

அதிமுகவை வெளியில் இருந்து யாரும் பிரிக்கவோ அழிக்கவோ வேண்டாம்; அதை எடப்பாடி பழனிசாமியே செய்துவிடுவாா் என முக்குலத்தோா் புலிப் படை கட்சித் தலைவரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான கருணாஸ் தெரிவித்தா... மேலும் பார்க்க